தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தியேட்டர்களில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் போது தியேட்டர்களில் மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று சுப்ரீக் கோர்ட் உத்தரவிட்டது.
இது தொடர்பாக என் தேசப்பற்றை பொது இடத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றார் கமல்.
தற்போது அரவிந்த்சாமியும் இதுகுறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நான் எப்போதுமே தேசிய கீதம் இசைக்கப்படும்போது பெருமையோடு எழுந்து நின்று, பாடுவேன்.
அது தியேட்டர்களில் மட்டும் ஏன் கட்டாயம்? என்பது எனக்கு புரியவில்லை.
ஏன் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு தினமும் இசைக்கக் கூடாது?
இவ்வாறு அரவிந்த்சாமி கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
arvind swamiVerified account @thearvindswami
I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only
arvind swamiVerified account @thearvindswami
Why not everyday in all govt offices, courts, before assembly and parliament sessions?
Why not singing National Anthem in all Govt Offices Says Arvindswami