காவிரி பிரச்சினையில் ரஜினி வாய்ஸ் ஒலிக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, பல்வேறு கர்நாடக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு சில கன்னட நடிகர் நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகளுக்கும் ஆதரவாக, ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், மதத்திற்காகவும், ஜாதிக்காகவும், தான் நேசிக்கிற சினிமா நடிகனுக்காகவும், பொங்கி எழும் தமிழக மக்கள், காவிரி பிரச்சினையில் அமைதி காத்து வருவது மிகவும் வேதனையாக உள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்துள்னர்.

அஜித்துக்கு அப்புறம் விக்ரம்; காஜலுக்கு கவலை வேண்டாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கவலை வேண்டாம் படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.

தற்போது சிவா இயக்கும் படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் முதன்முறையாக விக்ரமுடன் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி தயாரிக்க பிரம்மன் பட இயக்குனர் சாக்ரடீஸ் இயக்குகிறார்.

கருடா படத்தில் இணையவிருந்த இந்த ஜோடி தற்போது பெயரிடப்படாத இப்படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூர்யாவுடன் இணையும் கே.எஸ்.ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் எவரும் எதிர்பாராத வகையில் சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.

ஆதவன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவுடன் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் நடிக்க தனுஷுக்கு கன்டிஷன் போட்ட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள ‘தொடரி’ செப்டம்பர் இறுதி வாரத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து ‘கொடி’ படத்தை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இதனிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவையில்லாமல் ராஜ்கிரண் நடிக்கும் பவர் பாண்டி படத்தை இயக்கி வருகிறார்.

வருகிற ஜனவரி முதல் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

பிரபல பிரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதில் தனுஷூடன் UmaThurman‬ மற்றும் ‎Alexandra Daddario‬ ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்பட வாய்ப்பு குறித்து தனுஷ் கூறியதாவது…

இப்பட இயக்குனர் என்னை அணுகிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

இப்படக்குழு நாங்கள் 10 நடிகர்களின் படத்தை அனுப்புகிறோம். நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள் என எங்களுக்கு தெரியும்” என அனுப்பி இருக்கிறார்கள்.

இப்பட இயக்குநரும் 10 படங்களையும் பார்த்துவிட்டு என்னை தேர்வு செய்திருக்கிறார்.

நான் நடித்த எல்லா படங்களையும் பார்த்திருக்கிறார் அவர்.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதை தவிர வேறு எதைப் பற்றியும் பேச அனுமதிக்க மாட்டேன் என்ற நிபந்தனையுடன் என்னிடம் பேசினார்.”

என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால் படம் ரீமேக்; கமல் போல் ரஜினி ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருகின்றன.

இதில் மோகன்லால் நடித்த ஒப்பம் என்ற படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார்.

த்ரில்லர் கதையான இதில் மோகன்லால் பார்வையற்றவராக மோகன்லால் நடித்திருந்தார்.

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்களாம்.

இதற்கான சிறப்பு காட்சியை ரஜினிக்கு திரையிட்டு காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் ரீமேக்கில் கமல் நடித்திருந்தார். பாபநாசம் என்ற பெயரில் வெளியான இப்படம் வெற்றி பெற்றது நாம் அறிந்ததே.

கமல் ஓகே சொன்னதை போல ரஜினி ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷ் வீட்டு திருமணம்; ஜொலித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் அக்காவும், முன்னாள் நடிகை மேனகாவின் மூத்த மகளுமான ரேவதி சுரேஷ், நிதின் மோகன் என்பவரை மணந்தார்.

மணமகள் ரேவதி சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணம் நேற்று குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.

இதில் மலையாள நட்சத்திரங்கள் மம்மூட்டி, மோகன்லால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழக விஐபியான ரெமோ நாயகன் சிவகார்த்திக்கேயன் மாப்பிள்ளை போல வேஷ்டி சட்டையில் ஜொலித்தார்.

அப்போது கீர்த்தியும் அருகில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ஒருவேளை இது ரெமோ படத்தின் புரோமோஷனா இருக்கலாம் என்று கூட அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம்.

More Articles
Follows