தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த புதுச்சேரி மாநிலம் என்பது 4 பகுதிகளை கொண்டது.
அதாவது புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகியவை.
இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ் மொழி பேசப்படுகிறது. மாஹி கேரளாவில் உள்ளதால் மலையாள மொழியும் ஏனாம் ஆந்திராவில் உள்ளதால் தெலுங்கு மொழியும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நான்கு பகுதிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே உள்ளார். 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
புதுச்சேரியில் 23 எம்எல்ஏக்கள்.. காரைக்காலில் 5.. மாஹி மற்றும் ஏனாமில் தலா 1 எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மொத்தம் 30.
(மேலே கண்ட வாக்கியங்களில் கூட புதுச்சேரியில் என்றால் அது மாநிலத்திற்கா? அல்லது அந்த பகுதிக்கு மட்டுமா? என்ற கேள்வி எழ வாய்ப்புள்ளது.)
புதுச்சேரியில் ஒரு திட்டம் அல்லது பொது விடுமுறை அல்லது பள்ளிகள் திறப்பது, உள்ளுர் விடுமுறை அல்லது ஊரடங்கு போன்ற ஏதாவது ஒன்று அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்தால் முதலில் காரைக்கால் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
அண்மைக்காலமாக கொரோனா ஊரடங்கில் திடீரென திடீரென தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது அறிவிக்கப்பட்டவை புதுச்சேரிக்கு மட்டுமா? அல்லது காரைக்காலுக்கு பொருந்துமா? என்ற விவரங்கள் காரைக்கால் மக்களுக்கு தாமதமாகவே வந்தன.
இதற்கு முக்கிய காரணம் புதுச்சேரி என்ற பெயரே.. அதாவது மாநிலத்திற்கும் புதுச்சேரி பகுதிக்கும் ஒரு பெயரே அமைந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை என்பது தலை நகரமாக உள்ளது. கேரளாவை பொறுத்தவரை திருவனந்தபுரம் என்பது தலைநகரமாக உள்ளது.
இதுபோல மாநிலத்திற்கு ஒரு பெயர், தலைநகரத்திற்கு ஒரு பெயர் என்று இருந்தால் நிச்சயம் குழப்பம் வராது.
ஆனால் புதுச்சேரி ன்ற அறிவிப்புடன் ஒரு தகவல் வெளியாகும்போது அது புதுச்சேரிக்கு மட்டுமா? அல்லது புதுச்சேரி மாநிலம் முழுவதுமா? என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே அந்த பகுதிக்கு பாண்டிச்சேரி என்ற பெயரை வைத்துவிட்டு மாநிலத்திற்கு புதுச்சேரி என பெயர் வைத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நிச்சயம் குழப்பம் வராது.
இனி வரும் காலங்களில் இந்த பெயர் பிரச்சினைகளை தவிர்க்கலாமே.
ஆளுநர் மற்றும் முதல்வர் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்களா? என்பதே காரைக்கால் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Will Chief Minister change Puducherry name Karaikal peoples confusion