விஜய் படத்தலைப்புக்கு எதிர்ப்பு; அஜித் அலர்ட் ஆவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இவருடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என பெயர் வைக்கவுள்ளதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

எனவே, இதனையறிந்த எம்ஜிஆர் பொதுநல சங்கத்தினர் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், எம்.ஜி.ஆரின் தொண்டர் படை சார்பில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு உலகம் சுற்றும் வாலிபன் என தலைப்பிடப்படலாம் என தெரிகிறது.

இதுவும் எம்ஜிஆர் படத்தலைப்பு என்பதால், இதற்கு எதிர்ப்பு வரும் முன்பே அஜித் அலர்ட் ஆவாரா? என்பதை பார்ப்போம்.

சூர்யாவுடன் முதன்முறையாக இணையும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கம் 3 படத்தை முடித்துவிட்டு, கிராமத்து மண்ணில் வேட்டிய மடிச்சி கட்டி களம் இறங்க போகிறார் சூர்யா.

இப்படத்தை கிராமத்து பின்னணியில் உருவாக்கவிருக்கிறார் முத்தையா.

இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இந்தக் கூட்டணியில் கீர்த்தி சுரேஷும் முதன்முறையாக இணையவுள்ள நிலையில், இப்படத்திற்கு இமான் இசையமைக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

இது இன்னும் உறுதியாகாத நிலையில், ஒருவேளை நடந்தால், சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.

சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில், 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ரெமோ.

இப்படத்தின் வியாபாரம் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

அதன்படி தற்போது ஒவ்வொரு ஏரியாவாக உரிமைகள் விற்கப்பட்டு வருகின்றன.

கோவை உரிமையை சீனியர் விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருக்கிறார்.

மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவை ஜி.என். அழகர் சாமி, மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்.

ராமராஜனுடன் இணைந்த ஜீவா… ஒர்க் அவுட் ஆகுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் சூப்பர் ஸ்டாருக்கு படங்களுக்கு சவால் விட்டவர் ராமராஜன்.

பல வெள்ளி விழா படங்களை இவர் கொடுத்திருந்தாலும் இவரது ஒரு சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இதில் 1991ஆம் ஆண்டு வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படமும் ஒன்று.

இந்நிலையில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு இதே தலைப்பையே வைத்துள்ளனர்.

சூப்பர் ஹிட் அடித்த படங்களின் தலைப்பாக வைத்திருக்கும் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜீவா படத்திற்கு இப்படியொரு தலைப்பு வைத்திருப்பது ஒர்க் அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த தலைப்பில் எம்ஜிஆர் பாடல் ஒன்று இருப்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தை திருநாள் படத்தை தயாரித்த கோதண்டபாணி நிறுவனம் தயாரிக்கிறது.

கீர்த்தி சுரேஷை வாழ்த்திய மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள நடிகைகளுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் அதிக மவுசு உண்டு.

தற்போது கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் உள்ளிட்டவர்கள் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த, தொடரி படத்தின் 2வது ட்ரைலர் சற்றுமுன் வெளியாகியது.

இதனைப் பார்த்த மஞ்சிமா மோகன் கீர்த்திக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

எனவே, கீர்த்தியும் அதற்கு பதிலளித்து நன்றியை தெரிவித்துள்ளார்.

சிம்பு, உதயநிதி உள்ளிட்டவர்களின் படங்களில் மஞ்சிமா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலியால் தள்ளிப் போன ஜி.வி. பிரகாஷின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவின்பாலி, இஷா தல்வார் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த படம் ‘தட்டத்தின் மறயத்து’. வினீத் சீனிவாசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார்.

இதில் அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு பெற்றுள்ளார்.

இன்று இப்படம் வெளியாகவிருந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை தாணு தள்ளி வைத்துள்ளார்.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் இன்னும் கபாலி ஓடிக்கொண்டிப்பதால், தியேட்டர் கிடைக்காத காரணத்தால், இப்படத்தை ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

More Articles
Follows