தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் போராட்டக்காரர்கள் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான விஷால் கூறியுள்ளதாவது…
இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல.
50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காகதான் போராடுகிறார்கள் .
மரியாதைக்கூறிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மனநிலையை கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது.
அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல.
2019 பற்றி கவனமாக யோசிக்க வேண்டும் மக்கள் என அந்த அறிக்கையில் விஷால் தெரிவித்துள்ளார்.
Vishal condemns the brutal killing of Peoples at Sterlite protest