தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரலாறு காணாத கடும் மழை வெள்ளத்தால் கேரளா மாநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தன் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜய் நிவாரணத் தொகையாக ரூ. 2000 கோடி கேட்டுள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை 600 கோடி நிவாரணத் தொகை அளித்துள்ளது.
மேலும் மற்ற மாநிலங்களும் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இவையில்லாமல் ஒவ்வொருவரும் தங்களால் முயன்ற உதவிகளை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் அவர்கள் ரூ. 35 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
நிறைய நடிகர்கள் நிவாரண நிதிகளை அளித்து வந்தாலும் இவரின் நிவாரணத் தொகையை அதிகபட்ச தொகையாகும்.
Vikram donates Rs 35 lakhs to Kerala flood Relief