கஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி

கஜா-வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்சேதுபதி 25 லட்சம் நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victimsதமிழகத்தின் டெல்டா பகுதிகளை கஜா புயல் தாக்கியதால் வீடு, தொழில்களை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை 45 பேர் உயிர் இழந்துள்ளனர். எண்ணற்ற ஆடுகள், மாடுகள் உயிரிழந்துள்ளன.

சாலையெங்கும் மரங்கள் வீழ்ந்து கிடப்பதால் மின் கம்பிகளும் அறுந்துள்ளன. இதனால் மின்சாரமும் இல்லாமல் தவித்து வருகின்றன.

4 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

டெல்டா பகுதி மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் நிவாரணப்பணிகளை செய்து வருகின்றனர்.

அரசு நிவாரணப் பணிகளும் தாமதம் ஆகி வருவதால் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்…

”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும்.

லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும்.

அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்.“ என்றார்.

இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathis kind gesture for Cyclone Gaja victims

அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

அக்னிச் சிறகுகளுக்காக பாடிலாங்வேஜை மாற்றும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய நவீன் இப்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடித்து வரும் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்தில் இயக்க உள்ளார் நவீன்.

இதில் பிரகாஷ்ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

டி.சிவாவின் ‘அம்மா கிரியேசன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் கமல் வெளியிட்டார்.

இப்படத்திற்காக விஜய் ஆண்டனியில் பாடிலாங்வேஜை முழுமையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறாராம் நவீன்.
மேலும் இதில் வித்தியாசமான விஜய்ஆண்டனியைப் பார்க்கலாம் என்கிறார் படக்குழுவினர்.

அதைத்தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்… ஆகட்டும்.. ஆகட்டும்…

Vijay Antony plans to change his body language for Agni Siragugal movie

கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

கஜா தாக்கிய டெல்டா பகுதிக்கு ஜிவி.பிரகாஷின் நிவாரண பொருட்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashநாகை, வேதாரண்யம் மற்றும் டெல்டா பகுதி மக்களுக்காக கஜா புயல் நிவாரண உதவிகளை 2-லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில்படத்தின் டப்பிங் பணிகளில் இருந்த ஜி.வி.பிரகாஷ் டப்பிங்கை தற்காலிகமாக நிறுத்தி விட்டு இப்படி ஒரு அதிரடி பணியில் ஈடுபட்டதை சோசியல் மீடியாக்களும், பொது மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இது பற்றி ஜி.வி.பிரகாஷ் பேசும் போது……

கஜா புயல் ஈவு இரக்கமற்ற பேரிடர் மற்றும் பேரழிவு . மக்கள் மீது தொடுக்கப்பட்ட இயற்க்கை சீற்றம் மனதுக்கு வேதனையை தந்தது. தென்னை மரங்கள், மா மரங்கள். வீடுகள், கால்நடைகளை இழந்து நிற்கும் அந்த விவசாயிகளை நினைக்கும் போதும், படகுகளை இழந்து நிற்கும் மீனவர்களை நினைக்கும் போதும் நிலை குலைந்து போனேன்.

அவர்களுக்கு தேவை அனுதாபமோ,ஆறுதலோ அல்ல. முடிந்த அளவு அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவோம்.

பேரிடரில் சிக்கி தவிக்கும் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி அன்பை விதைத்து மனித நேயம் காப்போம் என ஜி.வி.பிரகாஷ் கூறினார்.

ஒக்கி புயலின் போதும் ஜி.வி.பிரகாஷ் களத்தில் இறங்கி சேவை செய்ததை குமரிமக்கள் பெரிதும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தை தொடங்கிய ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR shootபாகுபலி படத்திற்கு முன்பே ராஜமௌலி படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுவும் உலகையை கலக்கிய ‘பாகுபலி 1 மற்றும் 2’ பாகங்கள் வந்த பின்னர் இந்த எதிர்பார்ப்பு இரட்டிப்பாகி விட்டது.

அந்த படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று திங்கள் (நவ., 19) முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

படத்தின் ஹீரோக்கள் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகள் இன்று படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

முதன் முதலாக ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் நாயகன் ஜுனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

அதன் பின் ‘சிம்ஹாத்ரி, யமதொங்கா’ ஆகிய படங்களிளிலும் அவரை இயக்கினார்.

‘மகதீரா’ படத்தில் ராம் சரணை இயக்கினார்

தற்போது இவர்கள் மூவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜமௌலி படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருப்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் ஹீரோயின்கள் விவரம் இதுவரை தெரியவில்லை.

ஜான்வி கபூர், ஆலியா பட் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கஜா பாதிப்புக்கு ரூ. 50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த சிவகுமார் குடும்பம்

கஜா பாதிப்புக்கு ரூ. 50 லட்சத்தை அள்ளிக் கொடுத்த சிவகுமார் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakumarகடந்த சில தினங்களுக்கு முன்னர் கஜா புயல் தமிழக மாவட்டங்களை தாக்கியது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மாவட்டமும் பாதிப்புக்குள்ளாகியது.

மேலும் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களும் கடும் சேதத்தை சந்தித்து உள்ளன.

