தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
48 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு கோலிவுட் ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் திரைத்துறையினர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கே.சி.வீரமணி ஆகியோர் தலைமையில் திரைத்துறை அமைப்பினர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,
“ஏப்ரல் 20ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகள் நாளை மறுநாள் தொடங்கும். திரையுலகினரின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும்.
தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே தொடங்க உள்ளது.
அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலாக எங்கும் டிக்கெட் விற்கப்படாது. முறையாக கண்காணிக்கப்படும்.
சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். நடிகர்களின் சம்பள விவகாரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
பிரச்னை தீர உதவிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு அளித்த பெஃப்சி தொழிலாளர் சங்கத்திற்கு நன்றி” என்றார்.
Vishal going to meet Top actors to reduce their high salary