தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மேலும் பலர் படு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்.
படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார் ரஜினி.
பின்னர், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.
அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அந்த் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்று கேட்க, “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார்.
“ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என கேட்கிறார்.
“நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று ரஜினி சொன்னதும், `சென்னையிலிருந்து வருவதற்கு 100 நாட்கள் வேண்டுமா? என்கிறார் அவர்.
சரி தம்பி.. என்றபடியே ரஜினி அங்கிருந்து நகர்கிறார்.
தற்போது அந்த இளைஞர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.
அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது.
அவர் அப்படி ரஜினியிடம் கேட்க என்ன காரணம் என அறிந்துக் கொண்டதில்…
`தூத்துக்குடியில் நாங்கள் பல நாட்களாக போராடினோம். ரஜினி அப்போது வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.
இத்தனை நாட்களாக ரஜினி வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை அப்படியே இருந்தால் அவர் வந்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.
போராடத் தெரிந்த எங்களுக்கு வெற்றி பெற முடிந்தது. அதுபோல எங்களைப் பாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்.
போராட்டத்தில் சமூக விரோதிகள் யாருமில்லை. போராட்டத்தில் ஒரு நாளாவது இணைந்து போராடியிருந்தால்தான் அவர் கருத்துச் சொல்லியிருக்கலாம்.
`காலா’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால், அவர் அதற்காக வந்துள்ளார்.
இப்போது நிதியளிக்கிறேன் என்கிறார் அதனால்தான் கோபம் கொண்டு அவரை அப்படி கேட்டேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
Who are You? from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospital