கைதிகளுக்கு 1000 புத்தகங்களை தானமாக வழங்கிய விஜய்சேதுபதி

கைதிகளுக்கு 1000 புத்தகங்களை தானமாக வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.

இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.

vijay sethupathi donated a thousand books to madurai jail

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.; சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’.; சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தில் தனுஷுடன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் தனுஷுக்கு ஐந்தாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் சமீபத்திய அறிக்கை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘கேப்டன் மில்லர்’ அப்டேட் ……. ஆயிரத்தில் ஒருவன் Celebration of Life BGM-க்கு பிறகு கேப்டன் மில்லருக்காக படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு இசையமைத்துள்ளேன், கிட்டதட்ட 3,4 bgms படமாக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்டது. mad bgms onway super excited” என ட்வீட் செய்துள்ளார்.

GV Prakash gives update on Dhanush’s ‘Captain Miller’

சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

சவால்களை விரும்பும் நடிகையின் கனவு நினைவானது.; ‘பத்து தல’ குறித்து பிரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்த படம் நாளை மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் தன் அனுபவங்கள் குறித்து பிரியா பவானி சங்கர் பேசியதாவது…

“ஒரு நடிகைக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பதை விடவும் சவாலான கதாபாத்திரங்கள் சிலது கிடைப்பது சிறந்த ஒன்றுதான். அது கனவு நனவாகும் ஒரு தருணம்.

இயக்குநர் கிருஷ்ணா சார் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலுவான ஒன்றாக இருக்கும்படியே அமைப்பார்.

அந்த வகையில், அவருடைய ‘பத்து தல’ படத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்திற்கு தயாரிப்பாளர்கள் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோர் மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளனர். கௌதம் கார்த்திக்குடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர். தன்னுடைய நடிப்பில் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.

சிலம்பரசனின் தோற்றமும் நடிப்பும் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியது. இந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட் மீதும் அவரது அதீத அர்ப்பணிப்பு படம் பார்க்கும்போது தெரிய வரும்.

ஒவ்வொரு நடிகரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

ஒவ்வொரு பிரேமும் மிகவும் கச்சிதமாக இருப்பதை உழைப்பைக் கொடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையைக் கேட்டு வளர்ந்த நான், அவருடைய இசையமைப்பிலேயே திரையில் வருகிறேன் என்பது எனக்கு மிகவும் எமோஷனலான மற்றும் மகிழ்ச்சியான தருணம். குடும்பப் பார்வையாளர்களின் ரசனையை நிச்சயம் திருப்திப்படுத்தும் வகையில் பல எமோஷன்கள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என கமர்ஷியலான விஷயங்களை ‘பத்து தல’ கொண்டுள்ளது”.

இவ்வாறு தன் அனுபவங்களை பகிர்ந்தார் ப்ரியா பவானி சங்கர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

Actress Priya Bhavani Shankar talks about working in Pathu Thala

‘விடுதலை’ ரிலீசை ஒட்டி தன்னுடைய உதவியாளர்களுக்கு பரிசு வழங்கிய வெற்றிமாறன்

‘விடுதலை’ ரிலீசை ஒட்டி தன்னுடைய உதவியாளர்களுக்கு பரிசு வழங்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடுதலை பார்ட் 1’, மார்ச் 31 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

இதனிடையே வெற்றிமாறன் தனது 25 உதவி இயக்குனர்களுக்கு படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நிலம் வாங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே தனது உதவியாளர்களுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெற்றிமாறன் உதவியாளர்களுக்கு அங்கு வீடு கட்டி அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நிலத்தை விற்கக் கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Vetrimaaran’s unique gift to his assistants ahead of ‘Viduthalai Part 1’ release!

தங்களை நம்புகிறவர்களை வெற்றி பாதிக்காது.; RRR படக்குழுவை சந்தித்த குஷ்பூ

தங்களை நம்புகிறவர்களை வெற்றி பாதிக்காது.; RRR படக்குழுவை சந்தித்த குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் பிரபலமான பாடலான ‘நாட்டு நாடு’ 95வது அகாடமி விருதுகளில் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் அகாடமி விருதை வென்ற முதல் முழுமையான இந்தியப் பாடலாக அமைந்தது.

இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இருவரையும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

மேலும், ஹைதராபாத்தில் இருந்தபோது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியையும் சந்தித்தார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜமௌலி மற்றும் கீரவாணி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “இந்திய சினிமாவின் பெருமைகளான எஸ்.எஸ். ராஜமௌலி காரு மற்றும் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி காரு மற்றும் அவர்களின் அழகான கருணையுள்ள துணைவர்கள் ஆகியோரை ஹைதராபாத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். ஆரோக்கியமான ஆடம்பரமான காலை உணவுடன். வெற்றி தங்களை மிகவும் உறுதியாக நம்புபவர்களை பாதிக்காது. இந்த அற்புதமான மனிதர்கள் அதை நிரூபிக்கிறார்கள்” என கூறினார்.

குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Khushbu meets Rajamouli and MM Keeravani

EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

EXCLUSIVE – FDFS ரூட்டை மாற்றிய சிம்பு – தனுஷ்.; ரஜினி கமல் விஜய் அஜித் திருந்துவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 – 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கும் ஒரு விஷயமாக உருவெடுத்தது அதிகாலை சிறப்பு காட்சிகள்.

ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் சிறப்பு காட்சிகளுக்கு அரசும் அனுமதி வழங்கியது.

ஒரு படம் ரிலீசாகும் நாள் அன்று நள்ளிரவு ஒரு மணி காட்சி அதிகாலை 4 – 5 மணி காட்சிகள் என சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாகிவிட்டது.

அந்த சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்களும் டிக்கெட் விலையை தாறுமாறாக விற்றனர்.

ரசிகர்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் இரண்டாயிரம் வரை விலை கொடுத்து படத்தை பார்த்து வந்தனர்.

நள்ளிரவில் கண் விழித்து தியேட்டர் வாசலில் விடிய விடிய காத்துக் கிடந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் இரவெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடுகின்றனர்.

அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டால் தங்கள் படங்களுக்கு பெரிய ஓப்பனிங் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். எனவே சின்ன படங்கள் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தங்களுடைய ஆட்களை வைத்தாவது அதிகாலை சிறப்பு காட்சிகளை திரையிட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாலை சிறப்பு காட்சி வசூலில் யார் முன்னணி.? என்ற கருத்துக் கணிப்புகளும் அதிக அளவில் நடைபெறுகிறது.

இவை இல்லாமல் மக்கள் விமர்சனங்களை பதிவு செய்ய பல்வேறு மீடியாக்களும் நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் காத்துக் கிடக்கின்றனர்.

ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாட்டங்கள் வேற லெவலில் இருக்கும். இதனால் தியேட்டருக்கு அருகே உள்ள வசிப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் தவித்தும் வருகின்றனர்.

இந்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் வெளியானது.

இதில் ‘துணிவு’ படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ‘வாரிசு’ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு தான் முதல் காட்சி அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு படங்களும் ஒரே தியேட்டரில் வெளியாகும் போது பல இடங்களில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சில இடங்களில் காட்சிகளை திரையிட விடாமல் ரசிகர்கள் தியேட்டர்களை நாசம் செய்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை & நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் துவங்குகிறது. அதுபோல சிம்புவின் சகப் போட்டியாளராக கருதப்படும் தனுஷின் ‘நானே வருவேன்’ & ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களுக்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை.

தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒரு புதிய பாதையில் பயணிப்பதாக திரைப்பட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோர்களும் பின்பற்றுவார்களா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Simbu and Dhanush decision on FDFS fans show. Will top actors accept?

More Articles
Follows