அதிக ஓட்டுக்கள் பெற்ற வில்லன் யார்.. பிரகாஷ் ராஜ்-மன்சூர் அலிகான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் இருவர் பிரகாஷ் ராஜ் மற்றும் மன்சூர் அலிகான். இவர்கள் இருவரும் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் யார் அதிகம் வாக்குகள் பெற்றார் என்று பார்ப்போம்…

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவத்தை அடுத்து பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

இதனையடுத்து அவர் திடீரென மக்களை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் 28,906 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

இவரைப்போல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் தொகுதியில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டார் நடிகர் மன்சூரலிகான்.

இவரின் பிரச்சாரம் வித்தியாசமாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மீன் வெட்டுவது, ஓட்டலில் டீ போடுவது, பரோட்டா போடுவது என மக்களை கவர்ந்து வாக்குகளை சேகரித்தார்.

அதன்படி தேர்தலில் நான்காவது இடம் பெற்ற மன்சூரலிகான், 54,957 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

அந்த வகையில் பிரகாஷ்ராஜை விட அதிகப்படியான ஓட்டுகளை பெற்றுள்ளார் மன்சூரலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-அஜித் பட பாணியில் விஜய்யின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அட்லி இயக்கும் இப்படத்தில் கால்பந்தாட்ட விளையாட்டு முக்கியத்துவத்தை பெறுகிறது.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் நடிக்க ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரையிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாம்.

ரஜினியின் பாட்ஷா, கபாலி, அஜித்தின் பில்லா உள்ளிட்ட படங்கள் டான் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இது முழுக்க முழக்க விஜய் ரசிகர்களை கவரும் ஆக்சன் படம் என கூறப்படுகிறது.

BREAKING தமிழகத்தில் வெற்றிடமில்லை – கமல்; ரஜினியை சீண்டுகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 14 மாதங்களில் 17வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்ட போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார் அவர்.

கோவையில் மட்டும் அதிகபட்சமா ஒன்றரை லட்சம் வாக்குகளை அவரது வேட்பாளர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

பணப் புயலுக்கு நடுவில் இந்த இலக்கை தொட்டதே சாதனை தான், நேர்மைக்கு நாங்கள் தான் “ஏ” டீம் – எதிர்ப்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி –

மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில் தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் –

*தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்* –

தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு என கமல்ஹாசன் கூறினார்.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் தான் விரைவில் அரசியல் இறங்கவுள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார்.

தற்போது கமல் இப்படி பேசியுள்ளதால் இது அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய தேர்தல் முடிவுகள்; மோடி-ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

17-ஆவது மக்களவை தேர்தலில் பாஜ கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 350 இடங்களை பெற்றுள்ளது.

எனவே வருகிற மே 26ஆம் தேதி மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்பார் என தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி தேவையான இடங்களை கூட பெறவில்லை.

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் மெகா வெற்றியை தொண்டர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில்… மரியாதைக்குரிய மோடி அவர்களே மக்களவை தேர்தலில் சாதித்துவிட்டீர்கள். மனப்பூர்வமான வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல் மக்களை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கும் அதன் தலைவர் முக. ஸ்டாலினுக்கும் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்துக்கு முன்னதாக தேர்தல் நிலவரம் குறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கத்துடன் ஆலோசனை செய்தார் ரஜினிகாந்த என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் ராஜவம்சத்தில் இணையும் நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் நடிப்பில் `நாடோடிகள் 2′, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருகிறது.

தற்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.

இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

மகாபாரத கதையில் ஹீரோ துரியோதணன்.; திரவுபதியாக சினேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள மெகா பட்ஜெட் கன்னட படம் குருஷேத்திரா.

இதில் நடிகர் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ளனர். இதன் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

துரியோதணனை நாயகனாக காட்டும் இதில் தர்‌ஷன் அந்த கேரக்டரில் நடித்துள்ளார்.

வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர்.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம்.

More Articles
Follows