நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்து 120 கோடியை தாண்டியது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3250 திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் மட்டும் முதல்நாளில் இதற்கு முந்தைய கபாலி சாதனையை முறியடித்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீஸில் வேகமாக ரூ. 6 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

5 நாட்களில் ரூ. 6.31 கோடியை சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 60 கோடியை நெருங்கியுள்ளது.

உலகளவில் ரூ. 125 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விவேகம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivegam movie collected nearly Rs 125C world wide

தம்பி இப்படி பண்ணலாமா..? அஜித்துக்கு மன்சூர்அலிகான் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் விவேகம்.

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்த போதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் அஜித்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்…
தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழுப்படத்தையும் அங்குள்ள தொழிலாளர்களை வைத்து எடுத்து விட்டீர்கள்.

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் உள்ளது.

தமிழ்நாட்டில் படமெடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்.

உங்கள் படம் ஓட வேண்டும் என திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயிலுக்கு வந்திருக்க கூடாது.

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான்

Actor Mansoor Ali Khan advice to Ajith regarding Vivegam movie

சாட்சிகளை கலைத்துவிடுவார்; திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இவர் தற்போது கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் உள்ளார்.

இந்நிலையில் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

எனவே இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதற்கு முன்பே கடந்த ஜூலை 15-ம் தேதியும அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் மேனையே மெர்சலாக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெர்சல் படத்தில் விஜய்யுடன் காஜல், சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு கேரக்டரில் விஜய் மேஜிக் நிபுணராகவும் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்த கேரக்டருக்காக விஜய் மேஜிக் கற்றுக் கொண்டாராம்.

இதற்காகவே வெளிநாட்டிலிருந்து 3 மேஜிக் நிபுணர்கள் இந்தியா வந்து விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேஜிக் நிபுணரான கோகோ ரெக்யூம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“ஜோசப் விஜய் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்.

கடந்த 2017 மே மாதம் அவருடன் பணியாற்றியதை மிகப்பெருமையாகக் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Magic Man praises Vijays dedication in Mersal movie

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மீசைய முறுக்கு நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரகுமான் நடித்த `துருவங்கள் 16′ என்ற படத்தின் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பாரக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இவர் அடுத்த இயக்கவுள்ள படத்திற்கு `நரகாசூரன்’ என தலைப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.

ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதில் மீசைய முறுக்கு படப்புகழ் நாயகி ஆத்மிகாவும் இணைந்து இருக்கிறார்.

கௌதம் மேனனின் ஒண்றாகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஊட்டியில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.

Aathmika teams up with Arvindswamy for Naragasooran

டோட்டல் பட்ஜெட்டில் பாதியை அள்ளியது 2.0 படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’2.ஓ’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ. 400 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் இதை அடுத்த 2018 ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் செய்கிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் இதன் மேக்கிங் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டர் வெளியீட்டு உரிமை ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் படத்தின் பட்ஜெட்டில் இதுவரை பாதிவரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பட வெளியீட்டிற்கு முன்பே வியாபார ரீதியாக பல சாதனைகளை 2.ஓ படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

2PointO sold out for Rs 200c till now which is half budget of this movie

More Articles
Follows