தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். அந்த படம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரும் அந்தப் படம் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி பட தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.
இது இயக்குநர் பாலாவுக்கு பெரும் அவமானத்தை உண்டாக்கியது.
அதன் பின்னர் சில ஆண்டுகளில் நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வந்தார் பாலா.
இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார் சூர்யா.
இதுவும் பாலாவிற்கு திரையுலகில் பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
இதனால் பாலா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் தனக்கு நடிக்க விருப்பம் என விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
ஏற்கனவே பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மாறு கண் உடையவராக விஷால் நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்…
தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Vishal wants to act in the direction of Bala again