தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் மணிகண்டன்.
32 வயதான இவர் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்ற போது 4 பேர் கும்பல் வழி மறித்து ஆயுதங்களால் மணிகண்டனை வெட்டி விட்டு தப்பியோடி உள்ளது.
அதன்பின்னர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணிகண்டன் இறந்து போனார்.
இது குறித்து அவரது மனைவி விஜயகுமாரி, உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ரசிகர் மன்றம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மன்ற நிர்வாகியான ஆட்டுபட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளதாம்.
எனவே ராஜசேகர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதையனையடுத்து ராஜசேகர் & தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Vijay Sethupathi fan club head murdered near Pondicherry