ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakraவிஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சக்ரா படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 வரை நிறுத்திவைக்க வேண்டும்.

தங்களிடம் கூறிய கதையை கொண்டு சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைடென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

Vishal’s Chakra in trouble; Madras HC issues notice to Vishal

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் பிரபலமான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

Kamal Haasan’s Bigg Boss Tamil Season 4 to premiere on october 4th

என் விடுதலை.. என் ரகசியம்… RTI-யில கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

என் விடுதலை.. என் ரகசியம்… RTI-யில கேட்டாலும் சொல்லாதீங்க… சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikalaகடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றவர் சசிகலா.

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி ஆவார்.

தற்போது சசிகலாவின் 3 ஆண்டுகள் சிறைவாசம் இந்த ஆண்டுடன் முடிவடையவுள்ளது.

சசிகலா சிறையில் இருந்து எப்போது விடுதலை என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன.

மேலும் சசிகலா விடுதலை தொடர்பான செய்திகளும்்வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பெங்களூரு சிறைத்துறைக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில்…

தன்னை விடுதலை செய்யும் தேதி தொடர்பாக அறிந்துகொள்ள பலரும் சிறைத்துறைக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பதிவு செய்துள்ளதை நான் அறிவேன்.

அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவும் விளம்பரம் தேடுவதற்காகவுமே தான் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி குறித்து கோரியுள்ளனர்.

ஆனால் தனிமனித ரகசியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.

எனவே தனது விடுதலை தொடர்பான செய்திகள் தனது அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழக்கப்படக்கூடாது.

எனவே சிறைத்துறைக்கு நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தான் விடுதலையாகும் தேதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI மூலம் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது.

இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.

Sasikala Asks Prison Officials to Not Reveal Information on Release Date

கொரோனா ஓவர்.. நல்லா இருக்கேன்..; CM முதல் FANS வரை நன்றி சொன்ன ராமராஜன்

கொரோனா ஓவர்.. நல்லா இருக்கேன்..; CM முதல் FANS வரை நன்றி சொன்ன ராமராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ramarajanதிரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

” சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.

அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிவதை கண்டேன்.

எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர். உயர் தர சிகிச்சை அனைவருக்கும் அங்கு கிடைக்கிறது.

இதற்காக மாண்புமிகு முதல்வர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும் . சுகாதார துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு சிகிச்சை முடிந்து இன்று வீட்டிற்கு வந்து விட்டேன்.

இந்த இடைபட்ட நாட்களில் எனக்காக பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், அனலபேசியிலும் . நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் . நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும் . பத்திரிகை மற்றும் ஊடக துறை நண்பர்களுக்கும் , மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிகபெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகரும் இயக்குனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.

Actor Ramarajan thanked CM and his fans

தீப்பெட்டி கணேசனுக்கு அஜித் உதவல..; எல்லாம் பொய்.. சிந்து சொன்ன சீக்ரெட்ஸ்

தீப்பெட்டி கணேசனுக்கு அஜித் உதவல..; எல்லாம் பொய்.. சிந்து சொன்ன சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

angadi theru sindhuஅங்காடி தெரு படம் மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து.

அவருக்கு கேன்சர் என்றும் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை எனவும் சில தினங்களுக்கு செய்தி பரவியது.

இது தொடர்பாக ஒரு நேர்காணல் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில்… ’நான்தான் முதலில் ரேணிகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்தேன். அஜித் செய்தார் என்று சொல்வதெல்லாம் பொய்.” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி கணேசன் வேலை இழந்திருந்தார். அப்போது வறுமையில் தவிப்பதால் அஜித் உதவ கோரி ஒரு வீடியோ வெளியிட்டார்.

அவருக்கு அஜித் உதவி செய்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் நடிகை சிந்து அஜித் உதவி செய்தியை மறுத்திருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

யார் சொல்வது உண்மை?

Ajith didn’t help says Angadi Theru actress Sindhu

10-12 Std ஸ்டூண்டன்ஸ்.. அக்டோபர் 1 முதல் ஆசைப்பட்டா ஸ்கூலுக்கு போங்க.. டவுட்ட க்ளியர் பண்ணிக்குங்க!

10-12 Std ஸ்டூண்டன்ஸ்.. அக்டோபர் 1 முதல் ஆசைப்பட்டா ஸ்கூலுக்கு போங்க.. டவுட்ட க்ளியர் பண்ணிக்குங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn school studentsகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் கிட்டத்தட்ட 7 மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்… அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்து நடத்தலாம் என்று வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

அதன்படி ஒரு பிரிவு மாணவர்களுக்கு திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வர வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் பள்ளிகளில் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு பள்ளிகளில் அமர வைக்க வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்குள் வருவதற்கு முன்பு அவர்களுடைய உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.

மாணவர்கள் வருகைப் பதிவேட்டிற்கான பயோ மெட்ரிக் பதிவு முறையை பயன்படுத்துதல் கூடாது.

பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமிநாசினி சோப் போன்றவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Schools set to reopen from Oct 1 for classes 10 to 12- check complete SOPs here

More Articles
Follows