சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். அந்த படம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரும் அந்தப் படம் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி பட தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இது இயக்குநர் பாலாவுக்கு பெரும் அவமானத்தை உண்டாக்கியது.

அதன் பின்னர் சில ஆண்டுகளில் நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வந்தார் பாலா.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார் சூர்யா.

இதுவும் பாலாவிற்கு திரையுலகில் பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இதனால் பாலா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் தனக்கு நடிக்க விருப்பம் என விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மாறு கண் உடையவராக விஷால் நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Vishal wants to act in the direction of Bala again

நாட்டு… நாட்டு.. பாடல் எதிரொலி.; ஹாலிவுட் படத்தில் நடிக்கும் RRR பட நடிகர்

நாட்டு… நாட்டு.. பாடல் எதிரொலி.; ஹாலிவுட் படத்தில் நடிக்கும் RRR பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கிய RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு..’ என்ற பாடல் உலகப் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றது.. இதன் மூலம் இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமாகியது.

எனவே பல வெளிநாட்டினரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்தப் பாடலுக்கு RRR படத்தில் நடனமாடிய ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு உலக அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது.

எனவே அவர்களுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்துள்ளன.

இந்த நிலையில் ஹாலிவுட் படத்தில் ராம்சரண் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ராம் சரண் உறுதிப்படுத்தியு ஹாலிவுட்டின் சில இயக்குநர்களுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

RRR actor to act in hollywood film

அமைச்சர் சேகர்பாபுவின் இன்னொரு முகம் பாட்ஷா.; ஸ்டாலின் கண்காட்சியில் ரஜினி பேச்சு

அமைச்சர் சேகர்பாபுவின் இன்னொரு முகம் பாட்ஷா.; ஸ்டாலின் கண்காட்சியில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னையில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை நடிகரும்மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 28-இல் திறந்து வைத்தார்.

பின்னர் அந்தப் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு முதல்வர் மு க ஸ்டாலினை வாழ்த்தி பேசியிருந்தார்.

இந்த கண்காட்சியை மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

நாளை மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.

அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது.., அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர். அதே சமயம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு, பாட்ஷா மாதிரி.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Sekar babu has another face like baasha says rajinikanth

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்..

கடந்து 30 ஆண்டுகளாக இவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த நிலையில்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு பின்னர் கொரோனா காரணத்தால் பின் வாங்கி விட்டார்.

ஆனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இதில் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதால் மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா.? அல்லது இது அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மீண்டும் முதலேர்ந்தா.?

Political leaders in a function led by Rajini fans.!?

நான் அரசியலுக்கு வராததற்கு அதுதான் காரணம்..; மீண்டும் ரஜினி விளக்கம்

நான் அரசியலுக்கு வராததற்கு அதுதான் காரணம்..; மீண்டும் ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

எப்போதும் போல தன்னுடைய பேச்சில் கலகலப்பும் உண்மையும் கலந்து பேசினார்.

அவர் பேசியதாவது…

“நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து விட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அது உங்கள் எல்லாருக்கும் அறிந்தது தான். கொரோனா வேகமாக பரவியது.

அப்போது என்னை பரிசோதித்த டாக்டர்கள் உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது. மேலும் நான் Immunosuppressant. மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன்.

இந்த சமயத்தில் நீங்கள் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது. இதனால் ஆபத்து என்றனர்.

மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் மற்றவர்களுடன் சேர்ந்து நிற்காமல் 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும்.. நிச்சயமாக மாஸ்க் போட வேண்டும் என்றனர். இது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

ஒரு கட்டத்தில் நாங்களே வந்து இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கிறோம் என டாக்டர்கள் சொன்னார்கள். எனவே தான் நான் அரசியல் முடிவில் இருந்து பின் வாங்கினேன்.. அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்தேன்” என்றார் ரஜினிகாந்த்.

Rajinikanth speech at sapiens health foundation

ஒரே பாடலில் உயர்ந்த நாயகன் நான் அல்ல.; பிரசன்னா பேச்சுக்கு உதயநிதி விளக்கம்

ஒரே பாடலில் உயர்ந்த நாயகன் நான் அல்ல.; பிரசன்னா பேச்சுக்கு உதயநிதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியவர் மாறன்.

இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.

இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஸ்ரீகாந்த் பிரசன்னா சென்ட்ராயன் சுபிக்ஷா வசுந்தரா மாரிமுத்து உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

சித்து என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை மார்ச் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை பட குழுவினர் சந்தித்தனர்.

அப்போது மேடையில் நடிகர் பிரசன்னா பேசும் போது..

“கொரோனா காலகட்டத்திற்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் உதயநிதி திமுகவின் இளைஞர் அணி தலைவர்.. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தற்போது தமிழக அமைச்சர் என படிப்படியாக உயர்ந்துள்ளார்.

சினிமாவில் ஒரே பாடலில் நாயகன் பெரிய ஆளாகி விடுவார் அதுபோல இந்த படம் முடிவதற்குள் உதயநிதி உயர்ந்து நிற்கிறார்” என பேசினார்.

அதன் பிறகு உதயநிதி பேசும் போது பிரசன்னாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார் ய.

“சினிமாவில் காட்டப்படுவது போல் ஒரே பாடலில் நான் உயர்ந்துவிடவில்லை.. அது நான்கு நிமிடத்தில் ஒரு பாடலில் நாயகன் வாழ்வில் உயர்வதாக காட்டப்படும்.

நான் நான்கு ஆண்டுகளில் திமுக பொறுப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் தற்போது அமைச்சர் என உயர்ந்து நிற்கிறேன்” என கலகலப்பாக பேசினார் உதயநிதி.

Udhayanidhi speech at Kannai Nambathe press meet

More Articles
Follows