டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

டாக்டர் பட்டம் பெற்றார் நடிகர் விஜய் விஸ்வா.; ஏன் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை வெஸ்டர்ன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்ற ‘சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்’ சார்பில் சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு கொரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜெ.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் எ.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற ரோட்டரி சங்க மாநில அளவிலான பொதுக்குழு பொதுக்குழுவில் ஆளுநர் ஜெய்கன் மற்றும் பாலகுரு அவர்களது முன்னிலையில் மாநில அளவிலான கௌரவ உறுப்பினர் பதவி நடிகர் விஜய் விஸ்வாவுக்கு வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

Why was Actor Vijay Viswa honoured with doctorate?

JUST IN என் சாவுக்கு அஜித்தே காரணம்.; தல வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற தமிழச்சி (வீடியோ)

JUST IN என் சாவுக்கு அஜித்தே காரணம்.; தல வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற தமிழச்சி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அஜித்துக்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்.

எனவே நடிகர் அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது,

மேலும் வேலைக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் அந்த பெண்ணின் குழந்தையின் படிப்புக்கு உதவுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 4 மாலை நடிகர் அஜித் வீட்டின் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த போலீஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

The women who tried to commit suicide infront of ajith kumar house

JUST IN எஸ்பிபி பாடிய கடைசி பாட்டு..; கனவிலும் நினைக்கவில்லை என ரஜினி உருக்கமான பதிவு

JUST IN எஸ்பிபி பாடிய கடைசி பாட்டு..; கனவிலும் நினைக்கவில்லை என ரஜினி உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை எகிற வைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இறுதியாக பாடிய ‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன்…’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரஜினியின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெற்றுள்ளது.

‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதாக அந்த பாடல் உள்ளது.

பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல ரஜினிகாந்த் – எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த பட பாடலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியும் சூப்பரான பாடல் என்பதால் மறுபக்கம் மகிழ்ச்சியும் கலந்த வண்ணம் ரசிகர்கள் பாடலை கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினி உருக்கமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில்…

“45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth’s emotional post about SPB

ரஜினியின் ‘அண்ணாத்த’ முதல் பாடல்..; தெறிக்க விட்டு நெகிழ வைத்த எஸ்பிபி

ரஜினியின் ‘அண்ணாத்த’ முதல் பாடல்..; தெறிக்க விட்டு நெகிழ வைத்த எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை எகிற வைத்துள்ளது.

அரசியலுக்கு வரமாட்டார் என ரஜினி ஏமாற்றிவிட்டதால் ரசிகர்கள் துவண்டு இருப்பார்கள் என நினைத்தால் அது ரஜினி ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்து செய்துவிட்டது எனலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தை சிவா இயக்க இமான் இசைமையத்து வருகிறார்.

இதில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் இறப்பதற்கு முன் இறுதியாக பாடிய அண்ணாத்த முதல் பாடலும் ரஜினியின் அறிமுக பாடலுமான ‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன்…’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது-

‘அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதா அந்த பாடல் உள்ளது.

பாடலாசிரியர் விவேகா இந்த பாடலை எழுதியிருக்கிறார்.

வழக்கம்போல ரஜினிகாந்த் – எஸ்.பி.பி காம்போவில், அண்ணாத்த பட வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. தன் வசீகர குரலில் பாடலை தெறிக்க விட்டுள்ளார்.

இது நிச்சயம் தியேட்டர்களில் பட்டைய கிளப்பும் என கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இது பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடல் என்பதால் ஒரு பக்கம் நெகிழ்ச்சியும் சூப்பரான பாடல் என்பதால் மறுபக்கம் மகிழ்ச்சியும் கலந்த வண்ணம் ரசிகர்கள் பாடலை கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த பாடல் லிங்க்…

Evergreen Combo of Rajinikanth – SPB Comes to an End

மயில்சாமியை மகிழ்ச்சி சாமியாக மாற்றிய உதயநிதி ஸ்டாலின்

மயில்சாமியை மகிழ்ச்சி சாமியாக மாற்றிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘Article 15″ தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கின்றார். நாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்

தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் மயில்சாமிக்கு தெரிவித்தனர்.

நடிகர் மயில்சாமி தனது பிறந்த நாளை முன்னிட்டு 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார். மேலும் மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார் உதயநிதி .

மயில்சாமி கேக் வெட்டி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ROMEOPICTURES வெளியிடும் இப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

Actor Mayil Samy celebrated his birthday at article 15 sets

இறைவனின் அருளாக மாறிய மகன்.; அனுக்கிரகனுக்கு கை கொடுத்த ஐஸ்வர்யா

இறைவனின் அருளாக மாறிய மகன்.; அனுக்கிரகனுக்கு கை கொடுத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் ‘அனுக்கிரகன்’

திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படமாக ‘அனுக்கிரகன்’ உருவாகியுள்ளது.

இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார் .அவர் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார்.

திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கிக் கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை கற்றவர் இவர்.

‘அனுக்கிரகன் ‘ படத்தில் கதாநாயகன், நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள்.

கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் வழியே புகழ்பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘நாடோடிகள்’ படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர். நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர். இன்னொரு முகம் தீபா. தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர்.

‘றெக்க’ படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா :பாடலில் வருபவரும் ‘மாரி ‘படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார் .மேலும் பல அனுபவமுள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் .

இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் வினோத் காந்தி.
இசையமைத்துள்ளவர் ரெஹான். படத்தில் ஆறு பாடல்கள் மூன்று பிரதான பாடல்களும் மூன்று தீம் சொல்லும் பாடல்களும் உண்டு. எடிட்டிங் SK. சதீஷ் குமார் .நடனம் ரமேஷ்கமல்.

நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது.
விரைவில் திரைகளில் உணர்வுகளைத் தொட வருகிறான் ‘அனுக்கிரகன்’.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். எனவே மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

விரைவில் படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Aishwarya Rajesh released AnuGrahan first look poster

More Articles
Follows