சினிமாவுக்கு விளம்பரம்; மக்களுக்கு சேவை… புது ரூட்டில் ஜிஎஸ்டி வண்டி

சினிமாவுக்கு விளம்பரம்; மக்களுக்கு சேவை… புது ரூட்டில் ஜிஎஸ்டி வண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Milton found new route for promoting his Goli Soda 2 movie by GST Vandiரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலிசோடா-2’.

‘கோலிசோடா’ படத்தின் 2வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா, ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இப்படத்தை இயக்க, டைரக்டர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜூன் 14ம் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் புதிய முயற்சி ஒன்றை செயல்படுத்தி உள்ளனர்.

இயக்குனர் விஜய் மில்டன் இதுகுறித்து கூறியதாவது…

‘இன்றைய காலகட்டத்தில் ஒரு பட வெளியீட்டிற்கு ஆகும் விளம்பர செலவு என்பது சராசரியாக கோடிகளில் கணக்கிடப்படுகிறது. இது வழக்கம்போல அனைத்து பட ரிலீஸுக்கும் இருக்கும் நடைமுறை.

நாங்கள் அதிலிருந்து சிறிது விலகி படத்தின் விளம்பர செலவின் ஒரு பகுதியை ஆக்கபூர்வமாகவும் மக்களுக்கு உபயோகமாகவும் செலவழிக்கும் மாற்று சிறுமுயற்சியே இந்த ஜிஎஸ்டி வண்டி.

இந்த வண்டி ஒவ்வொரு ஊராக சென்று 1000 பாக்கெட் பிரியாணி உணவு, மோர், இளநீர் ஆகியவற்றை தேவையானவர்களுக்கு கொடுப்போம்.

முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி மாநகரங்களை குறி வைத்துள்ளோம்.

இந்த வண்டி அந்த நகரங்களை சென்றைடைய போது அங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அங்கு தேவையானதை கொடுக்கவுள்ளோம்.’ என்றார்.

இது தொடர்பாக இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இவரைப் போல் மற்ற தயாரிப்பாளர்களும் முன்வந்தால் நல்லதுதானே…

Vijay Milton found new route for promoting his Goli Soda 2 movie by GST Vandi

gst vandi

ரஜினியை முந்தி தனுஷ்-கமலுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

ரஜினியை முந்தி தனுஷ்-கமலுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan got 5 million followers in Twitterநடிகர்களை ரசிகர்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் பெரும்பாலான நடிகர்களில் ட்விட்டர் தளத்தில் உள்ளனர்.

எனவே இவர்களை ட்விட்டரில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களில் அஜித், விக்ரம், விஜய்சேதுபதி ஆகியோர் ட்விட்டரில் இல்லை.

இதுவரை 70 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார் தனுஷ்.

இவருக்கு அடுத்த இடத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

தற்போது சிவகார்த்திகேயன் 3வது இடத்திற்கு வந்துள்ளார்.

உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் கூட இன்னும் 50 லட்சம் பாலோயர்களை தொடவில்லை. அவர் 4வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan got 5 million followers in Twitter

இழுத்தடிக்கும் இம்சை அரசன் வடிவேலு; குழப்பத்தில் ஷங்கர்-விஷால்

இழுத்தடிக்கும் இம்சை அரசன் வடிவேலு; குழப்பத்தில் ஷங்கர்-விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vadivelu demands extra 2 crores to act in Imsai Arasan 24m Pulikesiவடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர் ‌ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது.

இதன் இரண்டாம் பாகத்திற்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்கள்.

சூட்டிங் தொடங்கி ஒரு வாரத்திற்கு பிறகு சில பிரச்சினைகளால் வடிவேலு படத்தில் நடிக்க மறுத்தார்.

ஆடை வடிவமைப்பாளரிடம் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.

தயாரிப்பாளர் (டைரக்டர்) ஷங்கர் வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

ஆனால் வடிவேலு தொடர்ந்து மறுத்து வந்தார்.

பின்னர் மனம் இறங்கி வந்த வடிவேலு ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறினாராம்.

ஒருவேளை இதற்கு தயாரிப்பு தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் எனவும் கூறப்படுகிறது.

Vadivelu demands extra 2 crores to act in Imsai Arasan 24m Pulikesi

ஆர்.கே. நகர் படத்துக்காக யு/ஏ சர்ட்டிபிகேட் பெற்றார் வெங்கட் பிரபு

ஆர்.கே. நகர் படத்துக்காக யு/ஏ சர்ட்டிபிகேட் பெற்றார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabus RK Nagar movie censored UAதமிழகம் எத்தனையோ இடைத்தேர்தல்களை பார்த்திருந்தாலும் பலராலும் மறக்க முடியாத இடைத்தேர்தல் ஆர். கே. நகர் தொகுதிதான்.

தொகுதி மக்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா கொடுக்கப்பட்டதால் தேர்தலே ரத்தானது. பின்னர், தேர்தல் நடத்தப்பட்டது.

அங்கு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

எனவே பரபரப்பான அந்த தொகுதி பெயரை தான் தயாரிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்தார் வெங்கட் பிரபு.

ஆர். கே. நகர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார்.

வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கிறார்.

இப்படத்தை ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Venkat Prabus RK Nagar movie censored UA

Breaking: புதிய பொழிப்புரை எழுதிய தூத்துக்குடி; தமிழனாக பெருமை என கமல் ட்வீட்

Breaking: புதிய பொழிப்புரை எழுதிய தூத்துக்குடி; தமிழனாக பெருமை என கமல் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction to Tuticorin Sterlite factor closed Govt Orderதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி 100 நாட்களாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த மே மாதம் 22 நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இது தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அங்குள்ள மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள 4 ட்வீட்டுக்கள் இதோ…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு,மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும். (1/4)

தமிழகஅரசியலின் புதியபொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது.தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல்மாண்பை மீட்டெடுக்கவேண்டும்.அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை,புதிய பாடமாக கற்றுத்தந்துள்ளது இப்போராட்டம்.இக்கல்விகற்று,மக்கள் நீதி மய்யம் பள்ளியாய்மாறி வீதிதோறும் இச்செய்தியைபரப்பும்.

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத்துவங்கிவிட்டோம். (3/4)

சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.(4/4)

Kamal reaction to Tuticorin Sterlite factor closed Govt Order

Breaking: ஸ்டெர்லைட் ஸ்டாப்; உயிரிழந்தவர்களுக்கு வெற்றி சமர்ப்பணம் என ரஜினி வாய்ஸ்

Breaking: ஸ்டெர்லைட் ஸ்டாப்; உயிரிழந்தவர்களுக்கு வெற்றி சமர்ப்பணம் என ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth voice reaction to Tuticorin Sterlite factory closedதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி 100 நாட்களாக பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த மே மாதம் 22 நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இது தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கிட்டதட்ட 5 நாட்களுக்கு பின்னர், அங்கு இயல்பு நிலை திரும்பிய பின்னர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து இன்று ஆறுதல் கூறினார்.

அங்குள்ள மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வாய்ஸ் ஆடியோ பதிவிட்டுள்ளார்.
அதில்… ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என பேசியுள்ளார்.

இதே சமயத்தில்தான் ரஜினியின் காலா பட ட்ரைலரும் இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth voice reaction to Tuticorin Sterlite factory closed

More Articles
Follows