Hot Updates: ரஜினியை பார்த்து யார் நீங்க? என்று கேட்டவர் யார் தெரியுமா?

Hot Updates: ரஜினியை பார்த்து யார் நீங்க? என்று கேட்டவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who are You from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospitalதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படு காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கொடுப்பதாக அறிவித்தார்.

படுகாயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார் ரஜினி.

பின்னர், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார்.

அந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அந்த் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்று கேட்க, “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார்.
“ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என கேட்கிறார்.

“நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று ரஜினி சொன்னதும், `சென்னையிலிருந்து வருவதற்கு 100 நாட்கள் வேண்டுமா? என்கிறார் அவர்.

சரி தம்பி.. என்றபடியே ரஜினி அங்கிருந்து நகர்கிறார்.

தற்போது அந்த இளைஞர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது.

அவர் அப்படி ரஜினியிடம் கேட்க என்ன காரணம் என அறிந்துக் கொண்டதில்…

`தூத்துக்குடியில் நாங்கள் பல நாட்களாக போராடினோம். ரஜினி அப்போது வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

இத்தனை நாட்களாக ரஜினி வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை அப்படியே இருந்தால் அவர் வந்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.

போராடத் தெரிந்த எங்களுக்கு வெற்றி பெற முடிந்தது. அதுபோல எங்களைப் பாத்துக் கொள்ள எங்களுக்கு தெரியும்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் யாருமில்லை. போராட்டத்தில் ஒரு நாளாவது இணைந்து போராடியிருந்தால்தான் அவர் கருத்துச் சொல்லியிருக்கலாம்.

`காலா’ படம் ரிலீஸ் ஆக இருப்பதால், அவர் அதற்காக வந்துள்ளார்.

இப்போது நிதியளிக்கிறேன் என்கிறார் அதனால்தான் கோபம் கொண்டு அவரை அப்படி கேட்டேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

Who are You? from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospital

Who are You from Where you Coming A young boy asked Rajini at Tuticorin Hospital

 

Big Breaking: எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…: ரஜினி ஆவேசம்

Big Breaking: எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்…: ரஜினி ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For each issue protest should not be there says Rajini in angry wayதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரது பேட்டி ஆவேசமாக மாறியது.

தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது.

காவல்துறையினர் சீருடையில் இருக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

போலீசை அடித்தது, ஆட்சியர் அலுவலகம், குடியிருப்பை எரித்தது சமூக விரோதிகள்தான்.” என்றார்.

போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துக் கொண்டது எப்படி ரஜினிக்கு தெரியும் என ஒரு நிருபர் கேட்க, எனக்குத் தெரியும். எனக்கு எல்லாம் தெரியும் என்றார்.

ஜல்லிக்கட்டு போராட்ட இறுதியிலும் சமூக விரோதிகள்தான் அதை திசை திருப்பினார்கள்.

ஏன் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என கேட்டார். அவரை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

எதற்கு எடுத்தாலும் போராட்டங்கள் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று ஆவேசமாக ரஜினிகாந்த் பேசி விட்டு சென்றார்.

For each issue protest should not be there says Rajini in angry way

ஆர்.கே.சுரேஷின் உறவினரை சாம்பியனாக்கும் சுசீந்திரன்

ஆர்.கே.சுரேஷின் உறவினரை சாம்பியனாக்கும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh nephew Roshan as Champion in Suseenthirans movie‘வெண்ணிலா கபடி குழு“ , “ஜீவா“ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார்.

இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன், R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

RK Suresh nephew Roshan as Champion in Suseenthirans movie

சற்குணம் தயாரித்து இயக்கும் களவாணி2 படத்தில் இணைந்தார் ஓவியா

சற்குணம் தயாரித்து இயக்கும் களவாணி2 படத்தில் இணைந்தார் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya joins Kalavani 2 aka K2 shootingவிமல், ஓவியா இணைந்து நடித்த படம் ‘களவாணி’. இப்படத்தின் மூலம் தான் சற்குணம் இயக்குநராக அறிமுகமானார்.

2010-ல் வெளியான இப்படம் கமர்ஷியலாக வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது இதன் 2ஆம் பாகம் உருவாகிவருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே தனது ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் இயக்கி தயாரிக்கிறார்.

முதல் பாகத்தில் இணைந்து நடித்த விமல், ஓவியா .இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

முதலில் ஓவியா மறுத்துவிட்டதாக கூறப்பட்டது

இந்நிலையில் இன்று முதல் இப்பட சூட்டிங்கில் ஓவியா கலந்துக் கொள்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Oviya joins Kalavani 2 aka K2 shooting

சீமானை சுற்றி முகமூடி நபர்கள்; யார் இவர்கள்.? போஸ்டரால் பரபரப்பு

சீமானை சுற்றி முகமூடி நபர்கள்; யார் இவர்கள்.? போஸ்டரால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naam Tamilar Seemans Yaar Ivargal poster goes viralநடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

அந்த கட்சி தொடர்பான பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தினம் தினம் போராட்டங்கள் நடத்தி அறிக்கைகள், பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இவரின் புகைப்படங்கள், பேட்டிகள் தொடர்பான வால் போஸ்டர்களை நாம் அடிக்கடி தெருக்களில் பார்க்கலாம்.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் யார் இவர்கள்..? என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் சீமானை சுற்றி முகமூடி அணிந்த பல பெண்கள் உள்ளிட்ட மர்ம நபர்கள் உள்ளனர்.

மேலும் எங்களை அடக்க நினைப்பது அதிகாரமா? ஆணவமா? என்ற வாசகமும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கும் ஒரு படத்திற்கு யார் இவர்கள்? என பெயரிட்டு இருந்தனர்.

அதில் கடுகு படப்புகழ் சுபிக்ஷா நாயகியாக நடிக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்து வருகிறார்.

ஒருவேளை இந்த படத்துக்கும் அந்த போஸ்டருக்கும் தொடர்பு இருக்குமோ? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Naam Tamilar Seemans Yaar Ivargal poster goes viral

yaar ivargal poster

Breaking: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

Breaking: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்..; உளவுத்துறை மீது ரஜினி குற்றச்சாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speech about Tuticorin Sterlite protestதூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதில் 13 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ரஜினி.

அவர் பேசும்போது…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர்.

உளவுத்துறை சரியான தகவலை முன்பே கொடுத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இறுதியாக சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர்.

சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.

இல்லையென்றால் தமிழகத்திற்கு பெரும் பிரச்சினையாகும்.

ஜனங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.
பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் – ரஜினி
 தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தங்கள் ஆலையை திறக்க நீதி மன்றம் செல்ல நேரிடும்.

நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது

நீதிபதிகளும் மனிதர்களே. அவர்கள் அனுமதி கொடுக்கமாட்டார்கள்.” என்று பேசினார்.

Rajinikanth speech about Tuticorin Sterlite protest

Rajinikanth photos in Thoothukudi (7)

More Articles
Follows