தயாரிப்பாளராகிறாரா காமெடி நடிகர் யோகி பாபு..?

தயாரிப்பாளராகிறாரா காமெடி நடிகர் யோகி பாபு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Comedy actor Yogi babu going to produce moviesதமிழ் சினிமாவின் இன்றைய டிரெண்ட் காமெடி நடிகர் யார் என்றால் அது யோகி பாபுதான்.

இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

தற்போது ரஜினியுடன் ‘தர்பார்’, விஜய்யுடன் ‘பிகில்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இவரே தயாரிப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் இந்த செய்தியை யோகி பாபு மறுத்துள்ளார்.

ஒரு படம் தயாரிக்கணும் என நான் நினைக்கவில்லை. அந்தளவு நான் இன்னும் வளரவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.

Will Comedy actor Yogi babu going to produce movies

‘நாடோடிகள் 2’ அதிர்வலையை உண்டாக்கும்… சமுத்திரக்கனி நம்பிக்கை

‘நாடோடிகள் 2’ அதிர்வலையை உண்டாக்கும்… சமுத்திரக்கனி நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samuthirakani talks about Nadodigal 2 and team effectசமுத்திரகனி, சசிகுமார் இணைந்துள்ள நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு ரெடியாக உள்ளது

முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா இதிலும் நடித்துள்ளார்கள் இவர்கள் தவிர அஞ்சலி, அதுல்யா, திருநங்கை நமீதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் சமுத்திரகனி பேசியதாவது…

போராளி படத்திற்கு பிறகு நானும், சசிகுமாரும் தனித்தனி பாதையில் பயணம் செய்தோம்.

நாடோடிகள் 2ம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கதை தயார் செய்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

சரியான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளறது.

இன்றைய அரசியல் அவலம், சமூக சூழல் என எல்லா அம்சங்களும் படத்தில் இருக்கிறது. நிச்சயம் இந்த படம் அதிர்வலைகளை உண்டாக்கும்.

7 பேர் விடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியின் பெயரில் அஞ்சலி, சமூக போராளியாக நடித்திருக்கிறார்.

சசிகுமார் ஜீவா என்கிற போராளியாக நடித்திருக்கிறார். திருநங்கை நமீதா வழியாக அந்த மக்களின் வேதனைகள் சொல்லப்படுகிறது.”

என பேசினார் சமுத்திரக்கனி.

Samuthirakani talks about Nadodigal 2 and team effect

Samuthirakani talks about Nadodigal 2 and team effect

பிகில் விழாவை சரியாக பயன்படுத்தி கொண்டார்.; விஜய்க்கு கமல் பாராட்டு

பிகில் விழாவை சரியாக பயன்படுத்தி கொண்டார்.; விஜய்க்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal wishes Vijay for his speech in Bigil audio launchநேற்று மாலை சென்னையில் பிகில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பன்ச் டயலாக், பாட்டு, அட்வைஸ், அரசியல் என அதிரடி செய்துவிட்டார் விஜய்.

மேலும் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ பற்றியும் பேசினார்.

அதாவது பேனர் வைக்க சொன்ன குற்றவாளியை அரெஸ்ட் செய்யாமல் லாரி டிரைவரை கைது செய்தமையை கண்டித்தார்.

இதுவே இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளானது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இந்த பேச்சு குறித்து பேசினார்.

அதில் பிகில் இசை வெளியீட்டு விழாவை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் என பாராட்டியுள்ளார் விஜய்.

Kamal wishes Vijay for his speech in Bigil audio launch

சூர்யா-தனுஷுக்கு இடையில் நுழையும் சிவகார்த்திகேயன்

சூர்யா-தனுஷுக்கு இடையில் நுழையும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Dhanush and Sivakarthikeyan movie release newsகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வெற்றிமாறன் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வாரங்களுக்கு பிறகு வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த 2 வாரங்களுக்கு இடையில் உள்ள வெள்ளிக்கிழமையை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியை சிவகார்த்திகேயன் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை படத்தை அன்று வெளியிடுகின்றனர். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இன்று இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Suriya Dhanush and Sivakarthikeyan movie release news

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

கோலிவுட்டை மிரட்டும் மாஃபியா டீஸர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mafiaசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் “மாஃபியா” டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் “மாஃபியா” டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியசாமான உருவாக்கத்தில் டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் நடக்கும் மோதலையும், படத்தின் தன்மையையும் அட்டகாசமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது டீஸர்.

ஒருபுறம் டீஸருக்கு குவியும் வாழ்த்துக்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் அதே நேரம், இணையத்தில் யூடுயூப் தளத்தில் 2.9 மில்லியன் பார்வைகளை கடந்தும், அதைவிட பெரும் கொண்டாட்டமாக டீஸர் பார்த்து, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்த ஆசிர்வாதம் கொண்ட வாழ்த்துகளும் படக்குழுவை சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

மாஃபியா படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகின்றது. படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளை தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா உடன் ப்ரியா பவானி சங்கர் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பெஜாய் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthibanஇன்று வெளியாகியுள்ள “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தினை முன் திரையிடலில் கண்ட விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இயக்குநர் பார்த்திபன் படம் முழுக்க ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே வரும்படி எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தினை அனைவரும் ஆச்சர்யத்தின் உச்சத்தில் வாய்பிளந்து பாராட்டி வருகிறார்கள். படத்தினை தூக்கி சுமந்து உயிர் தந்திருக்கும் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த ஒற்றைப்படத்தின் மூலம் தன் தரத்தின் அடுத்த உயரத்தை அடைந்திருந்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

படத்தில் பணிபுரிந்தது பற்றி இசையமைப்பாளர் சத்யா பகிர்ந்து கொண்டது….
பல சாதனைகள் புரிந்து, பலரது பாராட்டுக்களையும் பெற்று வரும் இந்தப்படத்தில் பணிபுரிந்ததை நான் மிகுந்த பெருமையாகவும், எனக்கு கிடைத்த கௌரவமாகவும் கருதுகிறேன். இத்தகையதொரு படத்தில் எனது புதுமையான முயற்சிகளுக்கும், யோசனைகளுக்கும் செவிமடுத்த இயக்குநர் பார்த்திபன் சார் அவர்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு திறமையான திரைக்கதை எழுத்தாளர் உள்ளத்தளவில் ஒரு இசைக்கலைஞனும் கூட, அவர் இசை என்பது ஒரு கருவி அல்ல அது படத்தின் உயிர். படத்தில் உலவும் கதாப்பாத்திரம் போன்றது என்பதை அறிவார்.

உண்மையாய் சொல்வதானால் பார்த்திபன் சார் படத்தை பாடல்கள் மற்றும் இசையே இல்லாமல் ரசிகர்கள் ரசிக்க தயாராய் இருப்பார்கள். அவரது திரைக்கதையும், வசனங்களும் ரசிகர்களை சுவாரஸ்யத்தின் உச்சியில் கட்டி வைத்திருக்கும் தன்மைகொண்டது.

முதலில் படத்தின் இசையற்ற பதிப்பை நான் பார்த்தபோது பார்த்திபன் சார் பல இடங்களை வசனங்களே இல்லாமல் இசை நிரப்பிக் கொள்ளும் இடங்களை உருவாக்கி வைத்திருந்தார். எனக்கான தளத்தை உருவாக்கி தந்திருந்தார். இப்போது படத்தினை பார்த்துவிட்டு பின்னணி இசைக்கும் கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் பார்த்திபன் சாருக்கு உரியது. “குளிருது புள்ள” எனும் ஒற்றைப் பாடல் மூலம் அனைவரது பாராட்டைப் பெற்று சந்தோஷ் நாரயணன் அவர்களும் பிரமிப்பை தந்துள்ளார் அவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இயக்குநர் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 அனைத்து தரப்பினரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

More Articles
Follows