தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அங்கு திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த படங்களை ரஜினியே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
பின்னர் சென்னை திரும்பிய அவர் அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சியை தன் பேரன் & குடும்பத்தாருடன் பார்த்தார்.
இந்த நிலையில் நேற்று இரவே 9 -10 மணியளவில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த தகவல் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைவர் எப்படி இருக்கிறார்.? அவருக்கு என்னாச்சு.? என ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தொடங்கினர்.
ரஜினியை பார்க்க அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் வருகை தந்தார். இந்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது அடிக்கடி நடைபெறும் வழக்கமான மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்’ என ரஜினிகாந்த் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்று் அவரே இறங்கி நடந்தே தான் சென்றார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், சென்றனர்.
ஆஸ்பத்திரியில் சாதாரண அறையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. நலமாக இருக்கிறார். இன்று மதியம் வீடு திரும்புவார்” என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் நல்ல முறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என நள்ளிரவில் பேட்டியளித்தார் ஒய் ஜி மகேந்திரன்
“அவரை நேரில் பார்த்தேன்
அவர் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அண்ணாத்தை திரைப்படத்திற்கு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார்” எனவும் ரஜினி உறவினர் ஒய்ஜி மகேந்திரன் ரஜினியை மருத்துவமனையில் சந்தித்தற்குப் பிறகு பேட்டியளித்துள்ளார்.
Y Gee Mahendran talks about Rajinis health after his hospital visit