தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்திற்கு தளபதி என்ற பெயர் வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் சூட்டிங் பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் நடைபெற இருந்தது.
விஜய் பட சூட்டிங் நடப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.
அப்போது கேரவனை விட்டு வெளியே வந்த விஜய், கூட்டத்தை பார்த்து ஷாக்காகி விட்டாராம்.
நிச்சயமாக இவ்வளவு கூட்டத்திற்கு நடுவே என்னால் நடிக்க முடியாது.
சென்னையில் இதுபோன்று செட் போட்டு சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி சூட்டிங்கை நிறுத்தி விட்டாராம்.
எனவே செப்டம்பர் 2-ந்தேதி இதன் தொடர்ச்சி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.