விஷால் அலுவலகத்தில் அக்கௌண்டன்ட் ரம்யா ரூ. 45 லட்சம் மோசடி

விஷால் அலுவலகத்தில் அக்கௌண்டன்ட் ரம்யா ரூ. 45 லட்சம் மோசடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishalநடிகர் விஷால் சென்னை சாலிகிராமத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக திருமதி. ரம்யா என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ரம்யா ரூபாய் 45 லட்சம் மோசடி செய்துள்ளதாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரியின் மேனேஜரான ஹரி கிருஷ்ணன் நேற்றிரவு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில்…

கடந்த 2018-ம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வருமான வரித்துறைக்கு கட்டவேண்டிய டிடிஎஸ்(TDS) தொகையில் இருந்து பணம் காணாமல் போவது வாடிக்கையாகி இருந்து வந்துள்ளது.

எனவே ஊழியர்களை சோதனை செய்தபோது கணக்காளர் ரம்யா டி.டி.எஸ் தொகையிலிருந்து தனது கணவரான தியாகராஜன் என்பவரின் பர்சனல் வங்கி கணக்கிற்கும், அவர்களது உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்கிற்கும் சிறுக சிறுக ரூபாய் 45 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

இந்த மோசடி செய்த கணக்காளர் ரம்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமலின் ‘குலசாமி’ படத்தில் வசனம் எழுதி நடிக்கும் விஜய்சேதுபதி..?

விமலின் ‘குலசாமி’ படத்தில் வசனம் எழுதி நடிக்கும் விஜய்சேதுபதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and vimalசண்டக்காரி, என் பாட்டன் சொத்து, மஞ்சள் குடை, கன்னிராசி, லக்கி உள்ளிட்ட படங்கள் நடிகர் விமல் கை வசம் உள்ளது.

இதில் கன்னிராசி படம் எப்போது திரைக்கு வரும் என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் குலசாமி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் விமல்.

இதில் திரைக்கதை, வசனம் எழுதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

மற்ற நடிகர், நடிகைகள் விவரங்கள் வெளியாகவில்லை.

போலீஸ் மீது மக்கள் புகார்; அதிமுக திமுக கட்சிகளை அகற்ற வேண்டும் என கமல் ஆவேசம்

போலீஸ் மீது மக்கள் புகார்; அதிமுக திமுக கட்சிகளை அகற்ற வேண்டும் என கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சம்பந்தபட்ட காவலர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இதற்கு சாட்சியாக இருந்த போலீஸ் ரேவதீக்கு போலீசாரே பாதுகாப்பு கொடுக்கும் நிலையையும் ஏற்பட்டுள்ளது.

இந்த செய்தியை தொடர்ந்து பல புகார்கள் போலீஸ் மீது வருகின்றது. பொய் வழக்கு போடுவது, விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட புகார்கள் தினம் தினம் வருவதால் உயர்நீதி மன்றமே தாமாக வந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த நிலையில் நடிகரும் மநீம கட்சியின் தலைவருமாக கமல்ஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது.

சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.

என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் டிக் டாக்-க்கு தடை; ரூ. 45000 கோடி வருவாய் இழப்பு என சீன ஊடகம் அறிவிப்பு

இந்தியாவில் டிக் டாக்-க்கு தடை; ரூ. 45000 கோடி வருவாய் இழப்பு என சீன ஊடகம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tiktok ban in indiaகடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் இருநாடுகளும் தங்களது எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

சில தினங்களில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா அரசு கண்டனம் தெரிவித்தும் உள்ளது.

இந்த நிலையில், சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான ‘பைட்-டான்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ. 45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டிவி-யிலிருந்து அடுத்த ஹீரோயின்..; ஜெய்க்கு ஜோடியாகும் திவ்யா

டிவி-யிலிருந்து அடுத்த ஹீரோயின்..; ஜெய்க்கு ஜோடியாகும் திவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jaiநடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம்.

அதுபோல மேயாத மான் பட நாயகி பிரியா பவானி சங்கரும் டிவியில் இருந்து வந்தவர் தான். இவர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் டிவி சீரியல்கள் நடித்து வந்தார்.

தற்போது செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி என்பவரும் வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வரவுள்ளார்.

இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் திவ்யா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

மேலும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் திவ்யா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Pure Evil Character… ‘மாஸ்டர்’ பட வில்லன் மக்கள் செல்வன் ஓபன் டாக்

Pure Evil Character… ‘மாஸ்டர்’ பட வில்லன் மக்கள் செல்வன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master vijay sethupathiவில்லனாக ஆரம்பித்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்சேதுபதி.

ஆனாலும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

விக்ரம் வேதா படத்தில் ஹீரோ என்றாலும் நெகடிவ் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சினையால் மாஸ்டர் படம் ரிலீஸ் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் தனது கேரக்டர் பற்றி மனம் திறந்துள்ளார் விஜய் சேதுபதி.

“மாஸ்டர் திரைப்படத்தில் நான் கொடூரமான வில்லனாக நடித்திருகிறாராம். அதாவது “Pure Evil Character” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows