சுதந்திர தினத்தில் அமேசானில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ரசிகர்கள் அதிர்ச்சி

சுதந்திர தினத்தில் அமேசானில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
இந்த படம் இந்தாண்டு கோடை விடுமுறைக்கே ரிலீசுக்கு தயாரானாலும் கொரோனா ஊரடங்கால் ரிலீசாகவில்லை.
தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் நிறைய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி மாஸ்டர் ரிலீஸ் என போஸ்டர் வெளியாது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறது மாஸ்டர் படக்குழு.
அமேசானில் வெளியாகும் மாஸ்டர் படம் 2016ஆம் ஆண்டு வெளியான கொரிய படம் என்றும், அது விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அல்ல என தெரிவித்துள்ளது.

‘நான் ஒரு ஏலியன்’… யூடர்ன் போட்டு ஆல்பத்திற்கு திரும்பிய ஹிப் ஹாப் ஆதி

‘நான் ஒரு ஏலியன்’… யூடர்ன் போட்டு ஆல்பத்திற்கு திரும்பிய ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip hop tamizhaஹிப் ஹாப் பாடலை தமிழக இசை ரசிகர்களிடையே பிரபலமாக்கியவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு பெரும் பங்குண்டு.
இவரது இசை ஆல்பங்களுக்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு எப்போதும் உண்டு.
வணக்கம் சென்னை, எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார்.
மேலும் ஆம்பள, தனி ஒருவன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து அடுத்த கட்டமாக மீசைய முறுக்கு படத்தை இயக்கி நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது.
நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்தார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் சினிமா சூட்டிங்குகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் இசை ஆல்பங்கள் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
அதன்படி ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ர்.
இந்த ஆல்பத்தின் உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதில் முதல் பாடல் வெளியான நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முழு ஆல்பமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கர்ணன் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi rajisha vijayan‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஃபைனல்ஸ்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன்,
இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்தான் இந்த ஜோடி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என சிலர் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சங்கீதா விஜய் &; ஜோதிகா சூர்யாவை தே… என அசிங்கப்படுத்திய மீரா மிதுன்

சங்கீதா விஜய் &; ஜோதிகா சூர்யாவை தே… என அசிங்கப்படுத்திய மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithunகடந்த சில நாட்களாகவே ரஜினி, விஜய், த்ரிஷா, சூர்யா உள்ளிட்ட பலரையும் வம்புக்கு இழுத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

இவர் விஜய் மற்றும் சூர்யாவை கேவப்படுத்தியதால் கடுப்பான விஜய் – சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை வாய்க்கு வந்தபடி திட்டினர்.
அந்த வார்த்தைகள் இங்கே பதிவிட முடியாது.

இதனை பார்த்து மீரா மிதுன் ஒதுங்கிவிடுவார் என நினைத்தால் அவரின் பேச்சு தற்போது எல்லை மீறி போய்ள்ளது.

விஜய் – சூர்யா ரசிகர்களை மேலும் மேலும் கோபம் ஏற்படுத்தும் விதமாக, விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும், சூர்யாவின் மனைவி ஜோதிகா பற்றியும் அசிங்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

என்னை நீங்கள்.. தே… என்று சொன்னால் நானும் அவர்களை இன் இப்படி தான் சொல்வேன் என ரசிகர்களுக்கு எச்சரிக்கை அண்ட் சவால் விடுத்துள்ளார்.

தனுஷ் ஹன்சிகா ஜோடியை மீண்டும் இணைக்கும் மித்ரன் ஜவஹர்

தனுஷ் ஹன்சிகா ஜோடியை மீண்டும் இணைக்கும் மித்ரன் ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush hansikaதனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.
கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா பிரச்சினையால் தள்ளிப் போய்யுள்ளது.
இதனையடுத்து மாரி செல்வராஜின் கர்ணன் படமும் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது.
இதனையடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அகஷ்யகுமார், சாரா அலிகான் உடன் ‘அத்ரங்கி ரே’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.
இந்த படங்களை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் ஒரு படம். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படம் என கை வசம் வைத்துள்ளார் தனுஷ்.
இதில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என கூறப்படுகிறது.
குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் தனுஷ் உடன் மித்ரன் ஜவஹர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கிய ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷ் – ஹன்சிகா ஜோடி இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது 10 வருடங்களுக்குப் பின் இந்த ஜோடியை மீண்டும் மித்ரன் இணைக்கிறார்.

பெய்ரூட் துறைமுகத்தை சிதறடித்த அம்மோனியம் நைட்ரேட் பற்றி ஒரு பார்வை..

பெய்ரூட் துறைமுகத்தை சிதறடித்த அம்மோனியம் நைட்ரேட் பற்றி ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

beirutஉலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவமாக பெய்ரூட் துறைமுகம் வெடிவிபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த வெடி விபத்துக்கு காரணமாக அம்மோனியம் நைட்ரேட் என்ன? என்பதை இங்கே பார்ப்போம்…
அம்மோனியம் நைட்ரேட் என்பதன் வேதியியல் மூலக்கூறு பெயர் NH4NO3 ஆகும்.
இயற்கையாகவே கிடைக்கும் இந்த வேதிப்பொருள் பெரும்பாலும், விவசாயம் மற்றும் வெடி பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பயிர்களுக்கு தழைச்சத்து கிடைப்பதற்காக இது உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெரிய கட்டிடங்களை இடிக்கவும், பாறைகளை உடைக்க மற்றும் கிணறுகள் தோண்டுவதற்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கவும் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
ஆனால் அம்மோனியம் நைட்ரேட் எளிதாக வெடிக்கும் ரசாயனம் இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்மோனியம் நைட்ரேட்டை ஒரு அளவுக்கு மேல், ஓரிடத்தில் நீண்டகாலமாக வைத்திருந்தால், அது குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வெளியிடும் எனவும் சொல்லப்படுகிறது.
அதில் இருந்து வெளியாகும் வெப்பமே, நெருப்பாக மாறும் என்றும், அம்மோனியம் நைட்ரேட்டில் இருந்து ஆக்சிஜன் வெளியாகும் என்பதால், அதுவே தீ கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
இது பற்றி எரியும்போது சிவப்பு நிற புகையை வெளியிடும் என்றும், அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த புகையை ஜீவராசிகள் சுவாசித்தால் அது அவர்களை நொடியில் கொல்லும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

More Articles
Follows