தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் என்ன பாவம் செய்தததோ? என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினைகளாக சந்தித்துக் கொண்டே இருக்கிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை தமிழகம் பரபரப்பாக இருக்கிறது.
தற்போது ஹைட்ரோகார்பன் என்னும் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கு ஆதரவளிக்க இன்று நெடுவாசல் சென்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவிருக்கிறார் விஷால்.
இதனை நேற்று நடைபெற்ற ‘ஒரு கனவு போல’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.
அப்போது பேசியபோது, அரசியல்வாதிகளுக்கு நான் இதை முக்கிய வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ‘விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், நெடுவாசலைக் காப்பாற்றுங்கள். எனவும் தெரிவித்தார்.
இவருடன் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் பேரரசு ஆகியோரும் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.
Vishal going to Neduvasal to support Tamilnadu farmers in HydroCarbon issue