தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.
இதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் பெற்றுக்கொண்டனர்.
vijay sethupathi donated a thousand books to madurai jail