‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஸ்டண்ட் நடிகருக்கு விஷால் உதவி

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஸ்டண்ட் நடிகருக்கு விஷால் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ரிது வர்மா & அபிநயா நாயகிகளாக நடிக்க இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் தோன்றும் கேரக்டர் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்பட சண்டைக் காட்சியை பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி’ பிலிம் சிட்டியில் படமாக்கினர்.

அப்போது எதிர்பாரா விதமாக பிரபா சங்கர் என்பவருக்கு தீ காயங்கள் ஏற்பட்டது.

அவர் தீக்காயத்தால் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் பிரபாசங்கர் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 தொகையை வழங்கினார்.

விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் கண்ணன் ஆகியோர்கள் இந்த தொகையை நேரில் சென்று வழங்கினார்கள்.

Vishal helps the stunt actor who had an accident on the set of ‘Mark Antony’

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் திருடிய பெண் கைது.; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் திருடிய பெண் கைது.; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர் 3 & வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கினார். தற்போது விக்ராந்த் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை.

சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டு லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த தற்போது அந்த நகைகளை திருடிய ஈஸ்வரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தன் தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு அந்த நகைகளை ஐஸ்வர்யா அணிந்திருந்ததாகவும் அதன் பின்னர் அதில் லாக்கரில் வைத்து விட்டதாகவும் அந்த சாவி வைத்த இடம் தன் வீட்டில் பணிபுரியும் பணியாளருக்கு தெரியும் எனஙும் தெரிவித்திருந்தார்.

இதனை வைத்து அங்கு பணிபுரிந்த பணியாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த சில வருடங்களாக
அந்த வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி என்ற பெண் தான் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அவர் வாங்கியது தெரிய வந்துள்ளது.

திருடிய நகைகளை விற்று அந்தப் பணத்தை தனது கணவர் வங்கியில் போட்டு உள்ளார்.. அதன் பின்னர் தான் அவர் ஒரு கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியது தெரிய வந்துள்ளது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் அவர் ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் இருந்து வேலையை விட்டு விட்டதாகவும் தெரிய வந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நகைகளை திருடியது அந்தப் பெண் தான் எனவும் திருடிய 60 சவரன் நகையில் தற்போது 20 சவரன் நகைகள் மட்டுமே உள்ளது எனவும் கூறப்படுகிறது.

Aishwarya Rajinikanth jewel robbery. Police arrested maid

சிம்புவுடன் டூயட் பாடும் பான் இந்தியா நடிகை

சிம்புவுடன் டூயட் பாடும் பான் இந்தியா நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் அடுத்த படம் ‘STR 48’ கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்குஉள்ளார். சிம்புவின் கேரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படம் படம் இது என சொல்லப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளது கூடுதல் தகவல்.

‘STR 48’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மூன்று முன்னணி இந்திய நடிகைகளான பூஜா ஹெக்டே, திஷா பதானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. யார் கால்ஷீட் கிடைக்கிறதோ அவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

Three pan Indian actresses in talks to pair with Simbu in ‘STR 48’

ராஜா ராணி சீரியல் நடிகையின் கணவர் மற்றும் மகள் கொலை .. அதிர்ச்சியில் சின்னத்திரை?

ராஜா ராணி சீரியல் நடிகையின் கணவர் மற்றும் மகள் கொலை .. அதிர்ச்சியில் சின்னத்திரை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா ராணி’ தொடரில் நடித்து வருபவர் நடிகை சாந்தி. இவரது கணவர் செல்வராஜ். தம்பதியருக்கு ராஜேஷ், பிரகாஷ் என்ற மகன்களும் பிரியா என்ற மகளும் இருந்தனர்.

திங்கள்கிழமை, பிரகாஷ் தனது சகோதரி பிரியா வீட்டிற்குச் சென்று தேவையில்லாமல் சண்டையிட்டார். திடீரென கத்தியை எடுத்து அவரது தொண்டையில் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். பிரியாவின் கணவர் உதவிக்காக சாந்தியின் வீட்டிற்கு ஓடினர், மேலும் செல்வராஜும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற் கட்ட விசாரணையில் பிரகாஷ்க்கு மன நல பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது.

Tamil serial actress’s husband and daughter brutally murdered by her son

கடல் அலைக்கு மத்தியில் காதல் அலையில் சிக்கிய அஜீத் – ஷாலினி!

கடல் அலைக்கு மத்தியில் காதல் அலையில் சிக்கிய அஜீத் – ஷாலினி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆன்-ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் இரண்டிலும் கொண்டாடப்பட்ட ஜோடி என்றால் அது அஜீத் – ஷாலினி தான் தற்போது இருவரும் தங்களது குழந்தைகளான அனுஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோருடன் துபாயில் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே, இவர்களின் கோடை விடுமுறையின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று இரவு, ஷாலினி தனது கணவர் அஜித்துடன் சிலபுகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கினார் . இருவரும் படங்களுக்கு போஸ் கொடுக்கும் போது காதலில் மூழ்கி இருக்கும் அழகான காட்சியை நம்மால் காண முடிந்தது.

Ajith and Shalini are lost in love in middle of the ocean in these latest clicks!

வாவ்… விஜய்க்காக ஏர்போர்ட் செட் போடும் படக்குழு.; எங்கே தெரியுமா?

வாவ்… விஜய்க்காக ஏர்போர்ட் செட் போடும் படக்குழு.; எங்கே தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வரும் லியோ ஷூட்டிங்கை படக்குழு இந்த வாரத்துடன் முடிக்கவுள்ளது. மேலும், அடுத்த ஷெட்யூல் சென்னையில் சுமார் 10 நாட்களுக்கு நடைபெறும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இறுதிக்கட்ட ஷெட்யூல் என்றும், சென்னை படப்பிடிப்பிற்கு பிறகு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக விமான நிலையம் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj master plan for LEO

More Articles
Follows