இவற்றை மீட்டெடுக்க தமிழக அரசு நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இருந்தபோதிலும் அரசு பொறுமையாக செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நான்கு நாட்களாகியும் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

குடிக்க தண்ணீர் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவகுமார் குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ. 50 லட்சத்தை நிதியாக அளித்துள்ளனர்.

இது குறித்து சூர்யாவின் படத்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன.

புயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

“தமிழ்நாட்டின் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வழங்குவது காவிரிப் படுகை” என்று நெல் ஜெயராமன் தெரிவித்திருப்பது நூறு சதவீதம் உண்மை. அந்தப் பகுதிகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்சம் வழங்கியுள்ளனர். திரு.சிவகுமார், திரு.சூர்யா, திரு.கார்த்தி, திருமதி.ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள்.

இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்.

நமீதாவின் *அகம்பாவம்*.; கொடூர அரசியல்வாதியாக வாராகி

நமீதாவின் *அகம்பாவம்*.; கொடூர அரசியல்வாதியாக வாராகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agam pavamஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படம் ‘அகம்பாவம்’.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நமீதா நடிக்கிறார்.

திருமணத்திற்குப் பின் நடிக்காமல் இருந்தார் நமீதா. பல கதைகள் கேட்டும் மீண்டும் நடிக்கும்போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் எனக் காத்திருந்தவருக்கு ஸ்ரீமகேஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஓகே சொன்னவர் அதற்காக 10 கிலோவுக்கு மேலும் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அவருடன் கொடூரமான வில்லனாக மிரட்ட இருக்கிறார் வாராகி. தான் தயாரிக்கும் படத்தில் பலர் கதாநாயகனாகவே விரும்புவர்.

ஆனால் வாராகி கதையின் முக்கியத்துவத்தை தூக்கி நமீதாவின் தோளில் வைத்துவிட்டு அதின் பிரம்மாதமான கதாபாத்திரமான வில்லன் ரோலை ஏற்றுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் கஷ்யப்பை கழித்துவிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? அப்படி அகம்பாவத்தில் வாராகி ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரமும் இருக்கும்.

இவர்களுடன், மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கோலிசோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு ஜெகதீஷ் வி.விஸ்வம்,

ஸ்டண்ட் ; இந்தியன் பாஸ்கர்,

நடனம் ; ராபர்ட்,

படத்தொகுப்பு ; சின்னு சதீஷ்

கதை மற்றும் தயாரிப்பு ; வாராகி,

இணை தயாரிப்பு சுஜிதா செல்வராஜ்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சத்ரபதி ஸ்ரீமகேஷ்.

இவர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கியவர்.

வாராகி தன் நிஜ வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான நிகழ்வுகளை கதையாக்கியிருக்கிறார். அதற்கு தனது வலிமையான வசனங்கள், திரைக்கதை யுக்தியின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ஸ்ரீமகேஷ்.

பரபரப்பான சமூக போராட்டம் கொண்ட விதையாக உருவாக இருக்கிறது அகம்பாவம்.

பெண் போராளிக்கும் ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த அகம்பாவம் படத்தின் கதை.

இதற்கு மத்தியில் அழகான ஒரு காதலும் இருக்கிறது.

இதில் நமீதா கதையின் நாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க உள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகருமான வாராகி மிகக் கொடூரமான அரசியல்வாதியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் துவங்க இருக்கிறது.

துவக்க நாளன்றே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.

இந்த க்ளைமாக்ஸ் காட்சி தொடர்ந்து நான்கு நாட்கள் படமாக்கப்படுகிறது.

காரணம் நீண்ட நாட்கள் கழித்து, தமிழ்சினிமாவில் நீதிமன்றம் ஒன்றில் ஒரு பெண் ஒருவரின் துணிச்சலான வாதம், இருபது நிமிட க்ளைமாக்ஸ் காட்சியாக இந்தப் படத்தில் இடம்பெறுகிறது.

இந்த க்ளைமாக்ஸ் காட்சி முழுதும் நமீதாவின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவரும் என அடித்து சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ்.

இந்த காட்சி முழுக்க முழுக்க வசனங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நமீதா இதன் வசனங்களை ஒரு வாரம் முன்பே எழுதி வைத்துக்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு நடிக்கத் தயாராகியிருக்கிறாராம்.

இப்படி ஒரு கதாபாத்திரத்திற்காகத்தான் நான் காத்திருந்தேன் என உற்சாகமான நமீதா இதற்கான ஒத்திகையிலும் கலந்துகொண்டு பக்காவாக தயாராகியுள்ளாராம்…

“இதுவரை நமீதா நடித்துள்ள 60 படங்களில் அவரிடம் நாம் பார்த்திராத புதுவிதமான நடிப்பை இதில் நாம் பார்க்கலாம். அந்த அளவுக்கு நடை, உடை, ஒப்பனை, ஹேர்ஸ்டைல் என எல்லாவற்றிலும் புதிய நமீதாவை நீங்கள் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் ஆக்சனிலும் அசத்த இருக்கிறார்.

இந்தப்படம் நமீதாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக இருக்கும்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீமகேஷ் நம்பிக்கையுடன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பண்ருட்டி, தேனி, கல்வராயன் மலை, சேலம் ஆகிய பகுதிகளில் சுமார் 40 நாட்களுக்கு மேல் நடைபெற இருக்கிறது.

More Articles
Follows