தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் ‘பவுடர்’.
இந்த படத்தில் நிகில் முருகன், வித்யா பிரதீப், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆதவன், அனித்ரா நாயர், இளையா, வையாபுரி, ஒற்றன்துரை, சதீஷ் முத்து ராமராஜன், சில்மிஷம் சிவா, தர்மா, விக்கி, முருகன், அர்ஜுன், மனோ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லீயாண்டர் லீ மார்ட்டி இசையமைக்க, ராஜபாண்டி & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த படத்தை மோகன்ராஜ் என்பவர் இணை தயாரிப்பாளராக தயாரித்து வருகிறார்.
இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமாக மனிதக்கறி வேட்டை இடம் பெற்றது.
மனிதக்கறி தமிழகத்திற்கு ஊடுருவி வருவதாக இந்த படத்தில் காட்சிகள் வைத்து இருந்தார் விஜய்ஸ்ரீ.
நவம்பர் 25ஆம் தேதி ‘பவுடர்’ படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இதனை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி பவுடர் படத்தின் டிரைலர் வெளியானது.
இதில்.. மோடி அரசை கலாய்த்து சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு காட்சியில்… “உங்களுக்கு வேணும்னா கைதட்ட சொல்லுவீங்க.. விளக்கு ஏற்ற சொல்லுவீங்க.. ” என்று கொரோனா காலத்தில் நடந்த சம்பவங்களை ஆதவன் பேசுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த காட்சிகளுக்கு சென்சாரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த காட்சிகளை கட் செய்யாமல் அந்த வசனங்களை மீயூட் செய்துள்ளனர்.
னவே அந்த காட்சிகளை இந்த ட்ரெய்லரில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் விஜய்ஸ்ரீ.
மேலும் மற்றொரு (படத்தில் இடம் பெற்றுள்ளது) காட்சியில்.. “ஒரு அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி மொட்ட ராஜேந்திரனிடம்.. “சிசிடிவி கேமரா இருக்கிறதா? என கேட்கிறார் போலீஸ் நிகில் முருகன்.
அதற்கு சிசிடிவி கேபிள் ஒயர்களை அணில் கடித்து விட்டது என்கிறார்.. “யோவ் என்னய்யா சொல்ற என மீண்டும் கேட்கிறார்.. மின்சார ஒயர்களை அணில் கடிக்கும் போது கேபிள் ஒயர்கள் அணில் கடிக்காதா? என ஸ்டாலின் திமுக அரசையும் கலாய்த்துள்ளார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.
Powder movie Trailer troll Modi and Stalin Governments
Here’s Powder – Official Trailer
கூடுதல் தகவல்..
கடந்த 2021ல் திமுக அரசு பதவி ஏற்ற சில மாதங்களிலேயே… “மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘அப்போது்.. ’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்து இருந்தார் அமைச்சர்.