சாட்சிகள் சொர்க்கத்தில் படத்தில் அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.

சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

Witness in Heaven Trailer and Audio Launch at Australia

ஆர்கே. சுரேஷின் அடுத்த அதிரடி டைசன்; அட்டு டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘அட்டு ‘ படம் பரவலான கவனம் பெற்றது.

இத் திரைப்படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இரண்டாவது திரைப்படம் தொடங்கி விட்டார். ஆர். கே .சுரேஷை நாயகனாக்கி ‘டைசன்’ என்கிற பெயரில் உருவாகிறது .

பிரமாண்டபொருட்செலவில் இப்படம் வளர்கிறது. ‘பில்லாபாண்டி’, ‘வேட்டைநாய் ‘போன்ற பல படங்களில் நாயகனாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில்’அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டுவேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கிறார்கள்.

அஜித்-வினோத் இணையும் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேவி கணவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கவுள்ள ’விசுவாசம்’ படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார் அஜித்.

இப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

அஜித் மற்றும் வினோத் இணையும் இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் அஜித்.

தற்போது ஸ்ரீதேவியின் மரணமடைந்து விட்டார். அவரின் 16ஆம் நாள் நினைவு நாளில் அஜித் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridevi husband Boney Kapoor may produce Ajith 59 movie

அஜித் படத்தில் கூட்டணி; மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வருபவர் பிரபுதேவா.

சில காலங்களுக்கு இயக்குனராக இருந்தவர் தற்போது நடிகராக பிஸியாகி விட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் அஜித் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

விரைவில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இதனையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிது.

இதில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

வில்லு படத்தில் நயன்தாராவை இயக்கியபோது பிரபுதேவா உடன் காதல் கைகூடியது.

அதன்பின்னர் திருமணம் வரை சென்று இந்த ஜோடிகள் திருமணம் செய்யாமல் பிரிந்துவிட்டனர்.

தற்போது இந்த படத்திற்காக இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளைக் கவனித்து வருபவர், தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ்.

அவர்தான் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைத் தயாரித்திருந்தார்.

தற்போது இந்த மூவர் இணையும் படத்தையும் அவரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

சிம்புவை விட்டு பிரிந்த பின் சிம்பு உடன் இணைந்து பணிபுரிந்தார் நயன். எனவே பிரபுதேவாவுடன் இணைவதிலும் எந்த சிக்கலும் இருக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரொபஷன் வேறு, பர்ஷனல் வேறு என்பதே நயன்தாராவின் ரூட்டாம்.

மனதைப் பிழியும் குரங்கணி காட்டுத் தீ.; கமலின் வணக்கமும் அனுதாபமும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு 2 நாட்களாக பரவி வருகிறது.

அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடூபட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.

மொத்தம் 40 மாணவ, மாணவிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐடி ஊழியர்கள் சிலரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

காட்டுத் தீயில் சிக்கிய 21 மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அவர்களது சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Kurangani forest fire and its victims is heart rending. Those with burn injuries should heal fast. I wish them all the best for recovery and rehabilitation. To those bereived families my deepest sympathy.

Kamalhassan reaction to Kurangani hills fire accident

ரஜினியை அடுத்து சூர்யாவை இயக்கும் ரஞ்சித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என இரு படங்களை இயக்கினார் ரஞ்சித்.

மெட்ராஸ் படத்தில் கார்த்தி நடித்திருந்தார். எனவே இவரின் முயற்சியால் சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

ஆனால் அவரே எதிர்பாராத வண்ணம் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

ரஜினி பட வாய்ப்பை மறுக்க வேண்டாம் என சூர்யாவே விட்டுக் கொடுத்தார்.

கபாலி வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் ரஞ்சித்.

காலா படம் அடுத்த மாதம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

எனவே அடுத்து சூர்யா படத்தை இயக்குவார் ரஞ்சித் என சொல்லப்படுகிறது.

After Rajinis Kaala movie Ranjith may direct Suriya

More Articles
Follows