இந்திய தலைநகரில் தனிமையில் நடந்து சென்ற தளபதி விஜய்

இந்திய தலைநகரில் தனிமையில் நடந்து சென்ற தளபதி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்கி வருகிறார் நெல்சன்

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது.

அதன்பின்னர் சென்னையில் நடைபெற்று தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த சூட்டிங்கில் கலந்துக் கொள்வதற்காக விஜய் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். விமான நிலையத்திற்குள் விஜய் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் மாஸ்க் அணிந்தபடி நடந்து செல்கிறார் விஜய். அந்த வீடியோவும் படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் அருகில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் உள்ளது போல உள்ளது. மேலும் அங்கே அவ்வளவு கூட்டமும் இல்லை.

Vijay goes shopping at a mall in Delhi. Fan spots him and takes a video

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு.; SPB நினைவுநாளில் கமல் உருக்கம்.

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு.; SPB நினைவுநாளில் கமல் உருக்கம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

15க்கும் மேற்பட்ட மொழிகளில் 45000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

மேலும் சென்னை 28, உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்றோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த மண்ணை விட்டு மறைந்து ஓராண்டு நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு நடிகர்கள், நடிகைகள் எஸ்.பி.பி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

மலையாள நடிகர்கள் மம்மூட்டி மோகன்லால் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் எஸ்பிபி பற்றி நினைவு கூர்ந்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில்.. ‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார்.

சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று பதிவு செய்துள்ளார்.

Kamal Haasan remembers SPB on his death anniversary

ரஜினி இடத்தில் வடிவேலுவை வைக்கும் கோலிவுட்.; ரூட் போட்ட சதீஷ் & யோகிபாபு

ரஜினி இடத்தில் வடிவேலுவை வைக்கும் கோலிவுட்.; ரூட் போட்ட சதீஷ் & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை 167க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அண்ணாத்த அவரின் 168 படமாக உருவாகியுள்ளது.

இதில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினியின் படங்களில் அவரது கேரக்டர் பெயரே படத் தலைப்பாக இருக்கும்.

பில்லா, ரங்கா, அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா, முத்து, சிவா, வீரா, படையப்பா, பாபா, லிங்கா, கபாலி, காலா, பேட்ட என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இறுதியாக வந்த தர்பார் படத்தில் அவரது கேரக்டர் பெயர் தலைப்பாக இடம் பெறவில்லை.

இதில் பல தலைப்புகளை அண்மைக்காலமாக பல படங்களுக்கு தயாரிப்பாளர்கள் வைத்து வருகின்றனர்.

வீரா, ரங்கா, தீ, தர்மத்தின் தலைவன், போக்கிரி ராஜா, முரட்டுக்காளை, ராஜாதி ராஜா என பல தலைப்புகளை வைத்துவிட்டனர்.

தற்போது ரஜினி வரிசையில் வடிவேலுவின் கேரக்டர்கள் பெயரை வைப்பது ஆரம்பமாகியுள்ளது.

தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் வடிவேலு. அந்த கேரக்டர் பெயரை தன் படத்திற்கு வைத்துள்ளார் நடிகர் சதீஷ்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் வடிவேலு. இந்த கேரக்டர் பெயரை தன் படத்திற்கு வைத்துள்ளார் யோகிபாபு.

எனவே வண்டு முருகன், சினேக் பாபு, கைப்புள்ள என வடிவேலுவின் சூப்பர் ஹிட் கேரக்டர் பெயர்களை இனி தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Famous vadivelu characters become movie titles in Kollywood

திருட்டு மாமா-வாக மாறிய ‘பேய் மாமா’; திறமையானவர்களுக்கு வேலை கொடுக்கலாமே மாமா

திருட்டு மாமா-வாக மாறிய ‘பேய் மாமா’; திறமையானவர்களுக்கு வேலை கொடுக்கலாமே மாமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், ரேகா, எம்எஸ் பாஸ்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து நேற்று செப்டம்பர் 24ல் தியேட்டர்களில் வெளியான திரைப்படம் “பேய்மாமா”.

இந்த படத்தின் விமர்சனத்தை நம் தளத்தில் பார்த்தோம்.

ஏதோ படம் எடுக்க வேண்டும் தயாரிப்பாளரை காலி செய்ய வேண்டும். ரசிகர்களை நோககடிக்க வேண்டும் என்பதே இயக்குனரின் எண்ணமாக இருந்து இருக்குமோ என்ற கவலையே தற்போது எழுந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இப்பட போஸ்டர்களையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இப்படக்குழுவினர் வெளியிடும் போஸ்டர்கள் ஹிட்டான பாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காப்பியாக உள்ளது…

எனவே ஒரிஜினல் போஸ்டர்களையும் காப்பி போஸ்டரையும் சேர்த்து போஸ்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கதை தான் காப்பி என்றால் போஸ்டரை கூட விட்டு வைக்கவில்லையே இவர்கள். திறமையிருந்தும் வேலையில்லாமல் எத்தனை இளைஞர்கள் டிசைனர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுத்தால் புதிய ஐடியாவுடன் புதிய போஸ்டரும் கிடைக்குமே பேய் மாமா…

Netizens troll Tamil movie ‘Pei Mama’ for copying Bollywood posters

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க வரிந்துக் கட்டி வரும் ஜோடி பரத்-வாணி போஜன்

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க வரிந்துக் கட்டி வரும் ஜோடி பரத்-வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளார் G.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றதை தொடர்ந்து, இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது…

எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளது.

மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்ச்சிகரமானதாக இருந்தது.

பரத், வாணி போஜன், இயக்குநர் K.S.ரவிக்குமார் ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள்.

இயக்குநர் M.சக்திவேல் அவர்கள் இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநராக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்குநராக விரைவில் மாறுவார்.

இயக்குநராக அவரது திறமையை தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத்திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப்பானது என்றார்.

மேலும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அதைத்தொடர்ந்து டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, K.S.ரவிக்குமார், ராஜ்குமார், காவ்யா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ் அவர்களின் உதவியாளர் S. சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். R.கலை வாணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். SB மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார்.

இத்திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் M.சக்திவேல் கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

ரசிகர்களை தியேட்டர் சீட் நுனியில் வைத்திருக்கும் பரபர த்ரில்லர் வகைப்படமாக இப்படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

Bharath and Vani bhojan joins for a thriller film

ரஜினி-கமல் ரசிகர்களின் ட்ரீம் ஹீரோயினை மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் ட்ரீம் வாரியர்ஸ்

ரஜினி-கமல் ரசிகர்களின் ட்ரீம் ஹீரோயினை மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் ட்ரீம் வாரியர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‛எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் ஷர்வானந்த்.

இந்தப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி, அங்கே தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛கணம்’ படத்தின் மூலம், மீண்டும் தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ளார் ஷர்வானந்த்.

இவருக்கு ஜோடியாக ரீது வர்மா நடிக்கிறார்.

இப்படத்தில், 80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகை அமலாவும் இப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

1980களில் அப்போது ரஜினி கமல் பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அமலா. பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.

துருவங்கள் 16, மாஃபியா படங்களில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இந்தப்படத்திலும் கூட்டாக பணிபுரிகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

ஆர்ட்: என்.சதீஷ்குமார்
ஸ்டண்ட்:சுதேஷ்குமார்
பாடல்கள்:மதன் கார்க்கி,உமாதேவி,கேபர் வாசுகி
PRO:ஜான்சன்
நிர்வாக தயாரிப்பு:அரவிந்த்ராஜ் பாஸ்கரன்
தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரிப்பு:S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு.

Top actress returns to Tamil cinema after 2 decades

More Articles
Follows