‘மைனா’ நந்தினி கணவர் கார்த்தி தற்கொலை; காரணம் இதுதானா.?

‘மைனா’ நந்தினி கணவர் கார்த்தி தற்கொலை; காரணம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV fame Maina fame Nandhini husband Karthi attempts suicideவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில், ‘மைனா’ என்னும் கேரக்டரில் கலக்கியவர் நந்தினி.

தற்போது டிவி ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.

இவருக்கும் ஜிம் ட்ரெய்னரான கார்த்திகேயனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீடீரென கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதற்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நந்தினி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“நான் அவரிடம் உண்மையாக இருந்தேன். ஆனால் கார்த்தி என்னிடம் உண்மையாக இல்லை.

கவர்மென்ட்டில் ஜாப் வாங்கி தருகிறேன் என பல பேரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

இதுபற்றி கேட்டபோது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

மீண்டும் மீண்டும் கேட்டபோது, தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டினார்.

இனி அவரிடம் செட்டாகாது என்று வீட்டிற்கு வந்துவிட்டேன்.

ஆனால் இப்போது அவர் இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.

அவரை பிணமாக பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Vijay TV fame Maina fame Nandhini husband Karthi attempts suicide

 

‘குரங்கு பொம்மை’க்கு கைகொடுத்த மம்மூட்டி-விஜய்சேதுபதி

‘குரங்கு பொம்மை’க்கு கைகொடுத்த மம்மூட்டி-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mammootty and Vijay Sethupathiநித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குரங்கு பொம்மை’.

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் சார்பாக எல்.எல்.பி தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி வெளியிட்டார்.

இதன் அனிமேஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்.

இந்நிலையில், இதன் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் யுவனே இதன் இசை உரிமையை பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.

சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை காட்டும் ‘லென்ஸ்’

சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை காட்டும் ‘லென்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lens tamil movieயதார்த்தமான கதைகளத்தில் சொல்ல வரும் கருத்தை மிக ஆழமாக பார்வையாளர்களிடம் பதிவு செய்யும் திறமை பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன்.

இவர் இயக்கிய படங்கள், தயாரித்த படங்கள் என பல தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.

இவ்வாறு கதை மற்றும் கருத்தினை கொண்ட கதைகளில் கவனம் செலுத்தும் இவர், தற்போது இணையதள குற்றங்களை பின்புலமாக கொண்ட சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கும் படமான ‘லென்ஸ்’ படத்தை தமிழில் வெளியிடுகிறார்.

படத்தின் போஸ்டர் லுக் முன்னரே வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.

திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவன்களுக்கு மட்டுமே சாத்தியமான இச்சாதனை, இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

சமூக ஊடகங்களின் வாயிலாக நடைபெறும் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடின உழைப்பில் உருவானது.

உருமி, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார்.

எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகும் முன்பே நான்கு விருதுகளை பெற்றது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை வெளியிட இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.

ரஜினி இடத்திலிருந்து ஆக்ஷனை ஆரம்பிக்கும் விஷால்

ரஜினி இடத்திலிருந்து ஆக்ஷனை ஆரம்பிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer council new elected team function will be held in Ragavendra Mandapamதமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இனி திருட்டு விசிடிகள் மற்றும் இணையங்களில் படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறித்தார்.

இந்நிலையில் இந்த புதிய அணியின் பதவியேற்பு விழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 6ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இந்த விழா ரஜினிக்கு சொந்தமான சென்னை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவிற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் அவர்களின் குடும்பத்தோடு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் விஷால்.

மேலும், திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குனர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.

Producer council new elected team function will be held in Ragavendra Mandapam

நயன்தாராவுக்கு கை கொடுக்கும் ஏஆர். ரஹ்மான்

நயன்தாராவுக்கு கை கொடுக்கும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman goint to release Nayantharas Aaram movie teaserஹீரோக்களை நம்பியே பல படங்கள் பயணித்தாலும், ஒரு சில நடிகைகளை நம்பி சில படங்களை இயக்கி வருகிறார்கள் சில இயக்குனர்கள்.

சில வருடங்களுக்கு முன்பு விஜயசாந்தி படங்களுக்கு செம மார்க்கெட் இருந்தது.

அதன்பின் அனுஷ்கா என்று தொடர்ந்த இந்த பார்முலா, தற்போது நயன்தாராவை நம்பி இருக்கிறது.

இவரது நடிப்பில் வெளியான டோரா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் இதுவரை ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அறம்.

இப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறாராம்.

AR Rahman goint to release Nayantharas Aaram movie teaser

aramm

தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் அதிரடி மனு

தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் அதிரடி மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush sudden parents filed new petitionநடிகர் தனுஷ், தங்கள் மகன் என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர்.

சான்றிதழ்களில் பெயர்க் குழப்பம், லேசர் சிகிச்சையில் அடையாளங்கள் அழிப்பு, என அதிரடி திருப்பங்களுடன் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தனுஷ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மனுவின் இருப்பது தனுஷின் கையெழுத்தே இல்லை என்றும், அதை நிரூபிக்க மனுவின் நகலைக் கேட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர் தம்பதியினர்.

Dhanush sudden parents filed new petition

More Articles
Follows