தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி.

தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer dhananjayanபிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கான பதிவில், ‘உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

Dhananjayan modi tweet

ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் நடத்திய அஜினோமோட்டோ /MSG விழிப்புணர்வு பிரச்சாரம்.

ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் நடத்திய அஜினோமோட்டோ /MSG விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Divya sathyarajசத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய

உணவு திட்டமான அக்ஷய பாத்தி ராவின் விளம்பரத் தூதுவர். மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள்

பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல்

ஆனது.

இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ(MSG – MONOSODIUM GLUTAMATE) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு

கலந்துரையாடல் நடத்தினார்.

“MSG விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளார் எனினும் , இது குறித்து அதிகாரபூர்வமான கருத்துகள்

இன்றுவரை வெளிவரவில்லை. FDA அஜினமோட்டோவை பொதுவாக அனுமதித்தாலும் அஜினமோட்டோ

உள்ள உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக உபயோகித்தால் அடிவயிற்றில் பிரச்சனைகள், தைரொய்ட்

செயல்பாட்டில் பிரச்சனைகள் ஹார்மோன் சம நிலையற்ற நிலை, சாப்பாடு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள்

வர வாய்ப்பு இருக்கிறது .குழந்தைகளும் , கர்பிணி பெண்களும் அஜினமோட்டோ உள்ள உணவுகளை

அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”.

உலக அமைதிக்காக ஜேம்ஸ் கேமரூனுடன் இணையும் தமிழ் பெண் இசையமைப்பாளர்

உலக அமைதிக்காக ஜேம்ஸ் கேமரூனுடன் இணையும் தமிழ் பெண் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer SJ Janani team up with James Cameron for World Peace இசையை ஒரு கடல் என்று சொல்வார்கள்.. ஆனால் ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என இசைக்கடலில் முங்கி முத்தெடுத்து பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் தான் எஸ்.ஜே.ஜனனி.

கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார் என்றால் இதைவிட மிகப்பெரிய சாதனை வேறு ஏதும் இருக்க முடியாது.

அதேபோல இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைமாமணி விருது என இந்திய விருதுகள் பலவற்றுக்கு சொந்தக்காரரான இந்த எஸ்.ஜே.ஜனனி இசைத்துறையில் எந்த பின்னணியும் இல்லாமல் தானாகவே முன்னேறி இவ்வளவு சாதனைகளை செய்துள்ளார் என்பதுதான் இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்.

சிறுவயதிலேயே இவர் உருவாக்கிய பூங்காற்று என்கிற ஆல்பத்தில் அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார் என்பது இன்னுமொரு ஆச்சரியம் இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் அதுமட்டுமல்ல இவரே இசையமைத்து பாடிய, புதிய உலகம் மலரட்டுமே என்கிற பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் “க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்” (Global Peace Song Awards) அமைப்பு “உலக அமைதிப் பாடல் விருதினை வழங்கியுள்ளது.

இந்தியாவில் அதில் தமிழகத்திலிருந்து சென்ற ஒரு தமிழ் பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது மிகப் பெருமையான விஷயம்..

அதுமட்டுமல்ல கலிபோர்னியாவில் உள்ள “ப்ராஜக்ட பீஸ் ஆன் எர்த்” (Project Peace On Earth) என்கிற அமைப்பு இவரை உலக அமைதி இசை தூதுவர்களில் ஒருவராகவும் அந்த அமைப்பின் ஆலோசனை குழுவில் உறுப்பினராகவும் நியமித்துள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்கள் இடம் பெற்றுள்ள அந்த குழுவில் இந்தியாவிலிருந்து பங்கேற்றுள்ள ஒரே நபர், அதிலும் ஒரு பெண் உறுப்பினர் என்கிற பெருமையும் தமிழகத்தை சேர்ந்த ஜனனிக்கு கிடைத்துள்ளது.

மேலும் பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழக மாணவியான இவருக்கு தற்போது விருது பெற்றுத்தந்துள்ள ‘புதிய உலகம் மலரட்டுமே’ என்கிற இந்தப்பாடல் பிரம்மா குமாரிகள் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்கு பெற்றன. அதில் முதல் பத்து இடத்தில் நாமினேட் செய்யப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் மூலம் இந்த பாடல் இறுதிப்போட்டியிலும் தேர்வாகி இந்த விருதை பெற்றுள்ளது..

இதையடுத்து எஸ்.ஜே.ஜனனியை கௌரவிக்கும் விதமாக பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம் அமைப்பின் சார்பாக வரும் அக்டோபர் 20ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர்.. சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

நிறைய விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ள ஜனனி, கடந்த டிசம்பரில் வெளியான பிரபா என்கிற படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.. மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா கடைசியாக பாடல் பாடியது இந்த படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல மகாகவி பாரதியாரின் வந்தே மாதரம் என்கிற இசை ஆல்பத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த ஆல்பத்தில் உள்ள மன்னன் இமயமலை எங்கள் மலையே என்கிற பாடலை கேட்டுவிட்டுத்தான் இவருக்கு பிரபா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வந்ததாம்.

