234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

234 தொகுதிகளையும் ஒரே நேரத்தில் குறி வைக்கும் விஜய்.; மே 28ல் தளபதி விருந்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் பிசியான நடிகராக இருந்தாலும் தன்னுடைய அரசியல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் விஜய்.

விரைவில் தமிழக முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 1500 மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் வருகிற மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு்தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இலவச மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Makkal Iyakkam provide food to poor people

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

பிச்சைக்காரர்களுடன் செல்ஃபி எடுத்த விஜய் ஆண்டனி.. நெட்டிசன்கள் பாராட்டு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் ஜோடியாக நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் மே 19ஆம் தேதி திரைக்கு வந்தது. நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் திடமான வருவாயைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் விஜய் ஆண்டனி புரமோஷன் நிகழ்ச்சிக்கு திருமலை சென்றார். அங்கு பிச்சைக்காரர்களுடன் விஜய் ஆண்டனி எடுத்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெலுங்கில் இப்படம் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றி பெற்று, வாங்குபவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Pichaikkaran 2: Vijay Antony takes a selfie with beggars

விடாமுயற்சியில் அஜீத்துடன் 4 வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை

விடாமுயற்சியில் அஜீத்துடன் 4 வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் எவர்கிரீன் நடிகையான த்ரிஷா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு அஜீத்தும் த்ரிஷாவும் நான்காவது முறையாக இணையும் படம் இது.

அவர்களின் குறைபாடற்ற ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவர்களை கோலிவுட்டின் ஹாட் ஜோடிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

த்ரிஷாவைத் தவிர மற்ற நடிகர்கள் யார் என்பது ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தெரியவரும்.

Ajith to romance evergreen actress for the fourth time in ‘Vidaamuyarchi’?

வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

வாணி ராணி சீரியல் இயக்குனரின் மனைவி தற்கொலை. என்ன காரணம் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியல்களை இயக்கியவர் ஓ.என்.ரத்னம்.

ரத்னத்தின் மனைவி பிரியா திடீரென தூக்குப்போட்டு இறந்தது தொலைக்காட்சி துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. . இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று திரும்பி வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்னம் அவர்களை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வருவதற்காக காலையில் சென்றிருந்தார், அவர் திரும்பி வரும்போது ப்ரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Famous Tamil serial director’s wife dies by suicide

ரகுமான் பாடலை பாடி பிறந்த நாளை கொண்டாடிய ஆதரவற்றோர் ரசிகைகள்

ரகுமான் பாடலை பாடி பிறந்த நாளை கொண்டாடிய ஆதரவற்றோர் ரசிகைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான்.

இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது.

அதிலும் பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரகுமான் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

குறிப்பாக 1990களில் அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவரது திரையுலக பயணம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த மதுராந்தகர் இவரது கதாபாத்திரமும் கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படம் முடிவதும் தமிழ் சினிமாவில் இப்போதும் நடிகர் ரகுமானுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றுவது போல அமைந்துவிட்டது.

நடிகர் ரகுமான் தற்போது தனது 55வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். பொதுவாகவே மலையாள திரையுலகில் நடிகர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் ரகுமானின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சற்றே வித்தியாசமான முறையில் பிறருக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.

கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

நடிகர் ரகுமானின் பிறந்தநாள் என்றதுமே அங்கிருந்த பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர் நடித்த படங்களின் பாடல்களை பாடி அவருக்கு எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தினார்கள்.

அதில் ஒரு முதிய பெண்மணி அங்கிருந்த ரசிகர் மன்ற தலைவரிடம் தான் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைக்க, உடனடியாக இந்த தகவல் நடிகர் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நிமிடமே வீடியோ காலில் வந்த ரகுமான் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் பேசி நலம் விசாரித்தார். அனைவரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இன்னொரு பெண்மணி ரகுமானின் பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என விரும்ப தனது வீட்டில் அடுத்த அறையில் இருந்த குழந்தையை தூக்கி வந்து வீடியோ காலில் காட்டி அந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றினார் ரகுமான்.

இதேபோல கேரளாவில் பல இடங்களில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் பலருக்கும் பலவிதமான சமூக உதவிகளை செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

Fans celebrated his birthday by singing Rahman song

ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கத்தில் சூர்யா.; முழு தகவல்கள் இதோ..

ரஹ்மான் இசையில் தனுஷ் இயக்கத்தில் சூர்யா.; முழு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் தனுஷ்.

மேலும் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை காட்டி வருகிறார்.

இத்துடன் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய சினிமா பயணத்தில் 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க தனுஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதால் விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

Dhanush and AR Rahman joins for a new film

More Articles
Follows