ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம்.. – விஜி சந்திரசேகர்

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம்.. – விஜி சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது…

ZEE5 என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிக்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் அத்தனை சிறப்பாக உள்ளது.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் மிகச்சிறப்பான படைப்பை உருவாக்கியுள்ளார். படக்குழுவினர் கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். நான் நல்லதொரு கதாப்பத்திரம் செய்துள்ளேன். பார்த்து ஆதரவளியுங்கள்.” என்றார்.

Viji Chandra sekar talks about working with Zee productions

சென்னைத் தமிழ் பேசினால் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லை – டேனியல்

சென்னைத் தமிழ் பேசினால் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லை – டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், விஜி, டேனியல் உள்ளிட்டோர் நடித்துள்ள இணையத் தொடர் ‘செங்களம்’

மார்ச் 24ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் டேனியல் பேசியதாவது…

சென்னைத் தமிழ் பேசுகிறேன் என்று எனக்கு, கிராமத்துக் கதைகளில் வாய்ப்பே தருவதில்லை. ஆனால் இப்படைப்பின் இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார். அவரது நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். செங்களம் தமிழ்த் திரையில் மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

நடிகர் பிரேம் பேசியதாவது…

“செங்களம் மிகப்பெரிய வெற்றிப்படைப்பாக இருக்கும். அனைத்து நடிகர்களும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். எஸ் ஆர் பிரபாகரனின் திரைக்கதை வசனம் அட்டகாசமாக இருந்தது. அவர் நினைத்ததை உருவாக்கியுள்ளோம். விரைவில் திரையில் காண நானும் ஆவலோடு உள்ளேன் நன்றி.

நடிகை ஷாலி பேசியதாவது…

நான் ஓடிடியில் முதல் முறையாக நடிக்கும் படைப்பு. இதில் கதை தான் நாயகன். இப்படைப்பில் வாய்ப்பளித்த இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் சார் மற்றும் படக்குழுவிற்கு, ZEE5 நிறுவனத்திற்கு நன்றி. படைப்பைப் பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி.” என்றார்.

Actor Daniel speech at sengalam tariler launch

என்னிடம் மிகச் சிறப்பான இசையை இயக்குநர் வாங்கியுள்ளார்… – தரண்

என்னிடம் மிகச் சிறப்பான இசையை இயக்குநர் வாங்கியுள்ளார்… – தரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘செங்களம்’ இணையத் தொடர்.

Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வினில் இசையமைப்பாளர் தரண் பேசியதாவது…

“தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர் தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச்சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் பேசியதாவது…

என்னுடைய முதல் வெப் சீரிஸ் பிரபாகரன் சாருடன் என்னுடைய முதல் படம், அமீர் சாரின் ரசிகன் அவர் என் விஷுவல் பார்த்துப் பாராட்டுவது மகிழ்ச்சி. செங்களம் ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் டான் பாஸ்கோ பேசியதாவது…

எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தக்கதையைச் சொன்னார். அப்போது இதை இரண்டு பாகங்களாகப் படமாக எடுக்க நினைத்தோம், மிக மிக கனமான கதை. மாபெரும் வெற்றிபெறக்கூடிய கதை. எல்லோருக்கும் நல்ல பெயர் பெற்றுத்தரும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றி.

Music Director Dharan speech at Sengalam trailer launch event

எனக்கு துணையில்ல.. ஆனா பிரச்சனையில்ல.. – சிம்பு ; மகன் திருமணம் குறித்து உஷா என்ன சொன்னார்.?

எனக்கு துணையில்ல.. ஆனா பிரச்சனையில்ல.. – சிம்பு ; மகன் திருமணம் குறித்து உஷா என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேற்று மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக தமிழகமெங்கும் உள்ள சிலம்பரசன் ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.

விழா மேடையில் உற்சாகமாக பாட்டு பாடி நடனமாடி மாஸாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சிம்பு.

அவர் பேசும்போது.. “எனக்கு பத்து தல படத்தில் ஜோடி இல்லை.. துணை இல்லை.. வாழ்க்கையிலும் எனக்கு துணை இல்லை. ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை” என்றார்.

இந்த விழாவிற்கு சிம்புவின் பெற்றோர்களான டி ராஜேந்தர் அவரது மனைவி உஷாவும் கலந்து கொண்டனர்.

அவரது அம்மா உஷாவிடம் சிம்புவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது.. “சிம்புவின் திருமணம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.” என்று சொன்னார்.

சிம்பு திருமணம் செய்து கொள்வாரா.? அவரது திருமணம் எப்போது.? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Usha Rajendar talks about her son marriage

JUST IN ‘பத்து தல-யை கைவிட வேண்டிய சூழ்நிலை.. 2 படங்கள் போச்சு – கிருஷ்ணா

JUST IN ‘பத்து தல-யை கைவிட வேண்டிய சூழ்நிலை.. 2 படங்கள் போச்சு – கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் படக் குழுவினருடன் டி.ஆர், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசும்போது..

“பல்வேறு சூழ்நிலை காரணமாக படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலிலேயே கௌதம் கார்த்திக் காட்சிகளை எடுத்துவிட்டோம்.

ஆனால் சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்க ஒரு வாரம்தான் இருந்தது.

எனக்கு இரண்டு படங்கள் கிடைத்து கைவிட்டு போனது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் அமர்ந்து பேசினேன். இறைவன் அருளால் இந்த படம் இங்கு வந்து நின்றுள்ளது.”

இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

Director Krishna speech at Pathu Thala audio launch

JUST IN சிம்பு போன்ற நடிகரை பார்க்கல.. அவரின் ஆன்மிகம் புரியல – கௌதம் கார்த்திக்

JUST IN சிம்பு போன்ற நடிகரை பார்க்கல.. அவரின் ஆன்மிகம் புரியல – கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் & கௌதம் காத்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரகுமான், டி.ஆர், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கௌதம் கார்த்திக் பேசியதாவது…

“பத்து தல எனது திரை வாழ்வில் மிகப் பெரிய படம். கிருஷ்ணா நிறைய கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.

இப்படத்திற்கு ஆக்ஷன் பலம்… அதற்காக சக்தி சரவணன் பயங்கரமாக உழைத்துள்ளார். சாயிஷா நடனம் ஆடியுள்ளார்.

சிம்பு வேற லெவல் என்று சொல்லலாம். உங்கள் (சிம்புவை பார்த்து) ஆன்மீக பயணம் பற்றி என்னிடம் சொன்னீர்கள் ஆனால் அது எனக்கு புரியவில்லை.

சிம்புவின்‌ உடல் முழுவதும் நடிக்கும். அதனை‌ பார்த்து மிரண்டு விட்டேன். இதுபோன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. அவர்போல ஆக வேண்டும் என எனக்கும் ஆசை”

என்று கூறினார் கௌதம் கார்த்திக்.

Gautham Karthik talks about Simbu at Pathu Thala audio launch

More Articles
Follows