தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
விரைவில் இதன் படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு பறக்கவுள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது.
மேலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இது தளபதியின் வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay met his fans and took photos with them