தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.
அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.
இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.
அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கியது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விளக்கமே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குறவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வயது பிரச்சனை.?
இதே வயதுள்ள குழந்தைகளை மக்கள் அழைத்து வரவில்லையா.? அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Vijay Sethupathi and GV Prakash on Nari Kurava entry refused at Rohini Screens