தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 9 நாட்களாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களை வீட்டிலேயே அடங்கி கிடக்க அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல கூட மக்கள் யோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் 250 குடும்பங்களுக்கு தேவையான காய்கறிகளை வழங்கியுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து வடசென்னை விஜய் ரசிகர்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பால் பாக்கெட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
பால் இல்லாமல் கஷ்டப்பட்ட குழந்தைகளுக்கு விஜய் ரசிகர்கள் உதவி பேருதவியாக உள்ளது என அங்குள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijay fans helping poor those who suffer in Corona lock down