பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் என்ன கொடுத்தார்.?

பிரியா அட்லீ வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் என்ன கொடுத்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கியவர் அட்லி.

இதன்பின்னர் நேரடியாக ஹிந்தியில் படம் இயக்க பாலிவுட் சென்றார்.

ஷாருக்கான் நயன்தாரா விஹய்சேதுபதி நடிக்கும் ‘ஜவான்’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு அட்லீக்கும் பிரியாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது.

தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் அட்லீ.

இந்த நிலையில் பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அட்லீ மற்றும் பிரியாவை வாழ்த்தினார்.

அதோடு அவர்களுக்கு ப்ரியா அட்லி ஓவியத்தை பரிசாக கொடுத்து அசத்தினார்.

இதுதொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி வைரலானது.
Displaying IMG_20221220_184745.jpg.

இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா?. விஜய்ஆண்டனி அதிரடி

இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா?. விஜய்ஆண்டனி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

2016ல் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தின் 2ம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் விஜய் ஆண்டனி.

முதல்பாகம் தெலுங்கு & தமிழில் பெரிய வெற்றி பெறவே இது ஹிந்தி ஒடியா, மராத்தி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக பாத்திமா இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.

தமிழில் பிச்சைக்காரன்-2 – தெலுங்கில் பிச்சஃகாடு-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது.

2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் சேட்டிலைட் டிவி உரிமம் & டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள மொழிகளில் இந்த படம் வெளியாகும்.

Elated to inform you all that Pichaikarran2 will also be released in Hindi by the prestigious RKD Studios as #Pichaikkaran! @rkdstudios Official Hindi Teaser will be launched soon on their YouTube channel! Get ready for something BIG! https://t.co/G71zoT6CJc

#ANTIBIKILI ?

#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
Satellite & Digital rights acquired by Star Network ?

Summer 2023 ?

@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS
@mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute https://t.co/w0YPShC1xy

மேற்கண்ட அறிவிப்புகள் வெளியாகும் முன்னர் இன்று காலை ட்விட்டரில் கீழ்கண்டவாறு விஜய் ஆண்டனி பதிவிட்டு இருந்தார்…

இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???

మీరు అతన్ని కేవలం మరో బిచ్చగాడు అనుకుంటున్నారా???

Today Evening 5pm?

#Pichaikkaran2 #Bichagadu2 #ANTIBIKILI ?

‘பதான்’ தேசபக்திப் படம்… ஆனால்..?! ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

‘பதான்’ தேசபக்திப் படம்… ஆனால்..?! ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் & தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஹிந்தி திரைப்படம், ‘பதான்’.

இதில் இடம்பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

இதில் காவி நிற நீச்சல் உடையணிந்து தீபிகா கவர்ச்சியாக ஆடியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாடலின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என கூறப்படும் நிலையில் படத்தின் வெளியீட்டுக்கு எதிர்ப்பும் கிடைத்துள்ளது.

மேலும் ‘பதான்’ படத்தைப் புறக்கணியுங்கள் என ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் உலையாடி பதிலளித்து வந்தார் ஷாருக்கான்்

அப்போது இந்த படம் குறித்து பேசினார்.

“பதான் தேசபக்திப் படம்தான். ஆனால் வேறு கோணத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.

தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸை தள்ளி வைத்த பஞ்சாயத்து.; நீதிமன்றம் தீர்ப்பு

தனுஷின் ‘வாத்தி’ பட ரிலீஸை தள்ளி வைத்த பஞ்சாயத்து.; நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ”திருச்சிற்றம்பலம் ‘ படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது.

கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த ” நானே வருவேன் ” திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் தேவராளனின் ஆட்டத்திற்கு முன் சரணடைய நேர்ந்தது.

இருப்பினும் அந்த படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ” வாத்தி “. தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ” வா…வாத்தி ” பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் – 2ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் செப்டம்பர் – 19ம் தேதி தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்தது. படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிசம்பர் – 2ம் தேதி உறுதியாக படம் வெளிவரும் என சொல்லப்பட்டது.

இதனை நம்பிய “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் “ என்ற நிறுவனம் சிட்டி, என்.எஸ்.சி நீங்கலாக 5 ஏரியாக்களுக்கு விநியோக உரிமையை கேட்டது.

இதற்கான விலை ரூ.8 கோடி என பேசி முடிக்கப்பட்டு ரூ.3 கோடி முன்பணம் அக்டோபர் – 18ம் தேதி வழங்கப்பட்டது. அக்டோபர் – 24ம் தேதி தீபாவளி என்பதால், தீபாவளிக்கு பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் தரப்பு கூறியதை விநியோக நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இருவாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தை தரவில்லை.

