விஜய்சேதுபதி-சமந்தா இணையும் படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வருடம் மட்டும் அரை டஜன் படங்களை கொடுத்துவிட்டு இன்னும் அசராமல் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி.

இவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தை ஆரண்ய காண்டம் படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

இதில் சமந்தா, மிஷ்கின், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அநீதிக் கதைகள் எனப் பெயரிட்டுள்ளனர்.

அதர்வா பட இயக்குனருடன் இணையும் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வாவின் கேரியரில் முக்கியமான படம் பரதேசி, ஈட்டி, கணிதன் உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

விரைவில் இவர் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆனால் இந்த செய்தி அவரை பற்றியது இல்லை.

அதர்வா நடித்த ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு பற்றியது.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம்.

அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

காலக்கூத்து…. ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்-கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படப்புகழ் கலையரசன் மற்றும் பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள படம் காலக்கூத்து.

இதில் தன்ஷிகா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நாயகிகளாக நடித்துள்ளனர்.

நாகராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று ட்விட்டரில் 6.00 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார் என விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் 20 நிமிடங்கள் ஆகியும் இதுவரை டீசரும் வெளியாகவில்லை.

அதற்கான காரணமும் வெளியாகவில்லை.

ஒருவேளை முடியவில்லை என்றால், காரணம் கூட சொல்லாமல் ரசிகர்கள் ஏன் இப்படி காத்திருக்க வைக்கின்றனர் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பின்குறிப்பு… இச்செய்தி வெளியாகும் வரை எந்த தகவலும் வரவில்லை. அதன்பின்னர் தற்போது நடிகர் பிரசன்னாவின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Due to a slight technical glitch, teaser launch is pushed to 11 tonight! will launch as announced. sorry guys

 

ரஜினிக்கு இவர் வழக்கமான வில்லன் இல்லையாம்; அதுக்கும் மேல!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்க, லைக்கா பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் 2.ஓ.

இதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், சுதான்ஷு பாண்டே நடிக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் கேரக்டர் குறித்து சுதான்ஷு பாண்டே தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

எனக்கும் ரஜினிசாருக்கு பைட் சீன்ஸ் இல்ல. நான்தான் அவருக்கு வில்லன்.

ஆனால் வழக்கமான வில்லன் இல்லை.

இதில் விஞ்ஞானி போஹ்ராவின் மகனாக நடிக்கிறேன்.

எனக்கும் அக்ஷய் குமாருக்கும் அதி பயங்கர பைட் சீன்ஸ் உள்ளது.

நிச்சயம் ரசிகர்களுக்கு அது ஆக்ஷன் விருந்தாக இருக்கும்” என்றார்.

இப்படம் குறித்த விபரங்களை கலைஞர்கள் வெளியிடக்கூடாது என ஷங்கர் முன்பே கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

‘தல 57’ படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகும் தல 57 பட பூஜையையொட்டி இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தினர்.

அதன்பின்னர் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்தி வந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்ப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு செல்லவிருக்கிறார்களாம்.

நவ. 12ஆம் தேதி முதல் கிட்டதட்ட 2 மாதங்களுக்கு இதன் சூட்டிங் நடைபெறுகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விகேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து, மீண்டும் சிம்பு-கௌதம் மேனன்-ஏஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

நீண்ட நாட்களாக தயாரிபில் இருந்த இப்படம் நாளை நவம்பர் 11ஆம் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்…

  • சிம்புவின் நண்பராக டான்ஸர் மாஸ்டர் சதீஷ் இதில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார்.
  • சிம்புவின் சிஸ்டரின் தோழியாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.
  • முதலில் நட்பாக பழகும் இவர்கள் பின்னர் காதலர்களாக மாறுகின்றனர்.
  • இப்படத்தின் முதல் பாதியிலேயே படத்தின் 5 பாடல்களும் இடம்பெறுகிறதாம்.
  • காரணம் இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க ஆக்ஷன் இருப்பதால், பாடல்கள் அதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.
  • இதில் பைக் பிரியராக சிம்பு நடித்துள்ளார். எனவே படுவேகத்தில் பைக்கை ஓட்டும் காட்சிகள் இருக்கிறதாம்.
  • மேலும் இது ரோடு ஜர்னி டைப் படமாக உருவாகியுள்ளது-
  • பிரச்சினை என்று வரும்போது நாம் ஓடி ஒளியக் கூடாது என்பதால்தான் அச்சம் என்பது மடமையடா என படத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார்களாம்.
  • இப்படத்தில் நாயகியாக முதலில் கமிட் ஆனவர் பல்லவி சுபாஷ்.
  • ஆனால் இந்த படம் தாமதம் ஆக, அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாகிவிட்டாராம். எனவேதான் மஞ்சிமா மோகனை தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கொண்டு வந்துள்ளார் இயக்குனர்.
  • இதில் இடம் பெற்றுள்ள தள்ளிப்போகாதே என்ற டியூனை பல முறை கேட்டும் கவிஞர் தாமரைக்கு புரியவில்லையாம்.
  • இருந்தாலும், பலமுறை கௌதம் விளக்கம் கொடுக்க கேட்டு கேட்டு எழுதியிருக்கிறார் தாமரை.
  • இதற்கான டியூனை விமானத்தில் பறந்துக் கொண்டே ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளார்.
  • சூட்டிங்குக்கு எப்பவும் சிம்பு லேட்டாகத்தான் வருவாராம்.
  • ஆனால் வந்த பின் மொத்த குழுவையும் ஜாலியாக வைத்திருப்பாராம். காட்சிகளை உடனே முடித்து கொடுத்து விடுவாராம்.
  • இப்படத்தை தமிழில் யாரும் தயாரிக்கவில்லை.
  • ஆனால் தெலுங்குப் பதிப்பிற்கு கிடைத்த பணத்தை வைத்தே இரண்டு படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக கௌதம் தெரிவித்துள்ளார்.
  • தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள்.
  • இதன் வெளியீட்டு உரிமையை ட்ரைடண்ட் ஆர்ட் ரவி பெற்றுள்ளார்.
More Articles
Follows