நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. தியேட்டர் விளக்கம்.; ஜி வி பிரகாஷ் & விஜய் சேதுபதி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 30 ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ என்ற திரைப்படத்தை சென்னை ரோகினி தியேட்டரில் பார்க்க நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு சிம்பு ரசிகர் மன்றத்தினர் இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.

அந்த டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல முயன்ற போது தியேட்டர் நிர்வாகம் அவர்களை திருப்பி அனுப்பி உள்ளது.

இதனை கண்ட சில ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிடவே இது வைரலானது.

அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் சுதாரித்துக் கொண்ட தியேட்டர் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கியது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘பத்து தல’ படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விளக்கமே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது. நரிக்குறவர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் இந்த வயது பிரச்சனை.?

இதே வயதுள்ள குழந்தைகளை மக்கள் அழைத்து வரவில்லையா.? அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என பதிவிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் தியேட்டரில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi and GV Prakash on Nari Kurava entry refused at Rohini Screens

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஜித் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் தந்தை பாலக்காடு சுப்ரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

எனவே பல திரைக் கலைஞர்களும் அஜித்தின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

ரசிகர்களும் தங்களது ஆறுதல்களை இணையதளங்களை பதிவிட்டனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினும் அஜித்திற்கு ஆறுதல் இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்.

அதுபோல நடிகர் அஜித்தும் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Ajith wishes EPS on becoming AIADMK’s general secretary

கரகாட்டக்காரன் 2..: இளையராஜா – கங்கை அமரன் வாரிசுகள் கூட்டணி

கரகாட்டக்காரன் 2..: இளையராஜா – கங்கை அமரன் வாரிசுகள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1989 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன்.

இப்படத்தில் கனகா, கவுண்டமணி, செந்தில் சந்தான பாரதி, கோவை சரளா, வடிவுக்கரசி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்தார்கள்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்தப் படம் திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் ஓடி மகத்தான சாதனைப் படைத்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய கங்கை அமரனின் மகனும், இயக்குனருமான வெங்கட் பிரபு தான் இயக்கவுள்ளாராம்.

மேலும், இளையராஜாவுக்கு பதிலாக யுவன் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு

Venkat Prabhu plans to direct Karakattakaran 2 movie

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபுதேவாவின் ‘பஹீரா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான படம் ‘பஹீரா’.

இப்படத்தில் அமிரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி, சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 3-ம் அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தை OTT இல் வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், ‘பஹீரா’ படத்தை மார்ச் 31 முதல் பிரபலமான ‘சன் நெக்ஸ்ட்’ OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹீரா

Prabhu Deva’s ‘Bagheera’ to stream on OTT from March 31

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தள்ளிப் போகும் ‘ஜவான்’..; மீண்டும் விஜய்யுடன் இணையும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை, ‘ஜவான்’ அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படலாம் என்று பல தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ‘ஜவான்’ படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும், மே மாதம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவதுமாக தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நான்காவது முறையாக விஜய்யுடன் அட்லீ கைகோர்க்கவுள்ளதாகவும் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

ஜவான்

‘Jawan’ is all set to release on June 2

நான் ஒரு இரவு மனிதன்.; என்னை மாற்றியவர் அவர்தான்.; PS2 விழாவில் சிம்பு பேச்சு

நான் ஒரு இரவு மனிதன்.; என்னை மாற்றியவர் அவர்தான்.; PS2 விழாவில் சிம்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் சிம்பு கலந்து கொண்டனர்.

நடிகர் சிம்பு மேடையில் பேசும்போது..

“நான் ஒரு இரவு மனிதன். பெரும்பாலான என் பணிகளை இரவில் தான் கண் விழித்து செய்வேன்.

அப்படி இருந்த என்னை மாற்றியவர் மணிரத்னம். இப்பொழுது பகல் நேர முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். தற்போது அதிகாலையில் ஷூட்டிங் சென்று வருகிறேன்.

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ ஆர் ரகுமான் சிறந்த ஒரு இசையை கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

மேலும்.. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் உங்களை நடிக்க அழைத்திருந்தால் எந்த கேரக்டரை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் என கேட்டனர்?

அதற்கு மணிரத்னம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நான் செய்திருப்பேன்” என்று பேசினார் சிம்பு.

மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் அரவிந்தசாமி அருண் விஜய் விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்திருந்தார் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

simbu speech at Ponniyin Selvan 2 audio launch

More Articles
Follows