விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன் வழங்கும் விகடன் அவார்ட்ஸ் மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ..

உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது. இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது,

“இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்றார்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்” படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.

நடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…

Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.

மேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…

இயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…

ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினி முருகதாஸ் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவான தர்பார் படம் நேற்று முந்தைய தினம் ஜனவரி 9ல் ரிலீசானது.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தர்பார் பட வசூலை தகர்க்க சிலர் திட்டமிட்டூள்ளனர்.

தியேட்டரில் தர்பார் படம் பார்க்கும்போதே மொபைல் போனில் படம் பிடித்து அதை 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அத்துடன் ஒரு ஆடியோ பதிவையும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதில்… தர்பார் படத்தை தியேட்டர்ல போய் யாரும் பார்க்க கூடாது. இந்த வீடியோவை எல்லாருக்கும் பகிருங்கள் என பேசியுள்ளான்.

இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் லைகா தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் டி.சிவா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
தலைவர் ரஜினியின் தர்பார் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளை தர்பார் படம்.

ஆனால் இது போல வாட்ஸ் அப்பில் பரப்பும் தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது. அது கொலை குற்றவாளிகளுக்கு நிகரானவர்கள் அவர்கள்.

அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் செய்து வருகின்றனர்.

அதனால் மக்கள் யாரும் வாட்ஸ் அப்பில் பார்க்கவேண்டாம்” என அவர்கள் தெரிவித்தனர்.

Darbar scences goes viral in WhatsApp Lyca filed police case

வடிவேலு ஏற்படுத்திய ரூ 14 கோடி நஷ்டம்; எலி படத்தயாரிப்பாளர் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களை கிட்டதட்ட 20 வருடங்களாக தன் நகைக்சுவையால் சிரிக்க வைத்து மகிழ்வித்தவர் நடிகர் வடிவேலு.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் இவர் நடிக்கவில்லை. கமலின் தலைவர் இருக்கின்றான் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடிவேலுவை நாயகனாக வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் என்பவர் தனக்கு அந்த படம் மூலம் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

வடிவேலுவை வைத்து படம் எடுக்க ஒரு நிறுவனம் தொடங்கி எலி படத்தை தயாரித்தேன். ஆனால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

அந்த நஷ்டத்தை ஈடு கட்ட 2 படங்களில் நடித்து தருவேன் என கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை. தற்போது என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். மேலும் வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீசிலும் புகாரும் அளித்திருந்தார்.

இதனை மறுத்துள்ள வடிவேலு கூறியதாவது.. என்னை களங்கப்படுத்தவும், என் எதிர்காலத்தை வீணாக்கவும் சிலர் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.” என கூறினார் வடிவேலு.

Eli Producer Sathish complaint against Vadivelu

ஏ.எம். ரத்னத்துடன் இணைய மறுத்தாரா நடிகர் அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த கில்லி, சிவகாசி, விக்ரம் நடித்த பீமா மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம்.

இந்த நிலையில இவர் மீண்டும் அஜித் படத்தை தயாரிக்க அணுகியதாக ஆனால் அதில் நடிக்க அஜித் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் பரவியது.

ஆனால் இது குறித்து ஏ.எம்.ரத்னம் தரப்பில் விசாரித்தபோது தற்போது அவர் தமிழ் படமே தயாரிக்கவில்லை எனவும் தெலுங்கு படத்தை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Thala Ajiths next movie with Producer AM Ratnam

‘தர்பார்’ க்ளைமாக்ஸில் நடித்த குட்டி பையன் ரஜினி பேரன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி (நேற்று முந்தையா நாள்) வெளியானது.

அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தை லைகா தயாரித்து இருந்தது.

இந்த படத்தை பார்த்த அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தர்பார் பட க்ளைமாக்ஸில் ஒரு குட்டி பையன் நடித்திருந்தான். அவர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் மகன் வேத் என தகவல்கள் பறந்தன.

ஆனால் அது உண்மையில்லை என சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Rajinis grand son is not part of Darbar movie

More Articles
Follows