விமல்-வரலட்சுமி ஜோடிக்கு கன்னி ராசி ஒர்க் அவுட் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.

பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது

தன் 3வது படத்தலைப்பை கார்த்திக் நரேன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துருவங்கள் பதினாறு ‘ இயக்குநர் கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. அவர் தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் ‘நாடக மேடை ‘ .இப்படத்தை இயக்கி
தன் ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங் , கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன் ,நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார்.
அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்த்திரக் கூட்டணியாக இருக்குமாம்.

வாய்ப்பு கேட்ட நடிகர் ராஜ்கமலை திட்டிய டைரக்டர் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி சீரியல்களில் பிரபலமானவர் நடிகர் ராஜ்கமல். இவர் டிவி நடிகை லதாராவ்வின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சண்டி குதிரை என்ற படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள மேல்நாட்டு மருமகன் என்ற திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

எனவே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

பல மேடைகளில் தொகுப்பாளராக இருந்துள்ளேன். ஆனால் இங்கு ஒரு நடிகராக உங்கள் நண்பனாக, தம்பியாக, மகனாக இங்கு வந்துள்ளேன்.

சினிமாதான் என் வாழ்க்கை. அது தவிர எனக்கு எதுவும் தெரியாது.

நான் டிவி சீரியல்களில் நடித்தது பெரும் குறையாக போய்விட்டது. இப்போதும் கூட 40 சீரியல்கள் வாய்ப்புகள் வந்தன.

ஆனால் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதால் அதை மறுத்துவிட்டேன்.

நிறைய டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு என் போட்டோக்களை அனுப்புவேன்.

மிஷ்கின் ஒருமுறை என்னை திட்டியே விட்டார். டேய் உனக்கு வேற வேலையே இல்லையடா? என்று கூட திட்டி இருக்கிறார்.

நான் நடிகன். நான் வாய்ப்புத்தானே கேட்க முடியும். வேற என்ன செய்ய முடியும்.” என்று உருக்கமாக பேசினார்.

90 எம்எல்-லுக்காக சிம்பு உடன் இணையும் ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நடித்த `சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் பன்முக திறமை கொண்ட சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஓவியா நாயகியாக நடிக்கவுள்ள ஒரு படத்திற்கு சிம்பு இசையமைக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

`குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கிய அனிதா உதுப் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு `90 எம்.எல்’ என்று தலைப்பிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

விஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சினிமாவை விட்டு இப்போது விலகமாட்டேன்..; அரசியல்வாதி கமல் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சி மற்றும் கொடி, கொள்கை ஆகியவற்றை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த கமல் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க போவதாக அவர் அறிவித்தார்.

கமலின் கைவசம் தற்போது சபாஷ் நாயுடு மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களே உள்ளன.

மேலும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது கைவசம் உள்ள 3 படங்களை முடித்துக் கொடுப்போன்.

தீவிர அரசியலில் ஈடுபட்டதும், படங்களில் நடிப்பது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன். அதன்பிற்கு அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார் உலகநாயகன்.

நட்பு டூ காதல்.. அடுத்த லெவலுக்கு போகத் தெரியாத சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ரெமோ, விஜய் நடித்த ‘கத்தி’, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சதீஷ்.

இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன்… ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்றும் பதிவிட்டுள்ளார்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சதீஷ் வெறும் நட்பையே கொண்டாட போறீங்க..

Sathish‏Verified account @actorsathish Feb 14

Happy friendship day…… (Hmmmmmmm idhukku aduththa level ku dhan namakku poga theriyalaye

More Articles
Follows