மோகன்லால் – மம்மூட்டியா? கன்ப்யூஸ் செய்யும் கபாலி இயக்குனர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் ரஞ்சித் என கூறப்பட்டது.இதனிடையில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் அல்லது மம்மூட்டி படத்தை ரஞ்சித் இயக்குவார் என்ற தகவல்கள் மலையாள திரையுலகில் வலம் வருகின்றன.

இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

முழுமையான ஸ்கிரிப்ட் ரெடியானவுடன் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அட அடுத்த படம் இருக்கட்டும்…

கபாலி ரிலீஸை கரெட்க்டா சொல்லுங்கப்பு…

இனி 24 மணி நேரமும் தியேட்டரில் படம் பார்க்கலாம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மல்டி ப்ளக்ஸ் காம்பக்ஸ், பேங்க் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை இனி 24 மணி நேரம் இயங்க வேணடும் என்றி விவாதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேரம் இயங்கும் நிறுவனங்களால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்பதால், இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இச்சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஹாலிவுட் அப்புறம்; இப்போ ஹாலிவுட் நடிகர்..’ தனுஷ் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கிய தொடரி, துரை செந்தில்குமார் இயக்கிய கொடி, மற்றும் கௌதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

தொடரி ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் தனுஷுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சபாஷ் நாயுடு பேஸா முடிஞ்சிடுது…. கமலின் அடுத்த ஜோடி யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரியான திட்டமிடல் இருந்தால் எதையும் எளிதாக முடித்திடலாம் என்பதற்கு உதாரணமாக சினிமாவில் கமல்ஹாசனை குறிப்பிடலாம்.

படம் தொடங்குவதற்கு முன்பே அனைத்தையும் திட்டங்களையும் கையில் வைத்துக் கொண்டு சபாஷ் நாயுடு சூட்டிங்குக்காக சென்றார்.

இப்போது சூட்டிங் முடிஞ்சிட்டு என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இப்படத்தை டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து உடனே தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம் கமல்.

இது விமானக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் படம் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை தூங்காவனம் பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவிருக்கிறார்.

ஆனால் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால்…? கமலுக்கு ஜோடி கிடையாதாம்.

ரெமோ அப்டேட்ஸ்: அவ்வை சண்முகி – தில்லு முல்லு பட கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸாக நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

இவர் எப்படி பெண்ணாக மாறுகிறார்? எதற்காக மாறுகிறார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். நண்பர்களாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

நரேன் மற்றும் கல்யாணி நடராஜன் கீர்த்தியின் பெற்றோர்களாக நடித்துள்ளனர்.

இப்பட கதைக்கும் நாடகத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளதாம். மௌலி, கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நாடக கலைஞர்களாக வருகிறார்கள்.

இவர்களின் ஆலோசனைப்படிதான் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு, கீர்த்தியின் காதலை பெற போராடுகிறாராம்.

அவ்வை சண்முகி மற்றும் தில்லு முல்லு படங்களில் சினிமா கலைஞராக நாகேஷ் வருவார். அவர்தான் அதில் கமல் மற்றும் ரஜினிக்கு ஐடியா கொடுத்த மாறு வேடத்தில் போக சொல்வார்.

எனவே இதிலும் அப்படங்களைப் போன்று காமெடியில் குறை வைக்காமல் கதையை உருவாக்கி இருக்கிறார்களாம்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒரு ‘பிச்சைக்காரன்’ கோடீஸ்வரன் ஆன கதை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அனைத்து படங்களுமே முதலுக்கு மோசமல் செய்யாமல் வசூலை ஈட்டி வருகின்றன.

இதில் வசூலின் உச்சமாக ‘பிச்சைக்காரன்’ கலெக்சனை வாரி வாரி குவித்து வருகிறான்.

தமிழில் மட்டும்தான் இப்படி என்று பார்த்தால், தெலுங்கில் அதைவிட அதிக வசூலை ஈட்டி ஆந்திர ஹீரோக்களையே அச்சுறுத்தி வருகிறது.

வெறும் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இப்படத்தின் தெலுங்கு உரிமை பெறப்பட்டதாம்.

இதுவரை கிட்டதட்ட ரூ. 20 கோடியை நெருங்கியுள்ளது.

விரைவில் 50வது நாளை இப்படம் தொட உள்ளதால் பிரம்மாண்டமான விழாவுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறதாம்.

இதனால் விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்திற்கும் இப்போதே தெலுங்கு உரிமை பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

More Articles
Follows