நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்..; தளபதிக்கு தங்க மனசு..!

நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்..; தளபதிக்கு தங்க மனசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayநண்பர்கள் தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நண்பர்கள் வெளியில் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு..; ஸ்டாலின் நன்றி

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு..; ஸ்டாலின் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்… புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி திட்டத்தை சேர்த்திருப்பது வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!

இவ்வாறு முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ அட்டை..; இது கொரோனாவை கொல்லுமா.?

அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ அட்டை..; இது கொரோனாவை கொல்லுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sellur rajuஏழை முதல் பணக்காரன் வரை எவரையும் மிச்சம் வைக்காமல் போட்டு தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

நாம் எவ்வளவு தான் பாதுகாப்புடன் விழிப்புணர்வு உடன் இருந்தாலும் சில நேரம் நம்மையே தொற்றிக் கொள்கிறது.

அமித்ஷா முதல் அமிதாப் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெல்ல மெல்ல குணமடைந்து வருகின்றனர்.

அண்மையில் தன்னை கொரோனா தொட்டுவிட்டுச்சென்றது என்றார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ.

ஆனாலும் தற்போது பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ‘வைரஸ் ப்ளாக் அவுட்’ என்ற பெயரில் ஜப்பான் நிறுவன அட்டையை தன் கழுத்தில் தொங்கவிட்டு வருகிறார்.

இந்த அட்டையானது 1 மீட்டர் சுற்றளவில் காற்றில் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த அட்டைக்குள் குளோரின் டை ஆக்ஸைடு நிரப்பப்பட்டுள்ளது.

முகக்கவசம், சானிடைசர் ஆகியவற்றுடன் இந்த அட்டை ஒரு கூடுதல் பாதுகாப்பு என சொல்லப்படுகிறது.

அமேசான் உள்ளிட்ட இணையதளத்தில் இந்த அட்டை ₹ 150 முதல் கிடைக்கிறதாம்.

இந்த அட்டை கொரோனாவை கொல்லுமா.? என்பதுதான் புதிராகவே உள்ளது.

அஜித் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி

அஜித் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kasthuri ajith1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இவரை அஜித் ரசிகர்கள் அடிக்கடி வம்புக்கு இழுப்பது வழக்கம். அவரும் பதிலடி கொடுப்பார்.

இந்த நிலையில் அஜித் டிபி வைத்த ஒரு ரசிகர்… கஸ்தூரி பிரபுவுடன் நடித்த பழைய திரைப்பட வீடியோவை குறிப்பிட்டு கஸ்தூரியை விமர்சித்திருந்தார்.

இது நம்ம கிழவி கஸ்தூரி தானே.. அந்த காலத்துல சூப்பர் ஃபிகரா இருந்திருப்பா போல… என கமெண்ட் செய்துள்ளார்.

அதைப் பார்த்த கஸ்தூரி… “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்?

இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ” என கிழித்துவிட்டார் கஸ்தூரி.

சினிமா சூட்டிங் ; தியேட்டர் ஓபனிங் எப்போ..? கடம்பூர் ராஜூ பதிலால் கவலையடைந்த திரையுலகினர்

சினிமா சூட்டிங் ; தியேட்டர் ஓபனிங் எப்போ..? கடம்பூர் ராஜூ பதிலால் கவலையடைந்த திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuகோவில்பட்டி‌ அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

“சினிமா சூட்டிங்க்கு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

டிவி சீரியல் சூட்டிங் நடைபெற உள்அரங்கு போதுமானது. அங்கு 60 பேர் இருந்தால் கூட போதுமானது.

ஆனால் அவுட்டோரில் சினிமா சூட்டிங் நடைபெறும். எனவே அங்கே பார்வையாளர்கள் திரளுவார்கள்

மேலும் சூட்டிங் நடத்த பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது.

இப்போதுள்ள கொரோனா கட்டுப்பாடு சூழ்நிலையில் அதற்கெல்லாம் அனுமதிக்க வழங்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

மேலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.“ என்றார்.

அமைச்சரின் இந்த பதிலால் கவலையடைந்த திரையுலகினர் தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என காத்திருக்கின்றனர்.

வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்..; சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் என்ன தொடர்பு..?

வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்..; சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் என்ன தொடர்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nanjil vijayan vanithaகடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் வனிதா.

தன்னை சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார்.

இதனை அடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூப் சேனல் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் ஆதரவளித்தனர்.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

அப்போது சூர்யா தேவிக்கும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

அதனால் நாஞ்சில் விஜயனும் வனிதாவுக்கு மோதல் உருவானது.

இந்த வேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார் வனிதா.

கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா…, “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார்.

அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

என பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா.

More Articles
Follows