ஆரவ்வை இப்பவும் காதலிக்கிறீங்களா? ஓவியா பதிலால் ஓ போட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ஓவியா.

இந்நிகழ்வின் போது ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி ஆடல் பாடல் என அமர்க்களம் செய்து ரசிர்களை உற்சாகப்படுத்தினார்.

அப்போது சில ரசிகர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடன் இருந்த அனுயாவை ரொம்ப பிடிக்கும். அந்த நிகழ்ச்சி முடியும் வரை அதைப் பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை இருக்கிறது.

மேலும் ஒரு ரசிகர்… “ஆரவ்வை இன்னும் காதலிக்கிறீங்களா” எனக் கேட்டார்.

“எனக்கு உங்கள் அனைவரிடம் இவ்வளவு அன்பு இருக்கும் போது, ஏன் நான் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும்? உங்கள் அனைவரையும் காதலிக்கிறேன்” என்று ஒரே போடாக போட்டார் ஓவியா.

இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் ஓ என சத்தம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அட… ஓவியாவுக்கு நல்லா பேசவும் தெரிஞ்சிருக்கே…

Whether Oviya still love Aarav Here is the answer

பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டுதான் இருக்காங்க… டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா. ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இயக்குனர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரிவேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.

இந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.

சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.. அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர்.

இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.

இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என வாழ்த்தி பேசினார்.

அடுத்ததாக வாழ்த்திப்பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வேம்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப்போவது உறுதி. இந்தப்படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன்.

அதுமட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.

இதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்]நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடி வரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும்.

அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும். இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது” என்று படக்குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

இறுதியாக மேடையேறிய அய்யனார் வீதி’ இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், படக்குழுவினரை வாழ்த்தி பேசியதுடன், அடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள யதார்த்த நிலையையும் சுட்டிகாட்டினார்.

“பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார். அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும் கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும்.

இன்று இந்த விழாவில் இயக்குனரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள். ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்றுபோய்விட கூடாது.

நாளை இந்தப்படம் ரிலீசாவதற்குள் பல பிரசன்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டுமொத்தமாக நீங்கள் அளிக்க வேண்டும்.

பார்த்தால் பசிதீரும் என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால் தான் பசி தீரும்.

உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தா எந்த மோதலையும் ஜெயிக்கலாம்” என படக்குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர்மக்களின் ஆதரவும் இயக்குனருக்கு தொடர்ந்து இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்.

அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை,

படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நகைச்சுவை நடிகர் போண்டாமனியின் மகன் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான்.

படத்தின் கதாநாயகி மகாலட்சுமி வேகமாக பைக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராம்.

இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடைபெற்றபோது, அங்கே ‘வேம்புலி வர்றான்’ என்கிற சாமி பாடல் படமாக்கப்பட்டபோது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீனியர் நடிகரான விஜய் கண்ணன், நிச்சயமாக மழை பெய்யும் பாருங்கள் என கூறினாராம்.

படக்குழுவினர் யாரும் அதை நம்பாத நிலையில், மழை அடித்து ஊற்றியதாம். இதைப்பார்த்து மகிழ்ந்துபோன ஊர்மக்கள் கிடாவிருந்து அளித்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம்..

இயக்குனர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர்.

மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல.. ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்துகொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தை மறக்கிறார்.

அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்.

தயாரிப்பு ; சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ
கதை, திரைகதை இயக்கம் ; ஆகாஷ் சுதாகர்
இசை ; சார்லஸ் தனா
படத்தொகுப்பு ; C.கணேஷ்குமார்
மக்கள் தொடர்பு ; செல்வரகு

முதன்முறையாக விஜய்க்காக தனுஷ் பாடிய சரக்கு பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ், தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாது மற்ற படங்களுக்கும் பாடிக் கொடுப்பது வழக்கம்.

தற்போது தன் நண்பர் விஜய்யேசுதாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படை வீரன் என்ற படத்திலும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அதன்விவரம் வருமாறு….

EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது.

கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார்.

நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக் ராஜாவின் அருமையான டியூனிர்க்கு பிரியனின் வரிகளில் “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்தார் தனுஷ்.

ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை.

இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலிவடிவமைப்பு – S. சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – தில் தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில்.

Dhanush croon for Vijay Yesudas in Padai Veeran movie

விஜய்யின் மெர்சல் டைட்டில் பிரச்சினை; விஷால் முடிவு என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல்’ படத்தலைப்பில் நிலவும் பிரச்சினை என்னவென்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தனது படத்தின் பெயரில் இருந்தே மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு வைத்துள்ளார். எனவே ‘மெர்சல்’ படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 22-ம் தேதி) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

‘மெர்சல்’ படத்தலைப்பில் உள்ள பிரச்சினை என்னவென்று, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராஜேந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஏ.ராஜேந்திரன் என்கிற நான் ‘மெர்சலாயிட்டேன்’, ‘நான் மெர்சலாயிட்டேன்’ என இருபெயரில் திரைப்பட தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

மேலும், ‘மெர்சல்’ என இன்னொரு தலைப்பை பதிவு செய்ய முயலும் பொழுது ‘மெர்சல்’ எனது ‘மெர்சலாயிட்டேன்’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளதால் அது சேம்பர், கில்டு மூலமாகவோ ‘மெர்சல்’ என்கிற வார்த்தை பதிவு செய்ய முடியாது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி இல்லாமல் யாரும் பதிவு செய்ய முடியாது.

