தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர்.
அவ்வப்போது பல சமூக கருத்துக்களை கூறி வருகிறார் இவர். இதனால் இவரது படங்களை வைத்து நிறைய மீம்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் வலம் வருகின்றன.
இதனிடையில் கடந்த வாரம் செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்கத் தமிழக காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்தார்.
இந்த செயலியால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி, குறையும்’ என்றார்.
இதை ஒரு டிவி சேனல் டிசைன் செய்து பதிவிட்டது. ஆனால் சில விஷமிகள் அந்த வார்த்தைகளை எடுத்துவிட்டு பகவத் கீதையை அவதூறாக விஜய்சேதுபதி பேசியது போல் வார்த்தைகள் டிசைன் செய்திருந்தனர்.
இதனால் சர்ச்சை ஆனது. இதனையறிந்த விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.
‘என் அன்பிற்குரிய மக்களுக்கு… பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
Vijay Sethupathi tweets clarification on Bhagavad Gita controversy