தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் மெர்சல் படத்தை பார்த்தனர்.
இதில் வழக்கம்போல ரஜினி பட்டுப்படாமல் ஜிஎஸ்டி பற்றியோ கருத்து சுதந்திரம் பற்றியோ பேசாமல் மெர்சலை பாராட்டிவிட்டார்.
ஆனால் கமல், மெர்சலை படத்தை பார்த்துவிட்டு அந்த குழுவினருடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர் இருந்தது.
இந்த போஸ்டர்தான் தற்போது பலரது கேள்வியாக உள்ளது.
இந்த படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது கமல் அந்த படத்துடன் நிற்க காரணம் என்ன?
சமீபகாலமாக எத்தனையோ புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கும் கமல் இதுபோன்ற பின்னணியில் எந்தவொரு போஸ்டரையும் வைக்காமல் மெர்சல் குழுவை சந்திக்கும்போது மட்டும் இதை வைத்திருப்பதன் நோக்கம் என்ன?
ஏற்கெனவே மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக் என பலராலும் கூறப்பட்டு வந்த நிலையில் அந்த போஸ்டரை அங்கு வைத்து விஜய்-அட்லியை இப்படி காயப்படுத்திவிட்டாரே கமல்? என பலரும் ஆதங்கத்துடன் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
What is the reason behind Apoorva Sagodharargal poster while Kamal met Mersal team