விநியோக நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக நவம்பர் – 6ம் தேதி ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், படம் ஏப்ரல் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என அந்தர் பல்டி அடித்தது.

உடனடியாக மறுப்பு தெரிவித்த விநியோக நிறுவனம், கவர்ச்சிகரமான வட்டி அடிப்படையில் பணம் கடனாக பெறப்பட்டு முன்பணம் அனுப்பப்பட்டுள்ளதால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது என்றும், சொன்னபடி டிசம்பர் – 2ம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்றும், இல்லையென்றால் முன் பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

படத்தை டிசம்பர் – 2ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் விரும்பாததால் முன்பணத்தை உடனே திருப்பித் தந்துவிடுவதாகவும், வட்டி எதுவும் தர முடியாது எனவும் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

இதனை ஏற்று கொண்ட விநியோக நிறுவனம் உடனடியாக பணத்தை கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை என தெரிவித்தது.

ஆனால் சொன்னபடி நவம்பர் – 6ம் தேதி பணத்தை தராமல் நவம்பர் – 23ம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியை தருவதாக தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது. அதனையும் விநியோகம் ஏற்றுகொண்ட நிலையில் சொன்னபடி நவம்பர் – 26ம் தேதி ரூ.1 கோடி பணத்தை திரும்ப தரவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானது விநியோக நிறுவனம்.

இந்நிலையில் படம் பிப்ரவரி – 17ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடுகட்டும் பொருட்டு பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன்பணமாக வைத்து கொள்ளுமாறும் மீதி தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளர்க்கு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிசம்பர் – 8ம் தேதி சென்னை உயர்நிதிமன்றத்தை அணுகி காப்புரிமை சட்டப்படி தங்களது முன்பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் தரப்பை டிசம்பர் – 15ம் தேதி ஆஜராகுமாறு கூறியது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் – 21ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.

காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில் ஐந்து ஏரியா விநியோக உரிமை “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” வசம் உள்ளதால் மீடியேட்டர்களின் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாறவேண்டாம் என விநியோக நிறுவன தரப்பு ஆட்கள் எச்சரிக்கிறார்கள்.

Displaying IMG-20221220-WA0048.jpg.

இடைவேளை இல்லாத நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு இன்டர்வல் டைமிங் இதான்

இடைவேளை இல்லாத நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு இன்டர்வல் டைமிங் இதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘கனெக்ட்’.

இதில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ளனர்.

இந்த படம் கரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. ‘கேம் ஓவர்’ பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

டிசம்பர் 22 ஆம் தேதி ‘கனெக்ட்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

99 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்திற்கு இடைவேளை இல்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எனவே இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

படத்தின் இடைவேளையின் போது தான் தங்களுக்கு கேண்டீனில் வியாபாரம் நடைபெறும். அந்த வியாபாரத்தை விட்டுத்தர முடியாது என்பதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இடைவேளை இல்லாத இந்த படத்திற்கு அவர்களே (தியேட்டரில்) இடைவேளை விடுவார்கள் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி நமக்கு கிடைத்திருந்த தகவல்கள் இங்கே தந்துள்ளோம்…

Nayanthara’s #Connect

1st Half : 59 Mins
2nd Half : 40 Mins
Total Runtime : 99 Mins

In Cinemas From Dec 22nd

விஜய் பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் யூடியுப்பில் செய்த சாதனை.; ரசிகர்கள் குஷி

விஜய் பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் யூடியுப்பில் செய்த சாதனை.; ரசிகர்கள் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில் இதுவரை 3 பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

முதல் பாடல் ‘ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அள்ளியது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார்.

இதன் பின்னர் சிம்பு பாடிய ‘தளபதி தீ தளபதி..’ என்ற பாடல் வெளியானது.

தற்போது சற்றுமுன் சின்ன குயில் சித்ரா பாடிய ‘அம்மா தாலாட்டு…’ பாடல் வெளியானது.

இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் இதுவரை யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.5 கோடி (25 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.

‘ரஞ்சிதமே…’ பாடல் 10 கோடி பார்வைகளை தாண்டியது குறித்து அதன் பாடலாசிரியர் விவேக் கூறியதாவது…

“ரஞ்சிதமே பாடல்… 100 மில்லியனை கடந்துள்ளது. விஜய் சார் என்னை நம்பியதற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

என்னால் கூற முடிந்ததெல்லாம் லவ் யூ விஜய் சார். இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.

என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows