தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ்.
இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பாடலாசிரியர், வசனகர்த்தா முருகன் மந்திரம் பேசியதாவது…
நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படம் மலையாளப் படம் தான். ஆனால், அந்த படத்தின் தலைப்பு தமிழில் இருக்கிறது. கதை தமிழ் நாட்டின் தான் நடக்கிறது.
இனிமேல் மலையாள மக்கள் முழுப்படத்தையும் கூட தமிழில் எடுத்து அதை மலையாளப் படமாக வெளியிட்டாலும் ஆச்சர்யமில்ல. அந்த வகையில் ஆபரேஷன் அரபைமா படக்குழுவில் உள்ள மலையாள சொந்தங்களை நான் தமிழ்நாட்டின் சார்பாக வரவேற்கிறேன்.
இந்த படத்தின் இயக்குநர் பிராஷ் சார் கடற்படையில் வேலை பார்த்துவிட்டு, அரண் என்ற படத்தில் துணை இயக்குனராக வேலை செய்தார். பின்பு, மிலிட்டரி ஆபரேஷன் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் கொச்சின், சென்னை, திருவனந்தபுரம், அந்தமான், துபாய் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் முழுவதும், கடல் வழியாக பெண் கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற விஷயங்களையும் அதிலுள்ள அரசியலையும் பேசும்.
இப்படத்தின் பாடல்கள் எழுத கேரளா சென்றேன். அப்போது என்னுடைய அரசியல் பதிவுகளைப் பார்த்துவிட்டு இந்த படமும் அரசியல் மற்றும் ராணுவ ஆபரேஷன் பற்றி தான் எடுக்கிறோம். ஆகையால், இப்படத்திற்கு நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்று என்று பிராஷ் சார் அழைத்தார்.
ஆசையொரு ஆசை என்ற தாலாட்டு பாடல் எழுதினேன். சின்னக்குயில் சித்ரா அதைப் பாடி இருக்கிறார்கள். அதன் கூடவே அதுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு துள்ளல் பாடலையும் எழுதி இருக்கிறேன்.
பாடல் மதுவை பற்றி எழுத வேண்டும் ஆனால், பெண்ணுக்கும் பொருந்த வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உள்ளேற ஒரு முறை அனுமதி,
பொல்லாத சுகமிது அனுபவி
என்று தொடங்குகிறது அந்தப் பாடல்
ஆபரேஷன் அரபைமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயா அசாத்தியமான திறமை கொண்டவர். உதடு அசைவை வைத்து அதை கவனித்து அப்படியே நடிக்க கூடியவர். அபிநயாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.
இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ் பேசும்போது,
போதை பொருள் கும்பலிடம் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்படத்தின் கதை. இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இங்கே நிற்கிறேன். விரைவில் உங்கள் நடிகனாக நிற்கவேண்டும் என்பது என் ஆசை என்றார்.
Welcoming Malayalis to Tamil Nadu – Murugan manthiram at Operation Arabaima event