அம்மா ஷோபாவுடன் நடிக்க விஜய் போடும் கன்டிஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகியான நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறார். இவருக்கு நீண்ட நாட்களாக தன் மகன் விஜய்யுடன் ஒரு படத்தில் அம்மாவாக நடிக்க விருப்பம் உள்ளதாம்.

இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளாராம் விஜய்.

தன் அம்மாவின் கேரக்டர் படத்தில் மிக முக்கியமான கேரக்டராக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதை கிடைக்கும் பட்சத்தில் மட்டும்தான் நடிப்பேன் என கன்டிஷன் போட்டுள்ளாராம்.

சூர்யா – கார்த்தி இணையும் பிரம்மாண்ட படம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தன் ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். ’36 வயதினிலே’ மற்றும் ‘பசங்க 2′ ஆகிய படங்களை தொடர்ந்து ’24’ என்ற படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்தார்.

இப்படமும் சூர்யாவுக்கு நல்ல லாபத்தை பெற்று தரவே, தற்போது தன் தம்பி கார்த்தி நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கிறாராம். இதற்காக பல முன்னணி இயக்குநர்களிடம் சூர்யா கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘காஷ்மோரா’ மற்றும் மணிரத்னம் படங்களை முடித்துவிட்டு, தன் அண்ணன் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணையும் சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பு, நடிப்பு என கவனம் செலுத்தி வந்தாலும் இடையில் தன்னை வளர்த்து விட்ட டைரக்ஷனையும் விடாதவர் சுந்தர் சி.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமாக படத்தை இயக்கவிருக்கிறார் இவர்.

இப்படத்தின் நாயகன், நாயகி யார்? என்ற உறுதியான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.சரித்திர படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இதனை நடிகை குஷ்பூ தன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்தி ரீமேக்கில் விஜய்யாக சிரஞ்சீவி… சதீஷாக யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி தமிழில் சூப்பர் ஹட்டடித்தது.

தற்போது இது தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் 150வது படமாக உருவாகி வருகிறது.

வி.வி.விநாயக் இயக்க லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ராம் சரண்.

ஹீரோயின் வேட்டை தொடர்ந்து நடைபெறும் வேலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று வெளியிடவுள்ளனர்.

இதில் சதீஷ் வேடத்தில் அலி நடிக்கிறார்.

தன்னுடைய கேரக்டரில் அலியை தவிர யார் நடித்தாலும் பொருத்தமாக இருக்காது என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்காக ஐ.நா. சபை செல்லும் ஏ.ஆர். ரஹ்மான்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் இந்திய சினிமா இசையை உலகறிய செய்தவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் விரைவில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறாராம் ரஹ்மான்.

பிரபல பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐ.நா.சபையில் கொண்டாடப்படவுள்ளது. எனவே, எம்.எஸ். சுப்புலட்சுமியை கௌரவப்படுத்தும் வகையில் தனது சன்சைன் இசைக்குழுவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

50 வருடங்களுக்கு முன்பு (1966) ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனில் கர்ஜித்த கபாலி…. லைக்கா ராஜூ மகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அமெரிக்காவில் இருப்பதால், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் கடந்த வாரம் மீடியாவை திணறச் செய்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரஜினி குடும்பத்தார் விளக்கம் அளித்த போதிலும், ரஜினி இன்னும் நாடு திரும்பவில்லை என்பதால், வதந்திகள் முழுமையாக மறையவில்லை.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் ராஜூ மகாலிங்கம் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது ரஜினியின் குரல் சிங்கம் கர்ஜிப்பது போல இருந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜூலை 3ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாகவும் அப்போது ‘கபாலி’ ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More Articles
Follows