இரு தரப்பிலும் பிடிவாதம்.; நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு.. தீர்ப்பளிக்காமல் நீதிபதிகள் விலகல்

இரு தரப்பிலும் பிடிவாதம்.; நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு.. தீர்ப்பளிக்காமல் நீதிபதிகள் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madras high courtகடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்தார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி தரப்பில், தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.

அப்போது, விஷால் தரப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர்.

இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை.

இதையடுத்து, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகி விட்டனர்.

we are not interested to continue nadigar sangam case says high court judges

பாடகர் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம்..; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாடகர் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம்..; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp balasubramaniamகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

இதையே மருத்துவமனை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செப். 24 எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில்….

கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Legendary singer SPB health condition critical now

ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakraவிஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சக்ரா படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 வரை நிறுத்திவைக்க வேண்டும்.

தங்களிடம் கூறிய கதையை கொண்டு சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைடென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

Vishal’s Chakra in trouble; Madras HC issues notice to Vishal

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் பிரபலமான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

Kamal Haasan’s Bigg Boss Tamil Season 4 to premiere on october 4th

என் விடுதலை.. என் ரகசியம்… RTI-யில கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

என் விடுதலை.. என் ரகசியம்… RTI-யில கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikalaகடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றவர் சசிகலா.

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி ஆவார்.

தற்போது சசிகலாவின் 3 ஆண்டுகள் சிறைவாசம் இந்த ஆண்டுடன் முடிவடையவுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து எப்போது விடுதலை என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன.

மேலும் சசிகலா விடுதலை தொடர்பான செய்திகளும்்வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பெங்களூரு சிறைத்துறைக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில்…

தன்னை விடுதலை செய்யும் தேதி தொடர்பாக அறிந்துகொள்ள பலரும் சிறைத்துறைக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பதிவு செய்துள்ளதை நான் அறிவேன்.

அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவும் விளம்பரம் தேடுவதற்காகவுமே தான் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி குறித்து கோரியுள்ளனர்.

ஆனால் தனிமனித ரகசியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.

எனவே தனது விடுதலை தொடர்பான செய்திகள் தனது அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழக்கப்படக்கூடாது.

எனவே சிறைத்துறைக்கு நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தான் விடுதலையாகும் தேதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI மூலம் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது.

இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.

Sasikala Asks Prison Officials to Not Reveal Information on Release Date

கொரோனா ஓவர்.. நல்லா இருக்கேன்..; CM முதல் FANS வரை நன்றி சொன்ன ராமராஜன்

கொரோனா ஓவர்.. நல்லா இருக்கேன்..; CM முதல் FANS வரை நன்றி சொன்ன ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramarajanதிரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

” சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன்.

எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது.

இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் . சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன்.

இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அனலபேசியிலும் . நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் . நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும் . பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும் , மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகரும் இயக்குனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.

Actor Ramarajan thanked CM and his fans

More Articles
Follows