‘கார்மேக குழலி’ ரித்திகா சிங்கின் டார்லிங் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதிச்சுற்று என்ற தன் முதல் படத்தின் மூலம் தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ரித்திகா சிங்.

இதனையடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.

இதில் இவர் ஏற்ற கார்மேக்குழலி என்ற கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில், விஜய்சேதுபதி என் டார்லிங். சூட்டிங் ஸ்பார்ட்டில் அவருடைய சர்ப்போர்ட் மறக்க முடியாது என்றார்.

தற்போது லாரன்ஸ் உடன் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இந்த கார்மேக அழகி ரித்திகா.

விஜய்-அட்லி கூட்டணியில் இணைவாரா அவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி மற்றும் தெறி படங்களை அட்லி இயக்கினார்.

இவை இரண்டிலும் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் விஜய்யை மீண்டும் அட்லி இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு அவர் தயாராக இருப்பதாக ட்விட்டரில் ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் இவர் விஜய்யுடன் இணைந்து பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரி, ஆண்டவன் கட்டளை… வசூல் நிலவரம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த செப். 22ஆம் தேதி தனுஷ் நடித்த ‘தொடரி’ படமும் செப். 23ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படமும் வெளியானது.

தொடரி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

ஆனால் ஆண்டவன் கட்டளை படத்திற்கு பெரும்பாலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களே வந்துக் கொண்டிருக்கின்றன.

இந்த 4 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,60,06,132 வசூல் செய்துள்ளது தொடரி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் நாளே ரூ 4.45 கோடியையும் இரண்டாவது நாளில் ரூ 3.72 கோடியையும், மூன்றாவது நாளில் ரூ. 4.06 கோடியையும் வசூலித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையிலும், ரூ. 4 கோடியை நெருங்கி உள்ளதாக தெரிகிறது.

எனவே இதுவரை ரூ. 15 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டவன் கட்டளை தமிழக அளவில் முதல் நாளில் ரூ. 2.60 கோடி வசூல் செய்துள்ளது.

அதனை அடுத்து செப். 24ஆம் தேதியில் ரூ. 3.49 கோடியையும் ஞாயிற்றுக்கிழமை (செப். 25) ரூ. 3.80 கோடியையும் ஈட்டியுள்ளது.

ஆக மொத்தம் முதல் மூன்று நாட்களில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது.

‘ரெமோ’ அப்டேட்ஸ்; வேற லெவல் விளம்பரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் ரெமோ.

இப்படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், இன்று சென்சாருக்கு சென்றுள்ளது.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலரை இதுவரை 45 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது.

எனவே படத்தின் புரோமோஷனை சிறந்த முறையில் செய்து வருகிறார் இதன் தயாரிப்பார் ஆர்.டி.ராஜா.

எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மன்மதன் சிலைகள் (CUPID) வைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் குழந்தைகள் முதல் இளைஞர்கள் செஃல்பி எடுத்து வருகின்றனர்.

மேலும் மக்கள் அதிகம் சேரும் இடங்களிலும் ரெமோ விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அஜித்தின் ஆரம்ப கால படங்களில், அவர்களுடன் நடித்தவர் சங்கவி.

அதன்பின்னர் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்தார்.

தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், கொளஞ்சி என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து வருகிறார்.
இதில் இரண்டு குழந்தைகளின் தாயாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்த இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

கொளஞ்சி படம் எனக்கு, 99வது படம். இரண்டு குழந்தைகளுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.

புஷ்பா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். நாத்திகவாதியாக சமுத்திரக்கனி நடிக்கிறார். தன்ராம் சரவணன் இயக்குகிறார்.

அஜித், விஜய்யுடன் நடித்தது குறித்து கேட்டதற்கு…

அமராவதி படத்தில் அஜித்துடன் நடிக்கும்போது நான் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்தேன்.

அவர்கள் இருவரும் இப்படி இவ்வளவு பெரிய நடிகர்களாக வருவார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.
அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியுமே இதற்கு காரணம்.” என்றார் சங்கவி

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடரி படம் வெளியானதை தொடர்ந்து, கொடி படத்தை தீபாவளி விருந்தாக தரவிருக்கிறார் தனுஷ்.

இதனிடையில் ராஜ்கிரண் நடிக்க, பவர் பாண்டி என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வருகிறார்.

விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

இவையில்லாமல், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள ஒரு படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரிக்க போகிறாராம்.

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற தலைப்பை கூட இப்படத்திற்காக தேர்வு செய்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.

கோச்சடையானை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows