ராயல்டி தொகையில் ஒரு பகுதியை 2 சங்கங்களுக்கு வழங்கும் இளையராஜா

ராயல்டி தொகையில் ஒரு பகுதியை 2 சங்கங்களுக்கு வழங்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal talks about Ilayaraaja 75 event and Ilayaraaja songs royalty amountதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.

அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்.

ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள்.

இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதற்கான ‘MO’ -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம்.

ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ – வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது.

இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்.

Vishal talks about Ilayaraaja 75 event and Ilayaraaja songs royalty amount

Isaignani Ilayaraja 75 event ticket sales event

மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meetஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”.

ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு.

ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம்.

மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

”தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது.

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன.

அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல.

அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்.” என்றார் நாயகி.

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meet

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversyமக்களை எப்போதுமே வாட்டும் விஷயங்களில் மிக மிக முக்கியமானது விலைவாசி உயர்வு தான்.

தினம் தினம் பெட்ரோல் விலை உயர்வதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை வைத்தே அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வரும் புதுமுகங்களும் இந்த குற்றச்சாட்டை கூறாமல் இருப்பது இல்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் டிவி விளம்பரத்தில் கேபிள் டிவி சந்தா கட்டணம் குறைவாக இருப்பதாக கூறி இன்னும் அதிக விலைக்கு விற்கலாமே என சொல்வதாக காட்சிகள் உள்ளது.

பொதுவாக பேரம் பேசி பணத்தை குறைக்கச் சொல்வோம். ஆனால் கடைக்காரர் பசுபதி விலை குறைவாக சொன்ன போதும், அதற்கு அதிக பணம் தருவதாக கமல் சொல்வது போல் விளம்பரம் உள்ளது.

அது விளம்பரம் தான் என்றாலும் மக்களே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மக்கள் பிரச்சினையை பேசும் கமல், காசுக்காக இப்படி பேசலாமா? என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversy

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தேர்தல் அறிக்கையில் மொழிக்கொள்கையை அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 21ஆம் ஆளுமையாக அப்துல் ரகுமான் குறித்த கட்டுரையை நேற்று திருப்பூரில் அரங்கேற்றினார்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனர் தொழில் அதிபர் நாகராஜன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மலேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் முன்னிலை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழாற்றுப்படை நிகழ்ச்சி திருப்பூரில் நிகழ்வது மகிழ்ச்சி. மற்ற ஊர்களையெல்லாம் நான் மூளையில் பதிவு செய்திருக்கிறேன்; திருப்பூரை மட்டும் நான் இதயத்தில் அணிந்திருக்கிறேன். பனியன் வடிவத்தில் திருப்பூர் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அப்படிச் சொல்லுகிறேன்.

சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப்போல அப்துல் ரகுமான் கவனம் பெறாமல் போய்விட்டார். அவர் கவிதைகளைத் தமிழர்கள் போற்ற வேண்டும்.

ஒரு மொழியின் உலக அடையாளமே அது எத்தனை ஆண்டு நீண்ட இலக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்பதுதான். ஆண்டு வளையங்களைக் கொண்டு மரங்களின் வயதறியலாம்.

பற்களைப் பார்த்து மாடுகளின் வயதறியலாம். ஒரு மலையின் வயதை அது வெளியிடும் கார்பன் அளவுகொண்டு கணக்கிடலாம். அதுபோல ஒரு மொழியின் வயதை அதன் இலக்கியத்தை வைத்தே அளவிட இயலும்.

பழந்தமிழர் வாழ்வில் இலக்கியம்தான் அறம்; இலக்கியம்தான் சட்டம். இலக்கியத்தின் வழிதான் ஆட்சி செலுத்தப்பட்டது; வாழ்வு இயக்கப்பட்டது. தவறுகளைத் தண்டிக்கப் பிறந்ததுதான் பிற்காலத்தில் சட்டம்.

ஆனால் தவறுகளே செய்துவிடக்கூடாது என்று தடுத்ததுதான் இலக்கியம். ஓர் இனத்தின் பண்பாடும் நாகரிகமும், வீரமும் காதலும் இலக்கியத்தில் மட்டும்தான் பாதுகாப்பாகப் பதிவுசெய்யப்பட முடியும்.

ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்குப் பிறகு இந்தியக் கல்வியில் இலக்கியம் தன் இடத்தை இழந்துகொண்டிருக்கிறது என்பது கவலை தருகிறது.

மூன்று நிமிடங்களுக்குமேல் காற்று இல்லை என்றால் மூளை இறந்துபோகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் இடைவெளி விட்டால்கூட இலக்கியம் மறந்துபோகும். அதனால் தொழில்நுட்பக் கல்வியிலும்கூட இலக்கியத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பது பலன்தரும் என்று தோன்றுகிறது.

தமிழ் ஒரு கடல். எல்லா நதிகளையும் உள்ளிழுத்துக்கொண்டு அது தன்மயம் ஆக்கிவிடும். பெளத்தத்தை உள்ளிழுத்துக்கொண்டு அது மணிமேகலையாய் மாற்றிக்கொண்டது. சமணத்தை உள்ளிழுத்து அது பதினெண்கீழ்க்கணக்காய்ப் பரிணாமம் பெற்றது.

இஸ்லாத்தை உள்ளிழுத்து அது சீறாப்புராணமாய்ச் சிறந்தோங்கியது. கிறித்துவத்தை உள்ளிழுத்து உலகைத் தனக்கும், தன்னை உலகத்துக்கும் அறிமுகம் செய்துகொண்டது. அப்படி வந்த மதங்களெல்லாம் தமிழ் வழியாகத்தான் வினைப்பட்டனவே தவிர, தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் தங்கள் மொழியை அமர்த்திவிடவில்லை.

ஆனால் இந்த நூற்றாண்டு அச்சம் தருகிறது. எப்போதும் நேராத ஓர் உலகப் படையெடுப்பு ஒவ்வொரு தாய்மொழியின் மீதும் இப்போது நிகழ்த்தப்படுவதாய் அறிவுலகம் பதறுகிறது.

இன்றைக்குப் பெருகிவரும் ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமங்கள் வரைக்கும் தமிழைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் முதலில் தமிழின் தரம் குறையும்; பிறகு புலமை குறையும்; பிறகு எண்ணிக்கை குறையும்; பிறகு பேச்சுமொழி ஆகிவிடும் பெருவிபத்தும் நேர்ந்துவிடும்.

சட்டத்தின் துணையின்றி இங்கு எதையும் சாதிக்க முடியாது. மக்களின் குரலின்றிச் சட்டம் ஏதும் இயற்ற முடியாது. எனவே தமிழர்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் தமிழைக் காப்பாற்ற முடியும். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொழுது உங்கள் மொழிக்கொள்கையைத் தனித் தலைப்பிட்டு அறிவியுங்கள். பொருளாதாரத்தைக் காப்பது மட்டும் ஜனநாயகத்தின் கடமை அல்ல; கலாசாரத்தையும் காப்பதுதான்.

Lyricist Vairamuthu speech at Tamilattrupadai event

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் *நடுவன்* படத்தில் பரத்

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் *நடுவன்* படத்தில் பரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mind boggling and daredevilry challenges in Bharath starrer Naduvanநடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும் சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.

முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக நடிக்கிறார்.

மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா, ஏராளமான சவால்களை கொண்டிருந்தது.

இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார்.

“படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர்.

இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர். ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.

ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார்.

ஒரே டேக்கில் ஒரு சண்டைக்காட்சியில் எந்த காயமும் படாமல் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்த தலையில் கடுமையாக அடிபட்டது.

மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்” என்றார்.

உறியடி மற்றும் ராட்சசன் போன்ற திரைப்படங்களில் அவரது சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்கு தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

நடுவன் படத்துக்கு தரண்குமார் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்க்கி, டாக்டர் பர்ன் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் இந்த படத்தில் பாடல் எழுதியுள்ளனர்.

Mind boggling and daredevilry challenges in Bharath starrer Naduvan

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் வக்கீல்; நீங்களும் ஈசியா உதவலாம்

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் வக்கீல்; நீங்களும் ஈசியா உதவலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkamபிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.

“இருட்டாக இருக்கிறதே என்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது உயர்வானது “என்பதைத் தன் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறது ‘அகவொளி மக்கள் நல இயக்கம்’.

இதன் நிறுவனர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் ‘திட்டி வாசல் ‘படத்தின் இயக்குநர் பிரதாப் முரளி, செயலாளர் முனுசாமி, நத்தர்ஷா, சமன்த்ராய், சுகதேவ், பிடல் காஸ்ட்ரோ, ஹரிஷ், அருண், வசந்த் மற்றும் தன்னார்வலர்கள். இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள்.

நாட்டின் அவலங்களில் பிச்சை எடுப்பது ஒன்று என்பதை உணர்ந்து பிச்சை எடுப்பவர்களை அணுகி அவர்களின் பின்னணி அறிந்து முதியோர் இல்லத்தில் சேர்ப்பது சிறு சிறு கடைகள் வைக்க உதவுவது, வேளைக்கு அமர்த்துவது, அரசு சலுகைகள் பெற்று தருவது என்று அவர்களை மறு பிறவி எடுக்க வைத்துள்ளார்கள்.

இப்படி இதுவரை 50 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதே போல மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் சாலையோர சிறு கடைகள் வைத்து உதவியதோடு நிற்காமல், பத்து ஆண்டுகளில் CONFLUXLIVE என்ற நிறுவனம் மூலம் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது ‘அகவொளி’ இயக்கம்.

சென்னை வெள்ளம், தானே புயல், வர்தா புயல், கேரள வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் வந்தபோது உதவியுள்ள இந்த இயக்கம், இப்போது கஜா புயல் பாதிப்புக்குப் பின் களமிறங்கியுள்ளது.

டெல்டா மாவட்டத்தில்…

பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியதுடன் ‘நம்ம விழுப்புரம்’, ‘நம்ம கடலூர், ‘திருச்சி SRM கல்லூரி மாணவர்களுடன் இணைந்து 1000 மரக்கன்றுகள் நட்டு களப்பணியாற்றியுள்ளனர்கள்.

அந்நிகழ்வில் ‘தேசிய விருது’ பெற்ற திரைப்பட இயக்குநர் சற்குணம் கலந்து கொண்டு இருக்கிறார்.
வேதாரண்யம் பகுதிக்கும் 800 தென்னங்கன்றுகள் அனுப்பி தன்னார்வலர்கள் மூலம் அவற்றை நடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது பற்றி வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறும் போது” இந்த இயக்கத்தை நான் தன்னார்வலர்களுடன் இணைந்து தொடங்கினேன். இயக்குநர் பிரதாப் முரளி, வழக்கறிஞர்கள், மென்பொருளார்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல் படுகின்றோம். எங்களோடு மேலும் பல ஈரமுள்ள இதயங்கள் இணைந்து இருக்கின்றன என்கிறார்.

“பாசமுள்ள பார்வையிேலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறான்” என்பது வெறும் திரைப்பாடல் அல்ல. வாழ்வில் நிரூபணமாகியுள்ள உண்மையும் கூட எனலாம்.

பிச்சையெடுப்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நினைத்தால் அவர்கள் பிச்சை எடுக்கும் இடம், இரவில் தங்கும் இடம், புகைப்படம், வயது, ஏதேனும் குறைபாடுகள், முடிந்தால் அவர்களிடம் அன்புடன் பேசி அவர்களை பற்றிய நெகிழ்வான விவரங்களை கேட்டறிந்து உங்கள் விபரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkam

Advocate Karthikeyan giving Re life to beggars by Agavoli Iyakkam

More Articles
Follows