எனவே, மூன்று தலைப்பை பதிவு செய்ய வேண்டியதில்லை எல்லாமே ஒரே தலைப்புதான் என கூறினீர்கள். சேம்பர், கில்ட் என எல்லோரிடமும் NOC வாங்கி EC Memberகள் கையெழுத்திட்டு எங்களுக்கு தலைப்பை கொடுத்தீர்கள்.

தற்போது வரை எங்கள் திரைப்படத்தின் தலைப்பிற்காக நான் சந்தா தொகையை கட்டி வருகிறேன். அதன்படி இந்த தலைப்பை 27.01.2018 வரை எங்கள் நிறுவனத்திற்குத்தான் உரிமம் உண்டு.

தமிழ்நாடு திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த வாக்குறுதியை ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் அவர்கள் 2016 ஆண்டு இந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்ய முயலும்பொழுது சேம்பரிலிருந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் NOC நிராகரிக்கப்பட்டது.

அதை எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இந்த தலைப்பு AR FILM FACTORY என்கிற நிறுவனத்திற்குத்தான் சொந்தம் என்று கூறியிருக்கிறீர்கள். எங்கள் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் ‘மெர்சல்’ தலைப்பை கொடுக்கவில்லை

நடிகர் விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்காக ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டபொழுது அப்பொழுதும் NOC தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கவில்லை. நிராகரிக்கப்பட்டது. நாங்களூம் கொடுக்கவில்லை நிராகரித்துவிட்டோம்.

தற்போது 20/06/2017 அன்று TSL நிறுவனம், விஜய் நாயகனாக நடிக்க இயக்குநர் அட்லீ ‘மெர்சல்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. சவுத் இந்தியன் சேம்பரில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து NOC வாங்காமல் TSL நிறுவனம் ‘மெர்சல்’ என்கிற தலைப்பில் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக 21/06/2017 அன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று ஞானவேல்ராஜா அவர்களிடம் என்னுடைய பிரச்சனையை கூறி எங்கள் திரைப்படத்தின் எல்லா விவரங்களையும் ஒப்படைத்தேன்.

அதற்கு தயாரிப்பாளர் சங்கம் எனது புகாரை கொடுத்ததிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் தற்போதுவரை எனக்கு பதில் தரவில்லை. எங்களுக்கு இந்த புகாரின் பெயரில் இதுவரை தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று எழுத்துபூர்வமாக பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

TSL நிறுவனத்திற்கு தலைப்பு சம்பந்தமாக நாங்கள் NOC கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் தற்போது மீண்டும் ‘மெர்சல்’ தலைப்பில் 20.08.2017 அன்று பாடல்களை வெளியிடப்போவதாக எல்லா பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் ‘மெர்சல்’ என்கிற தலைப்பு வைத்தால், என்னுடைய படம் பாதிக்கப்படும் பெரும் பணம் முதலீடு செய்திருப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். தயாரிப்பாளர் சங்கம் சிறு தயாரிப்பாளர்களின் நியாயத்தை கேட்க வேண்டும்.

ராமசாமி என்கிற நபர் தங்களது சுயநலத்திற்காக சேம்பர் சங்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா. தற்போது அவர் சேம்பரில் செயலாளராக உயர்பதவியில் இருக்கிறார்.

2016-ல் தியாகராஜனுக்கு தலைப்பைக் கொடுக்காத இதே சேம்பர் TSL தயாரிப்பாளர் ராமசாமி அவர்களுக்கு சேம்பர் தன்னிச்சையாக உரிமை கொடுத்திருக்கிறதா?

நான் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்து சங்கத்திற்கு நேரில் வந்து புகார் கடிதம் கொடுத்தும் எனது திரைப்படத்தின் தக்க ஆவணங்களை கதிரேசன், ஞானவேல்ராஜா ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றேன்.

ஆயினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு சங்கத்திலிருந்து யாரும் குரல் எழுப்பவில்லை. தயாரிப்பாளர் சங்கம் இதுவரை TSL நிறுவனத்தின் மீது தன்னிச்சையாக செயல்பட்ட சேம்பர் மீதோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள். இதற்கு முன்பு இதுபோல் கில்டில், சேம்பரில் தலைப்பை பதிவு செய்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் நாங்கள் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக ஆகி ஒரு சிறிய முதலீட்டில் படத்தை துவங்கிய பட்சத்தில் 100 திரைப்படம் தயாரித்த பெரிய நிறுவனமான TSL நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் NOC பெறாமல் சேம்பரில் தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது.

எங்களது சிறிய படைப்பை காப்பாற்றிக் கொள்ள உங்களைப் போல நியாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிற நீங்கள் எங்களைப் போல வளரும் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்தப் புகாரை நியாயமான முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….

‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலிக்கு இணையாக சங்கமித்ரா படத்தை எடுக்க தயாரானார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

திரு ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிகிறார்.

உலகப்புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் இதற்கான பர்ஸ்ட் லுக் அறிமுகவிழாவும் நடைபெற்றது.

இதன்பின்னர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்.

எனவே ஸ்ருதிக்கு பதிலாக ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படம் நாளை மறுநாள் செப். 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு.

இதன்பின்னர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு 2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை மகேஷ்பாபுவும் ‘ஸ்பைடர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

More Articles
Follows