தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஷால் கூறியதாவது…
சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல்ஹாசன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.
இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு.
சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை.
எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த விஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன்.
அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.
இதுவரை ரஜினி அவர்களை சந்திக்கவில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.” இவ்வாறு விஷால் கூறினார்.