“ஐந்து வயதில் இருந்தே எல்லாவிதமான மேடை கச்சேரிகளும் செய்து வருவதால், அனைத்து விதமான பாடல்களுடனும் இசையுடனும் பயணித்து வருவதாலும் சினிமாவில் இசை அமைப்பதற்கு எனக்கு எந்த வித சிரமமும் ஏற்படவில்லை.. அதுமட்டுமல்ல எனது குரு பாலமுரளிகிருஷ்ணா எனக்கு நிறையவே ஊக்கம் தந்தார்” என்கிறார் எஸ்.ஜே.ஜனனி.

மேலும் இஅவரது மாமா சங்கர் கணேஷ் இவரது ஒவ்வொரு முயற்சியிலும் இவரை உற்சாகப்படுத்தி பின்னணியில் மிகப்பெரிய தூணாக இருந்து வருகிறார். இதையடுத்து சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தாலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இசையமைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் எஸ்.ஜே.ஜனனி.

Music Composer SJ Janani team up with James Cameron for World Peace

யோஹன் விஜய் வேடத்தில் ‘பப்பி’ வருண்; கௌதம் மேனன் முடிவு

யோஹன் விஜய் வேடத்தில் ‘பப்பி’ வருண்; கௌதம் மேனன் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautham Menon revives Vijays Yohaan with Puppy hero Varun கமல், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினாலும் இன்னும் ரஜினி அண்ட் விஜய் உடன் கௌதம் மேனன் பணியாற்றவில்லை.

இவர் இயக்கியுள்ள தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் 15ல் வெளியாகும் என அறிவித்தார். மேலும் விக்ரமின் துருவ நட்சத்திரம் படமும் தயாராகி வருகிறது.

ஆனால் விஜய்யுடன் இவர் இணையவிருந்த யோஹன்: அத்தியாயம் ஒன்று படம் பல வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு அப்படியே நின்று போனது.

கதையில் விஜய் நிறைய மாறுதல் சொன்னதால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை தொடங்கியுள்ளார் கௌதம் மேனன்.

இந்த படத்தில் பப்பி பட ஹீரோ வருண் நாயகனாக நடிக்கிறார்.

விஜய்க்காக எழுதப்பட்ட யோஹன்: அத்தியாயம் ஒன்று பட கதையை தான் வருண்க்காக கௌதம் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Gautham Menon revives Vijays Yohaan with Puppy hero Varun

இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2 வருதாம்.; ஹீரோ யாரு?

இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2 வருதாம்.; ஹீரோ யாரு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh to direct Iruttu Araiyil Murattu Kuthu sequelசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

இந்த படத்தை முழுக்க முழுக்க பிட்டு படம் போல் டபுள் மீனிங்கில் எடுத்திருந்தார்.

பல நெகட்டிவ் கமெண்டுகளை இந்த படம் பெற்றாலும் இளைஞர்களிடையே வெற்றி பெற்றது.

இதன்பின்னர் ஆர்யா, சாயிஷா இணைந்த கஜினிகாந்த் படத்தை இயக்கினார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் முரட்டு குத்து குத்த இருட்டு அறைக்கு செல்கிறார்.

அட அதாங்க இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

பேண்டசி ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்கவில்லையாம்.
மாறாக புதுமுக நடிகர்களை போட்டு படத்தை எடுக்கவுள்ளாராம்.

இந்த படம் என்ன என்ன சர்ச்சைகளை ஏற்படுத்த போகிறதோ..?

Santhosh to direct Iruttu Araiyil Murattu Kuthu sequel

இந்தியன் 2 படத்தில் 90 வயது கமலுக்கு ரூ 40 கோடியில் சண்டைக் காட்சி

இந்தியன் 2 படத்தில் 90 வயது கமலுக்கு ரூ 40 கோடியில் சண்டைக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian 2 team ready to shoot Rs 40 crore action sequence at Bhopalபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை முடித்து விட்டு தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் முழு கவனத்தை செலுத்0தி வருகிறார். இப்படத்திற்காக 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமலுடன் காஜல், சித்தார்த், விவேக், டெல்லி கணேஷ், பிரியா பவானி சங்ர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

லைகா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் பொள்ளாச்சி மற்றும் சென்னையில் முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டும் ரூ. 40 கோடியை செலவழிக்கின்றனர்.

பீட்டர் ஹெயின் அமைக்கும் இந்த சண்டைக் காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த காட்சியின் படி கமலுக்கு 90 வயது என்பதால் அதற்கேற்ப காட்சிகளை அமைத்து வருகிறாராம்.

ரஜினியின் தர்பார் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை மட்டும் பீட்டர் ஹெயின் தான் அமைத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2 team ready to shoot Rs 40 crore action sequence at Bhopal

More Articles
Follows